ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

5 posters

Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by சாமி Mon Sep 17, 2012 9:01 pm

புது தில்லி, செப். 16: ""தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துச் செல்வது அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டின் செய்தியாக இருக்க வேண்டும்'' என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

"தினமணி' இதழும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய நிறைவுரை:

இன்று குழந்தைகள் ஆங்கிலப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைப் படிக்காதே என்று சொல்ல முடியாது. சில போக்குகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அந்தக் குழந்தைகள் தமது தாய் மொழியை மறந்துவிடாமல் இருக்கச் செய்வதற்கு இலக்கிய அமைப்புகளால் மட்டுமே முடியும்.

ஆகவே, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இலக்கிய அமைப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும். அதில் உறுப்பினர்களைச் சேருங்கள். அவர்களிடம் ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும் வாங்கிக்கொள்ளும். நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம் என்று. வீடுகளில் குழந்தைகளிடம் தமிழில் பேசுங்கள். குழந்தைகள் "டாடி, மம்மி' என்று அழைத்தால் அதற்காக வெட்கப்படுங்கள், அவமானப்படுங்கள். "நாங்கள் தமிழில் பேசுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் படிக்கட்டும். அதற்கு ஆதரவு கொடுங்கள் ஆனால், வீட்டில் பேசும்போது தமிழில்தான் பேசச் சொல்லுங்கள்.

உலகில் ஒரே ஒரு மொழியில்தான் சிறிய தந்தையை சிற்றப்பா என்றும், பெரிய தந்தையை பெரியப்பா என்றும், மாமா, அத்தை என்று அழைக்கின்ற வழக்கம் தமிழில் மட்டும்தான் உள்ளது. இப்போது யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்றும், அங்கிள் என்றும் அழைப்பது எத்தனை கேவலம்? யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்று சொன்னால் எப்படி நாம் என்ன ஆண்டிகளா?
அருமையான மொழியை நாம் கையில் வைத்திருக்கிறோம். அதை மறந்துவிடக்கூடாது. இந்த மாநாட்டை கூடிக் கலைகிறோம் என்று யாராவது நினைத்தால் தவறு. கூட்டம் கூட்டிக் கலைகிறோம் என்று நினைத்தால் தவறு, கூடி மகிழ்கிறோம் என்று சொன்னால்தான் அது உண்மை. இந்தக் கூட்டம் எடுத்துச் செல்கிற சேதியானது என்னவாக இருக்கும் என்றால், இனி எங்கள் வீட்டில் குழந்தைகள் தமிழில் பேசுவார்கள்.

எங்கள் வாரிசுகள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது செய்தியாக இருக்கும். மற்றொரு செய்தி என்னவாக இருக்குமென்றால், அமைப்பு ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்பதாக இருக்கும். தமிழன் எங்குவேண்டுமானாலும் இருக்கட்டும். அங்கெல்லாம் இலக்கிய அமைப்புகள் தோன்ற வேண்டும்.
வள்ளுவனும், அவ்வைப் பிராட்டியும் அங்கு இல்லாமல் ஒரு தமிழ்க் குடும்பம் இருக்கக் கூடாது. வீட்டுக்கு வீடு ஒரு திருக்குறள் நூல் இருக்கட்டும். உங்கள் குழந்தைகள் ஆத்திசூடி படிக்காத குழந்தைகள் இருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.

குழந்தைகள் வீட்டில் நிச்சயமாகத் தமிழ் பேச வேண்டும். ஆகவே, தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் இந்த முழக்கத்தை தமிழகத்தின், உலகின் எல்லா வீதிகளிலும், தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு பயன்படுமேயானால் மட்டும்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமானதாக என் மனம் கருதும்.

எங்கெல்லாம் இலக்கிய விழா எடுகிறீர்களோ, அங்கெல்லாம் "தினமணி' ஆசிரியர் என்ற முறையில் கடினமான பணிகளையும் பொருட்படுத்தாமல் செல்கிறேன். தினமணி ஆசிரியர் செல்வதால் தமிழ் எழுச்சி பெறுமானால் அந்த இலக்கிய அமைப்புகள் வளம் பெறுமேயானால் அதைவிட பெரு மகிழ்ச்சி எதுவும் எனக்கு இருக்க முடியாது என்றார் அவர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty Re: "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by யினியவன் Mon Sep 17, 2012 10:39 pm

வீட்டில் தமிழ் பேசுங்கள் என சொல்லும் அளவுக்கு
தமிழை மறந்த தமிழர்களா ஆயிட்டமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty Re: "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by balakarthik Tue Sep 25, 2012 3:06 pm

குழந்தைகள் வீட்டில் நிச்சயமாகத் தமிழ் பேச வேண்டும். ஆகவே, தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் இந்த முழக்கத்தை தமிழகத்தின், உலகின் எல்லா வீதிகளிலும், தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு பயன்படுமேயானால் மட்டும்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமானதாக என் மனம் கருதும்.
பேச்சு பேச்சளவிலே இல்லாமல் அனைவரும் கடைபிடித்தால் நலம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty Re: "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 6:16 pm

நான் நாக்பூரில் இருந்தபோது எனது மகளை 1 முதல் 5 வகுப்புவரை அங்குள்ள தமிழ்ப் பள்ளியில் (சரஸ்வதி வித்யாலயா) சேர்த்தது படிக்க வைத்தேன். அதனால் அவள் தமிழை நன்றாக வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டாள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty Re: "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by nankut Tue Sep 25, 2012 11:45 pm

சூப்பருங்க
nankut
nankut
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Back to top Go down

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' Empty Re: "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க
» குழந்தைகள் பொய் பேசும் பொழுது
» தமிழ் பேசும் சீன வானொலி!
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு
» பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் : கனேடிய ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum