Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
3 posters
Page 1 of 1
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.
தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.
கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.
கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.
அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.
அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.
இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.
உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.
கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!
தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !
நன்றி இணையதளம்
கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.
தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.
கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.
கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.
அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.
அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.
இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.
உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.
கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!
தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !
நன்றி இணையதளம்
கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.
நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன்.
நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
நான் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன் பகிர்வுக்கு நன்றி தம்பி...
கடைசியில் நீங்க சொன்ன கருத்து
கடைசியில் நீங்க சொன்ன கருத்து
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» கழுதையின் மரணம்!
» கழுதையின் வாழ்வு!
» கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை
» பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள்
» முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
» கழுதையின் வாழ்வு!
» கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக் கதை
» பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள்
» முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|