Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தேவகானம் .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 120
கவிக்கோ என்றாலே பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக் கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர். கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் .
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .
உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படைத்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !
சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில் கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .
பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு கவிதை இதோ !
என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ டுப்பது
உனது கடமை அல்லவோ ?
கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்சலிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .
மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .
ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம் அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.
முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும் பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும் பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த னன்என் ஈசனே !
நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .
ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .
மனிதன் தன்னை மீட்கஅம்
மகேசன் தோன்று வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக தைகள் கேட்டனன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான பணியெனப்
புகலு வேஎன் தோழரே !
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை .
முந்து வானம் காற்று நீ
மூண்ட நீரும் பூமியும்
உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன
இந்து முஸ்லிம் கிறித்து யூதன்
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும் ஏன் ?
இந்து முஸ்லிம் என்கின்றார் .
எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .
தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா உனக்கென
ஈங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்குக்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் !
நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .
நாள்களும் கோள்களும்
நாய கன்கைப் பந்துகள்
நாள்களும் கோள்களும்
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும்
நமை யலைப்ப தில்லையே
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள் வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம் கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால் நிருபித்து உள்ளார் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 120
கவிக்கோ என்றாலே பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக் கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர். கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் .
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .
உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படைத்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !
சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில் கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .
பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு கவிதை இதோ !
என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ டுப்பது
உனது கடமை அல்லவோ ?
கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்சலிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .
மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .
ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம் அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.
முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும் பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும் பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த னன்என் ஈசனே !
நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .
ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .
மனிதன் தன்னை மீட்கஅம்
மகேசன் தோன்று வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக தைகள் கேட்டனன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான பணியெனப்
புகலு வேஎன் தோழரே !
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை .
முந்து வானம் காற்று நீ
மூண்ட நீரும் பூமியும்
உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன
இந்து முஸ்லிம் கிறித்து யூதன்
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும் ஏன் ?
இந்து முஸ்லிம் என்கின்றார் .
எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .
தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா உனக்கென
ஈங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்குக்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் !
நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .
நாள்களும் கோள்களும்
நாய கன்கைப் பந்துகள்
நாள்களும் கோள்களும்
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும்
நமை யலைப்ப தில்லையே
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள் வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம் கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால் நிருபித்து உள்ளார் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Guest- Guest
Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பித்தன் ! நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|