ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது

Go down

வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது Empty வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது

Post by சிவா Fri Aug 17, 2012 11:19 am

பெங்களூரு: "கர்நாடகாவில் தங்கியுள்ள, ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் மீது, தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என்ற வதந்தி பரவியதால், ஏராளமானோர் பெங்களூருவில் இருந்தும், அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், தங்கள் மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். இந்த வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியதால், அங்குள்ள வட மாநிலத்தவர் மத்தியிலும் பீதி உருவானது. அசாம் மாநிலத்தில் நடந்து வரும் இனக் கலவரத்தைக் கண்டித்து, மும்பையில் நடந்த போராட்டத்தில், இருவர் கொல்லப்பட்டனர். புனேயில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, 10 மாணவர்கள் தாக்கப்பட்டனர். இம்மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள். சிலர் ஐ.டி., நிறுவனங்களிலும், சிலர் கட்டுமான நிறுவனங்களிலும் பணி செய்கின்றனர். இவர்கள் மீது தாக்குதல் நடக்கலாமென்ற வதந்தி காரணமாக, புதன் கிழமை மாலையில் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் அவசரம் அவசரமாக சொந்த மாநிலம் செல்ல, பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.

வழக்கமாக புதன் கிழமையன்று, இரவு, 11.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு - கவுகாத்தி ரயில் முழுவதுமாக நிரம்பி விட்டதால், மேற்கொண்டு டிக்கெட் வழங்க ரயில்வே நிர்வாகம் மறுத்தது. கூட்டத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் பின்னர் ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், தகவலறிந்து பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷன் வந்த துணை முதல்வர் அசோக், வடகிழக்கு மாநிலத்தினரை சந்தித்து, "தேவையான பாதுகாப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள வீட்டு உரிமையாளர்கள் தான், எங்களை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர்; சில சமூக விரோதிகளும் மிரட்டுகின்றனர் என்று அவர்கள் புகார் கூறினர். இவர்களில் பெரும்பாலானோர் பெங்களூருவில் கோரமங்களா, நீலச்சந்திரா, ஈஜிபுரா போன்ற பகுதிகளிலும், சுற்றுப்புறங்களிலும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரடியாக போன் மூலம் தொடர்பு கொண்டு பேசும் போது, "கர்நாடகாவில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தினர் உயிருக்கும்,

உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். கர்நாடகா போலீஸ் துறையும் பூரணபாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், சிறப்பு ரயில்கள் மூலம் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருந்தனர். நேற்று காலையிலிருந்து பெங்களூருவில் வசிக்கும் பல அசாம் மாநிலத்தினர், மூடை முடிச்சுகளுடன் பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு படையெடுத்தனர். பகலில், அசாமுக்கு ரயில் இல்லாததால், ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், ரயில்வே ஸ்டேஷன் வந்து அசாம் பயணிகளை சந்தித்து, "யாரும் பெங்களூருவை விட்டு வெளியேற வேண்டாம்; தேவையான பாதுகாப்பை அரசு கொடுக்கும்' என்றார். ஆனாலும், அசாம் பயணிகள் கேட்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர், கன்னட அமைப்பினர் பலர், ரயில்வே ஸ்டேஷன் வந்து பயணிகளை சமாதானப்படுத்தி, பெங்களூருவை விட்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அசோக், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: பெங்களூருவில் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கின்றனர். இதுவரை யாருக்கும் பிரச்னை ஏற்பட்டதில்லை. அசாம், மணிப்பூர் மாநிலத்தினர் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

போன், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் அவர்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும் அசாம், மணிப்பூர் மாநிலத்தவர் பயப்படத் தேவையில்லை. தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். தவறான தகவல் கொடுத்தவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பல்வேறு மதத் தலைவர்கள், வட மாநிலத்தவருடன், கர்நாடக போலீஸ் டி.ஐ.ஜி., தன் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு மாநிலத்தவர், பெங்களூருவை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்குள்ளாகவே எழும் மோதல்களைத் தவிர, பிற இனத்தவர்களால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். "வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படலாம்' என்ற வதந்தி, நேற்று ஆந்திராவின் ஐதராபாத்திற்கும் பரவியது. அதேநேரத்தில், தமிழகத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், இங்கு அது போன்ற பீதி எதுவும் பரவவில்லை.

தினமலர்


வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது Empty Re: வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது

Post by Guest Fri Aug 17, 2012 2:58 pm

யாருதான் இதே எல்லாம் பரபுரங்கனு தெரிலையே
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது
» காடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்
» பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா... அதிமுக கொடி கட்டிய காரில் பயணம்
» மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்
»  11 மாநிலங்களில் பரவியது ஒமிக்ரான்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum