ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 9:46 am

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார் கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்பு வனம், மானாமதுரை உள்பட பல இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியை பெனட் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை வசந்தி, மாணவி பின்சி, ஆகியோர் பேசினர், சிவகங்கை பார்வையற்றோர் பள்ளியில் தங்கமணி தலைமையில் லயன்ஸ் சங்க தலைவர் ரத்தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

ஒக்கூர் சோமசுந்தரம் செட்டி யார் தொடக்க பள்ளியில் பள்ளிகுழு தலைவர் ராமநாதன் செட்டியார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, ஆசிரியைகள் சித்ரா, வள்ளியம்மாள், அண்ணமரியாள், ஆனந்தி லதா, குணவதி ஆசிரியர் ஜான்பிரிட்டோ, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா கணேஷ் தலைமையில் தாசில்தார் பிரேம்குமார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். ஜெயலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை வசந்தம் உண்டு உறைவிடப்பள்ளியில் தாளாளர் அருண்கணேசன் தலைமையில் தொழிலதிபர் முகமதுரபிக் தேசியகொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை தாமரைசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறவமங்கலம் அரிபாலா தொடக்க பள்ளியில் தாளாளர் சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளியில் என்ஜினியரிங் கல்லூரி டீன் மாதவன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை லூர்துமேரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஜெசிந்தா, ஜாக்குலின் பிரிட்டோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாம் பவிகா மேல்நிலைப்பள்ளி யில் அறக்கட்டளை தலைவர் சேகர் தேசியகொடியை ஏற்றி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கணேஷ், ஆசிரியர் கள் செந்தில், காந்தன், தடியப்பன், கார்த்திக், மணி, ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறி னார்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 9:48 am


காளையார்கோவில்


காளையார்கோவில் புனித மைக்கேல் என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின் ஆராக்கியராஜ் முன்னலையில் கல்லூரி முதல்வர் கோபிநாத் தேசியகொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் முதன்மை செயல்அதிகாரி நிர்மலாஸ்டாலின், ஒருங் கிணைப்பாளர் கண்ணன், பேராசிரியை கற்பகம் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் அதன் தலைவர் ஆரோக்கியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆணையாள் புகழேந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிந்திரன், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். காளையார்கோவில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சூசையப்பர்பட்டிணம் சகாய ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை மறை மாவட்ட குடும்ப வாழ்வு பணிக்குழு செயலாளர் பாதியார் சிங்கராயர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை எலிசபெத்ராணி, தாளாளர் சொசைட்டா, உதவி தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் கிளாடிஸ், உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் சோமசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்க அமைப்பாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான கேப்டன் அருள்ராஜ், சங்க செயலாளர் ஜோசப் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி(கிழக்கு) அதன் தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் முன்னிலையில் நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெயராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் குணஹாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரிய கிளுவச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப்ரோஸ் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பளுவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தர்மநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் விமல் ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை ஜோஸ்பின்லூயிஷா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காளிஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சானாவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியை ஞானசவுந்திரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை மேனகா உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் தனுஷ் கோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஆசிரியர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலுக்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவி பிரேமா ஜான்கென்னடி தேசிய கொடியேற்றி வைத் தார். விழாவில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) பத்மினி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் வெள்ளைச்சாமி, ஆசிரியர் ஜேம்ஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் தேசியகொடியை ஏற்றினார். சூசையப்பர்பட்டி ணம் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அன்புநாதன் தேசிய கொடியை ஏற்றினார். தாளாளர் எட்வின்ராயன், தலைமை ஆசிரியர் ஜோசப் செல்வராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெடுஞ் குளம் ஆர்.சி. தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணிக்கம் தேசிய கொடியை ஏற்றினார். புலியடிதம்மம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மரக்காத்தூர் அரசு நடு நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் தில்லையப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜ், ஆசிரியர் பெஞ்சமின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேல மருங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடிதனசேகரன் தேசியகொடியை ஏற்றினார்.

செவல் கண்மாய் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யத்துரை கொடியேற்றி னார்.

அய்யனார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்அந்தோணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் நிர்வாக குழு தலைவர் கஸ்பார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் முத்து குமரன், ஒன்றிய தலைவர் பழனிக்குமார், மாநில இணைச்செயலாளர் குழந்தைதாஸ், பொருளாளர் வெல்டிங் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 9:50 am

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனில் தலைவர் பாக்கிய லெட்சுமி அழகுமலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் துணைதலைவர் புவனேந்தி ரன், கவுன்சிலர்கள் கிருஷ் ணன், இளங்கோவன், மாணிக்கம், முத்துப்பேச்சி, கற்பகலெட்சுமி, சேதுராமன், பாலகிருஷ்ணன், மணி மேகலை, கண்ணன், யூனியன் ஆணையாளர்கள் சேதுக்கரசி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்புவனம் பேரூராட்சியில் யூனியன் தலைவர் வசந்தி சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் லோகநாதன், கணேசன், சேகர், மாரிதாஸ், தென்னரசு, முத்துக்குமார், பாரிஷாபேகம், பால கிருஷ்ணன், பழனிவேல் ராஜன், சங்கர், மலையம்மாள், திருப்பதி, செயல்அலுவலர் மங்களேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மடப் புரம் பத்திரகாளியம்மன் கோவில், அடைக்கலம் காத்த அய்யனார்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி தனபால், தாசில்தார் கலைவாணி, யூனியன் தலைவர் பாக்கிய லெட்சுமி அழகுமலை, ஒன்றிய செயலாளர் கணேசன், அரசு வக்கீல் அழகுமலை, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மஞ்சள்குடி சந்திரன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் காந்தி, நகர் செயலாளர் சேகர், சண்முகம், காந்தி, மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரராஜன், வருவாய் ஆய்வாளர் முபாரக், கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் கோவில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:03 am

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் சொ.வாசு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் ஆணையாளர் பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லத்துரை, துணை சேர்மன் காந்திமதி தமிழரசு, கவுன்சிலர்கள் கண்ணகி சிதம்பரம், நல்லையா, சங்கவை சுவேந்திரன், சேக்கி முத்தன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜமணிக்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஆணை யாளர் சையது முகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதாம்பாள், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அலமேலு, நல்லகாளை, சைராபானு, அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி பேரூராட்சி யில் அதன் தலைவர் லெட்சுமி பிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் செயல் அலுவலர் சஞ்சீவி துணைத்தலைவர் நித்யா, கவுன்சிலர்கள் குணசேகரன், திருமாறன், பாலாஜி, சதீஸ் குமார், ராஜா, ரேவதி உள் பட்ட பலர் கலந்து கொண்ட னர்.

மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் காளாப்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் சண்முகவேலு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் எஸ்.வி.மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் காந்திதாஸ், கல்லூரி தலைவர் சீனிவாசன், துணை தலைவர் காசிராஜன், முதல்வர் கோபி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேவுகப்பெருமாள் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூர் தாசில்தார் அமிர்தலிங்கம், துணை தாசில்தார் கயல்விழி, வருவாய் ஆய்வாளர் தன்னாசி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புழுதிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத்தலை வர் பீர்முகமது தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் உதவி ஆசிரியர்கள் ராஜேஸ்குமார்,ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

எஸ்.புதூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத் தில் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரெங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உதவியாளர்கள் ராஜா சிதம்பரம், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

திருக்களாப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசம், நீலகண்டன், சித்ரா, சின்னையா, ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, பகுசியா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காண்டீபம் தொண்டு நிறுவனத்தில் அதன் இயக்குனர் ரமணி தேசியக்கொடியை ஏற்றிவைத் தார்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:04 am


காரைக்குடி


காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் ராஜராஜன் கல்வி குழுமங்களின் சார்பில் அழகப்பா ஆட்சிக்குழு உறுப் பினர் மாணிக்கவாசகம் தேசியகொடியை ஏற்றி வைத் தார். விழாவில் கல்லூரியின் முதல்வர் நலங்கிள்ளி, மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஹெர்பர்ட்பாஸ்கர், மற்றும் என்ஜினிரியங் கல்லூரியின் துணை முதல்வர் ஹயாசிந்த்சுகந்தி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராமன், அழகப்பா பல்கலைகழக கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் வசந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி அருகே உள்ள மவுண்ட் சீயோன் என்ஜினிரியங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் கல்லூரி இயக்குநர் ஜெய்சன் பரதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கல்லூரி முதல்வர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அழகப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் அடைக்கலசாமி, துணைத்தலைவர் அந்தோணி சாமி, செயலாளர் ஞான அருள்ராஜ், இணைச்செயலா ளர் கிருபாகரன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், உதவி மின்பொறியாளர் சத்தியசீலன், ஆங்கிலத்துறை விரிவுரை யாளர்கள் குணசேகரன், ஆரோக்கியசெல்வி, மின்னி யல் துறை முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தளக்காவூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தளக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், கல்லல் ஒன்றிய ஆணையாளர் ரகுவீரபாண்டியன், ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தளக்காவூர் ஆறுமுகம், பாலு செல்லம்பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி வ.உ.சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கவுன் சிலர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை பியூலா செல்வராணி, ஆசிரியைகள் புவனேஸ்வரி, கற்பகம், ஹேமா, ரம்யா, உமாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:04 am


தேவகோட்டை


தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் கே.ஆர்.சுமித்ரா ரவிக்குமார் தேசியகொடியை ஏற்றி வைத்தார். விழாவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராஜ், உள்பட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
மருத வயல் தொடக்கபள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜேசுதாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, உதவி ஆசிரியர் மணிமாறன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்கண்டன்பட்டி பள்ளி யில் கிராம கல்வி குழுதலைவர் ராமு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை பாத்திமாமேரி, உதவி ஆசிரியை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

தேவகோட்டை 9வது வார்டு நகராட்சி பள்ளியில் கவுன்சிலர் செய்யதுராதியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை காந்தி, இடைநிலை ஆசிரியை ராஜலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

தேவகோட்டை யாதவா மழலையர் தொடக்க பள்ளி யில் முத்து தேசிய கொடியை ஏற்றினார். யாதவா சங்க கல்வி அறக்கட்டளை சங்க செயலாளர் கோட்டை, பொருளாளர் கருப்பசாமி, இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேவகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தியாகிகள் பூங்காவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜான்சி ராணி தேசிய கொடி ஏற்றினார். மாவட்ட துணை தலைவர் மீராஉசேன், துரை கருணாநிதி, பூமிநாதன், நஜீமுதின், கீரணி பாலு மாநில பேச்சாளர் அப்பச்சிசபாபதி, தனுஷ்கோடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புளியா லில் பருத்தியூர் சூசை மாணிக்கம் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் ராசாக் தேசிய கொடியை ஏற்றினார். தேவகோட்டை ராம கிருஷ்ணா வித்யாலயா நடுநிலை பள்ளியில் அரிமா வட்டார தலைவர் தெட்சிணா மூர்த்தி தலைமையில் அரிமா சங்கதலைவர் கருப்பையா தேசிய கொடியை ஏற்றினார். தலைமை ஆசிரியர் இலக்கிய மேகம் சீனிவாசன், ஆசிரியை காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:04 am

மனாமதுரை

மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ஜோசப்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் ஒன்றிய குழு தலைவர் மாரிமுத்து தேசியகொடியை ஏற்றி வைத்தார்.

மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் மணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மதா கல்லூரியில் அதன் தலைவர் ஜெயக்குமார், நிதியாளர் ஜெயபாக்கியம் முன்னிலையில் தாசில்தார் கலைராணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக் னிக் கல்லூரியில் ஜி.கே.எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் காத்தமுத்து, துணை தலைவர் சுந்தரிகாத்தமுத்து தலைமையில் ஒன்றியகுழு தலைவர் மாரிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் துணைதலைவர் முத்துராஜா, கல்லூரி முதல்வர் அசாகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by Manik Fri Aug 17, 2012 10:34 am

எல்லாம் சரி அண்ணா........... எந்த நாளிதழில் இதை எடுத்தீர்கள் அண்ணா அதை சொல்லவே இல்லையே..........

நான் தினமணி நாளிதழுக்குதான் கணிணியில் தட்டச்சு செய்து இணையதளத்தில் அனுப்புவேன்......... ஆனால் நான் நிருபர் அல்ல அவர் சொல்வதை தட்டச்சு செய்வேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by சிவா Fri Aug 17, 2012 10:39 am

இது நீங்கள் தட்டச்சு செய்தது இல்லை மானிக்! தினத்தந்தி செய்தி இது!


சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by Manik Fri Aug 17, 2012 10:46 am

தெரியும் அண்ணா இந்த செய்தி நான் தட்டச்சு செய்யவில்லையென்று......... இனி இங்கு நடக்கும் செய்திகளை நானும் பதிய முயல்கிறேன் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் Empty Re: சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை திருப்புவனம் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
» இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா
» காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை நகராட்சிகளில் துணைத்தலைவர்கள் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
» சென்னையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம், பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum