Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
3 posters
Page 1 of 1
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
வழக்கு நிலுவையில் இருக்கும்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. ``தீர்ப்பு வெளியாகும் வரை பொறுக்க முடியாதா'' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
என்றபோதிலும் அணுமின்நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுமின்நிலையத்தை திறக்க அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
அனுமதி உத்தரவு
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வடபழனியைச் சேர்ந்த பொறியாளர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23.7.12 அன்று கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அனுமதி உத்தரவு ஒன்றை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த உத்தரவின்படி, அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கடலுக்குள் அனுப்ப முடியும். ஆனால் சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டின்படி 37 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துக்கு மேல் கழிவுகளை கடலுக்குள் அனுப்பக் கூடாது. இதை வாரியம் புறக்கணித்துவிட்டது.
45 டிகிரி செல்சியஸ் சூட்டில் கழிவுகளை கடலுக்குள் விட்டால், அங்குள்ள மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்துவிடும். இதனால் ராதாபுரம் தாலுகாவில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முழுவதும் பாதிக்கப்படும். எனவே வாரியத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
செய்திக்குறிப்பு வெளியீடு
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 10-ந் தேதி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய வழக்குகள் விசாரணையின்போது, `மத்திய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்வரை கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம்' என்று ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அதை மீறும் வகையில் இப்படி ஒரு செய்திக் குறிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே அதையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடையில்லை
இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.ஜோதிமணி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதற்கு பதிலளித்த மாசுகட்டுப்பாட்டு வாரிய வக்கீல் ரீட்டா சந்திரசேகரன், `கடலுக்குள் 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கழிவுநீரை அனுப்ப தடையில்லை' என்று குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான வாதத்தின்போது நீதிபதி பி.ஜோதிமணி கூறிய கருத்துகள் வருமாறு:-
நாகரீகமல்ல
கூடங்குளம் அணு மின்நிலையம் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பிரச்சினையை எழுப்பி மீண்டும் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்குள் தீர்ப்பை வெளியிடலாம் என்று இருக்கும் நிலையில், மத்திய மந்திரி, அதிகாரிகள் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அணு மின்நிலையத்தை திறக்கும் நாள் பற்றி அறிவிக்கின்றனர். இது நாகரீகமல்ல.
மாற்ற வேண்டியதாகிவிடும்
மத்திய அரசு எப்போதும் சுப்ரீம் கோர்ட்டை மட்டும்தான் மதிக்கிறது. ஐகோர்ட்டுகளை மதிப்பதில்லை. 150 ஆண்டு விழாவை ஐகோர்ட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், எரிபொருளை நிரப்பலாம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது.
இங்கு 2 மாதங்களாக விசாரணை நடத்தி, 200 பக்க தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இப்படி செயல்பட்டால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிடும்.
பொறுக்க முடியாதா?
தீர்ப்பு தயாரிக்கப்படும் நிலையில், அறிவிப்புகள் வெளியாவது அநீதியாக இல்லையா? என்றெல்லாம் கேட்டு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களால் பொறுக்க முடியாதா?
இந்த வழக்கில் ஒரு அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது வெளிநாட்டு ஏஜென்சி மூலம் தயாரிக்கப்பட்ட மனுபோல் உள்ளது.
45 டிகிரி உஷ்ணத்தில் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைகள் வருகின்றன. இது முக்கியமான விவகாரம். நொய்யல் ஆறுபோல் வாரியம் கையாண்டுவிடக்கூடாது.
இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நோட்டீஸ்
அதைத் தொடர்ந்து, இந்த புதிய மனுக்கள் தொடர்பாக 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் சிறப்புப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜரானார்.
தினத்தந்தி!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
என்றபோதிலும் அணுமின்நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுமின்நிலையத்தை திறக்க அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
அனுமதி உத்தரவு
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வடபழனியைச் சேர்ந்த பொறியாளர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23.7.12 அன்று கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அனுமதி உத்தரவு ஒன்றை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த உத்தரவின்படி, அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கடலுக்குள் அனுப்ப முடியும். ஆனால் சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டின்படி 37 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துக்கு மேல் கழிவுகளை கடலுக்குள் அனுப்பக் கூடாது. இதை வாரியம் புறக்கணித்துவிட்டது.
45 டிகிரி செல்சியஸ் சூட்டில் கழிவுகளை கடலுக்குள் விட்டால், அங்குள்ள மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்துவிடும். இதனால் ராதாபுரம் தாலுகாவில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முழுவதும் பாதிக்கப்படும். எனவே வாரியத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
செய்திக்குறிப்பு வெளியீடு
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 10-ந் தேதி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய வழக்குகள் விசாரணையின்போது, `மத்திய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்வரை கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம்' என்று ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அதை மீறும் வகையில் இப்படி ஒரு செய்திக் குறிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே அதையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடையில்லை
இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.ஜோதிமணி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதற்கு பதிலளித்த மாசுகட்டுப்பாட்டு வாரிய வக்கீல் ரீட்டா சந்திரசேகரன், `கடலுக்குள் 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கழிவுநீரை அனுப்ப தடையில்லை' என்று குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான வாதத்தின்போது நீதிபதி பி.ஜோதிமணி கூறிய கருத்துகள் வருமாறு:-
நாகரீகமல்ல
கூடங்குளம் அணு மின்நிலையம் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பிரச்சினையை எழுப்பி மீண்டும் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்குள் தீர்ப்பை வெளியிடலாம் என்று இருக்கும் நிலையில், மத்திய மந்திரி, அதிகாரிகள் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அணு மின்நிலையத்தை திறக்கும் நாள் பற்றி அறிவிக்கின்றனர். இது நாகரீகமல்ல.
மாற்ற வேண்டியதாகிவிடும்
மத்திய அரசு எப்போதும் சுப்ரீம் கோர்ட்டை மட்டும்தான் மதிக்கிறது. ஐகோர்ட்டுகளை மதிப்பதில்லை. 150 ஆண்டு விழாவை ஐகோர்ட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், எரிபொருளை நிரப்பலாம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது.
இங்கு 2 மாதங்களாக விசாரணை நடத்தி, 200 பக்க தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இப்படி செயல்பட்டால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிடும்.
பொறுக்க முடியாதா?
தீர்ப்பு தயாரிக்கப்படும் நிலையில், அறிவிப்புகள் வெளியாவது அநீதியாக இல்லையா? என்றெல்லாம் கேட்டு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களால் பொறுக்க முடியாதா?
இந்த வழக்கில் ஒரு அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது வெளிநாட்டு ஏஜென்சி மூலம் தயாரிக்கப்பட்ட மனுபோல் உள்ளது.
45 டிகிரி உஷ்ணத்தில் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைகள் வருகின்றன. இது முக்கியமான விவகாரம். நொய்யல் ஆறுபோல் வாரியம் கையாண்டுவிடக்கூடாது.
இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நோட்டீஸ்
அதைத் தொடர்ந்து, இந்த புதிய மனுக்கள் தொடர்பாக 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் சிறப்புப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜரானார்.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
நார வாயி நாராயண சாமிக்கு இது பெரிய அடியாகஇருக்கும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை திடீர் எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|