ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர் !

Go down

ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர் ! Empty ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர் !

Post by சாமி Mon Aug 13, 2012 10:26 am

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.

ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கண்டி கதிர்காமம் பகுதியை ஆண்டுவந்த தமிழ் மன்னன் விக்கிரம சிங்கன் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு அங்கேயே மடிந்தார். ""கோட்டை அரசு'' என்கிற பெயரில் சிங்களர் ஆட்சி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தது. அதையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

கொழும்பு கோட்டை ராஜ்ஜியம் தவிர்த்து யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளின் ஆட்சி நிர்வாகம் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையை மையமாக வைத்தே இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகச் சிரமங்கள் காரணமாக இலங்கைத் தீவை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்து, கொழும்பைத் தலைமையிடமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தனர்.

1903-ல் இலங்கைத்தீவில் சிங்களர் ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக தமிழர்களின் சமஉரிமை பாதிக்கப்பட்டது. எனவே இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களுக்குத் தன்னாட்சி கோரும் மக்கள் அமைப்பாக "தமிழர் சபை' யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. டென்ஸ்மேன் காசிப்பிள்ளை ஆகியோர் தமிழர்களுக்கு (உத்தேசமாக தனித்தமிழீழம்) தனி அரசுரிமை கோரி தமிழர் சபை மூலமாக ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தனர்.

1915-ல் இஸ்லாமியர் - சிங்களர் இனக் கலவரத்தின் காரணமாக ஆங்கிலேய அரசாங்கத்தால் சிங்களத் தலைவர் டி.எஸ்.சேனநாயகா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழர் தலைவர்களான பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் லண்டன் சென்று வாதாடி சிங்களத் தலைவர்களை மீட்டனர்.

சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காக 1919-ல் இலங்கை தேசிய காங்கிரûஸ உருவாக்கினர். சிங்களர்கள் தமிழர்களோடு நல்லிணக்கமாக வாழத் தயாராக இல்லாத காரணத்தினால் தமிழர் தலைவர்களைச் சிங்களர்கள் ஏமாற்றினர். 1921-ல் தமிழர் அனைவரும் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து விலகி யாழ்ப்பாணத்தில் "தமிழர் மகாஜன சபை'யை உருவாக்கினர்.

சிங்களச் சிங்கமும் தமிழ் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வாழ்ந்தால் ஆட்டுக்குட்டியை சிங்கம் விழுங்கிவிடும். எனவே தமிழர்கள் ஏமாறக்கூடாது என ஜே.வி.செல்லைய்யா கூறினார். இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிங்களத் தலைவர்கள் 1925-ம் வருடம் ஜூன் 25-ம் நாள் இலங்கைத் தமிழர் மகாஜன சபையுடன் உடன்பாடு ஏற்படுத்தினர். "மகா தேவா' உடன்பாடு என பெயர்பெற்ற அந்த உடன்பாடு ஒரு தலைப்பட்சமாக சிங்களரால் கைவிடப்பட்டது.

1920-லிருந்து 1935-வரை சிங்களத் தலைவர்கள் இந்திய வம்சாவளியினரான கேரள மலையாளிகளுக்கெதிரான போராட்டங்களை நடத்தி மலையாளிகளைக் கொழும்பிலிருந்து விரட்ட முயற்சி செய்தனர். 1939-ல் இந்தியாவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் கொழும்பு சென்று அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு பேசி மலையாளிகளை வெளியேற்றும் முயற்சியைத் தடுப்பதற்கு முயன்றார். ஆனால் சிங்கள வெறியர்களின் பிடிவாதம் காரணமாக முயற்சி வெற்றியடையவில்லை. மலையாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

1936 முதல் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சிங்களத் தலைவர்கள் போராட்டங்களை நடத்தத் துவங்கினர். 1830-லிருந்து ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இலங்கை மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குடியேறிய தமிழகத்தைச் சேந்தவர்களின் எண்ணிக்கை 1939-ல் ஆறு லட்சமாகும். அது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 14 சதவிகிதமாகும்.

1939-ல் பதினைந்தாயிரம் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சட்டசபையில் சிங்கள பெüத்த வெறியர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். ஒட்டு மொத்தத் தமிழரின் எதிர்ப்பையும் மீறி இத்தீர்மானம் சிங்களத் தலைவர் சேனநாயகாவால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் மலையகத் தமிழர் குழு புது தில்லி வந்து மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்து தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். காந்தியின் உத்தரவின்பேரில் 1939, ஜூலை 18-ம் நாள் ஜவாஹர்லால் நேரு, கொழும்பு சென்று சிங்களத் தலைவர் டி.எஸ்.சேனநாயகாவுடன் பேசினார். பேச்சுவார்த்தை வெற்றி பெறாத காரணத்தினால் 1939, ஜூலை 25-ல் ""இலங்கை இந்தியர் காங்கிரஸ்'' எனும் அமைப்பு மலையகத் தமிழர்களின் பாதுகாப்பிற்காக நேருவால் துவக்கி வைக்கப்பட்டது.

1939, ஜூலை 26-ம் நாள் கொழும்பு காலிமுகத்திடலில் நேரு பேசிய பொதுக் கூட்டத்தில் சிங்களர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். நேருவால் பேச முடியவில்லை. 1948, பிப்ரவரி 4-ம் நாள் ஆங்கிலேயர் இலங்கையைவிட்டு வெளியேறியபோது சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் தயவில், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில், ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலத்தை விட்டுச் சென்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்பு சிங்களப் பெரும்பான்மை அரசு 10 லட்சம் மலையகத் தமிழருக்கு குடியுரிமை கொடுக்க மறுத்தது. 1954-ல் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் கொத்தளவாலா, ""சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக'' இருக்குமென்றும், ""சிங்களரும் தமிழரும் சமமாக நடத்தப்படுவார்கள்'' என்றும் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் கொழும்பு திரும்பியதும் அவருக்கு சிங்கள பெüத்த வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தினால், ""சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி'' எனத் தீர்மானம் இயற்றினார்.

1957-ல் பண்டார நாயகா, செல்வநாயகம் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 1958-ல் ஒரு தலைபட்சமாக பண்டாரநாயகாவால் இலங்கை நாடாளுமன்றத்துக்குள்ளேயே அனைவர் முன்னிலையிலும் கிழித்து வீசப்பட்டது.
1964-ல் சிறீமாவோ சாஸ்திரி உடன்பாடு இந்தியாவால் ஏற்பட்டது. இதன் காரணமாக நான்கறை லட்சம் மலையகத்தமிழர்கள் இலங்கையை விட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.

1965-ல் டட்லி சேனநாயக - செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. 1969-ல் ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக ஒருதலைபட்சமாக டட்லி அறிவித்தார்.

இதன் பின்னர் இந்திரா காந்தி பிரதமரான காலத்தில் ஒப்பந்தம் எனும் பெயரில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின்படி தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்படவில்லை.

1987-ல் ராஜீவ் காந்தி ஜெயவர்தனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படியும் சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லை. 1987-ல் ராஜீவ் ஜெயவர்தனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜீவ் காந்தியை சிங்களக் கடற்படை சிப்பாய் ஒருவன் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். இறைவன் அருளால் ராஜீவ் காந்தி தப்பினார்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் பல ஒப்பந்தங்கள் சிங்களரும் தமிழரும் சமமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்திடும் நோக்கத்தில் செய்துகொள்ளப்பட்டு தமிழர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால் சிங்களர்கள் ஒருபோதும் நல்லிணக்க ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தங்கள் அனைத்துமே ஒரு தலைபட்சமாகவே சிங்களர்களால் மீறப்பட்டன.

2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் புரிந்துணர்வு உடன்பாடு மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் நார்வே நாட்டின் மூலமாக முயற்சி எடுத்ததன் காரணமாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 2008, ஜனவரி 8-ம் நாள் ஒரு தலைபட்சமாக ராஜபட்சே அரசால் முறித்துக் கொள்ளப்பட்டது. நார்வே சார்ந்த நடுநிலையாளர்களும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் ராஜபட்சே அரசு வெளியேற்றியது. இப்படி ஏறத்தாழ ஒன்பது முறை தமிழர்களுடன் ஏற்பட்ட உடன்பாடுகளிலிருந்து சிங்களர்கள் ஒரு தலைபட்சமாகவே விலகியுள்ளனர்.

2008-ல் முள்ளி வாய்க்கால் பயங்கரத்திற்குப் பிறகு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ராஜபட்சே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கு சம உரிமை, அரசியல் அதிகாரப் பகிர்வு, மீள்குடியேற்றம், நிவாரணப்பணிகள் ஆகியவை தொடர்பாக இந்திய அரசு பலமுறை ராஜபட்சே அரசுடன் பேசி பல உதவிகளைச் செய்துள்ளது. ஆனால் இந்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகள் அனைத்தும் தமிழர்களைச் சென்றடையவில்லை.

தொடர்ந்து சிங்களமயமாக்குதல் பெüத்தமயமாக்குதல் ஆகியவை திட்டமிட்ட முறையில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இலங்கை ராணுவத்தைக் கொண்டு தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்தல் தொடர்கிறது. இலங்கைத் தீவில் அங்கு வசிக்கும் பூர்வகுடி தமிழர்களுக்கு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே அப் பகுதி இன்றும் உள்ளது. இந்திய அரசு மேற்கொள்ளுகின்ற நல்லெண்ண முயற்சிகள் அனைத்தும் சிங்களத் தரப்பால் முறியடிக்கப்படுகின்றன.

இலங்கைத் தீவில் சீனா தனது ராணுவத்தளங்களை அமைத்துக் கொள்ள சிங்களர்கள் இடம் கொடுத்துள்ளனர்.
இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்திட தமிழ மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்திட தனித்தமிமீழம் ஒன்றுதான் தீர்வு என்கிற முடிவுக்கு இந்திய அரசு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்குள் வங்க தேச முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதற்காக 1972-ல் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து வங்க தேசத்திற்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார். இத்தகைய துணிச்சலான முடிவையே இலங்கை விஷயத்திலும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்ந்து சிங்களர்களோடு ஒப்பந்தங்கள் செய்து ஏமாந்தது போதும். எப்போதும் ஏமாற்றும் இலங்கையோடு இனிமேலாவது இந்தியா ஏமாறாமல் இருக்கட்டும்.

(நன்றி - தினமணி - அர்ஜுன் சம்பத்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
» அநியாய விலையில் விற்கப்படும் மருந்துகளால் ஏமாறும் நோயாளிகள்
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கப்பா! அதிரடி மோசடிகள்… ஏமாறும் அப்பாவிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum