ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

2 posters

Go down

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Empty இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

Post by சிவா Thu Aug 09, 2012 1:16 pm

தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் பெரியவர்கள் பேசும்போதெல்லாம், ஒரு பழமொழியை மேற்கோள் காட்டிவிட்டு பேசுவது வழக்கம். ஆனால், அதிலெல்லாம் நல்ல அர்த்தம் பொதிந்திருக்கும், அப்படி ஒரு பழமொழி. கப்பலில் பெண் வருகிறது என்று ஒருவன் சொன்னானாம். உடனே மற்றொருவன், கப்பலில் பெண் வருகிறதா? எனக்கொன்று, எங்கள் சித்தப்பாவுக்கு ஒன்று என்று கேட்டானாம். பெண் இலவசம் அல்ல, 20 சவரன் கொடுத்து வாங்கவேண்டும் என்று முதலாமவன் சொன்னவுடன், அடுத்தவன் அப்படியா! 20 சவரனா! நான் ரொம்ப சின்னபையன் எனக்கு வேண்டாம். எங்கள் சித்தப்பா வயதானவர் அவருக்கும் வேண்டாம் என்றானாம். ஆக, எந்த பொருளுக்கும் ஒரு விலை இருந்தால்தான் மதிப்பு இருக்கும். இலவசம் என்றால் அதற்கு நிச்சயமாக மதிப்பே இருக்காது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், குடியாட்சியில் உள்ள மத்திய, மாநில அரசாங்கங்கள் ஓட்டுக்காக இலவசங்களை வாரி வழங்குகிறது.

இலவசங்களுக்கே பெரும்பான்மையான நிதி போய்விடுவதால் வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாத கஷ்டத்தில் அரசாங்கங்கள் அல்லாடுகின்றன. அதனால்தான் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அப்போது நிதி மந்திரியாக இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மானியங்களை குறைப்பதன் அவசியத்தை கோடிட்டு காண்பித்திருந்தார். பொருளாதார நிலையை சீர்செய்யவேண்டும் என்றால் மானியங்களை குறைக்கவேண்டும் என்பதெல்லாம் ஏட்டளவில் சொல்லாம். ஓட்டு என்று வரும்போது, அங்கே மானியங்கள்தான் நிற்கிறது. ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? இதற்கு வழி இருக்கிறதா? என்பதெல்லாம் 2-ம் பட்சம்தான்.

இந்த சூழ்நிலையில் சுதந்திரதின உரையில், நாடு முழுவதிலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பரவலாக ஒரு பேச்சு வெளியே வந்துள்ளது. செல்போனும் கொடுத்து, 200 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளவும் சலுகை வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் மத்திய திட்டக்குழு இந்தியாவில் 40 கோடியே 74 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழ்வதாக தெரிவித்து இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 122 கோடியே 20 லட்சமாகும். உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபடி, ஏறத்தாள 41 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் என்றால், எத்தனை குடும்பங்களை உள்ளடக்கி இருப்பார்கள் என்ற கணக்கு சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் 60 லட்சம் குடும்பங்களுக்குத்தான் செல்போன் என்றால் அதை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள புள்ளி விவரப்படி நாட்டில் தற்போது, 96 கோடியே 50 லட்சம் பேர்களிடம் செல்போன் இருக்கிறது. இப்போது, இந்த 60 லட்சம் குடும்பங்களையும் சேர்த்தால், இனி செல்போன் தேவை அதிகம் இருக்காது. 60 லட்சம் குடும்பங்களுக்கு, உண்மையிலேயே செல்போன் தேவை, அவசியம் இருக்கிறதா? ஒரு வேளை செல்போன் பழுதானாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அதன் நிலை என்ன? இது ஒரு முறை மட்டும் வழங்கப்படுமா? அல்லது தொடர்கதையாக இருக்குமா? இப்போது 60 லட்சம் என்பது எதிர்காலத்தில் அதிகரிக்குமா? இலவசங்களை வழங்குவது பெரிய பிரச்சினையல்ல. மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே செல்போன் என்பது, பேசுவதற்காக இல்லாவிட்டாலும் தகவல்களை தெரிவிப்பதற்கு மிகவும் இன்றியமையாததுதான்.

நாகப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு கடலில் அலை எப்படி இருக்கிறது? சீற்றம் எப்படி இருக்கிறது? எந்த பகுதிக்கு செல்லலாம்? என்பது போன்ற தகவல்களை செல்போன் மூலம் தெரிவிக்கும் ஒரு திட்டம் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்கிறார்கள். இதுபோல, மற்ற பகுதி மீனவர்களுக்கும் இத்தகைய தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் கையில் செல்போன் இருக்கவேண்டும். இதுபோல எந்ததெந்த பருவத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம், பூச்சிமருந்து, உரம் போன்ற விவரங்களை தெரிவிக்கலாம். எனவே, ஓட்டுக்காக இந்த திட்டத்தை பொத்தாம் போக்கில் அறிவித்து விடாமல், தேவையா? என்பதை முதலில் பார்த்துவிட்டு, அப்படி தேவை என்றால் யாருக்கு தேவை? என்பதையும் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் எந்த மானியங்களை அரசு வழங்கினாலும், அந்த செலவு மீண்டும் வரியாகவோ அல்லது மற்றவிதமாகவோ மக்களின் தலையில்தானே விழும்.

தினத்தந்தி


இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Empty Re: இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 1:24 pm

மிகவும் அருமையான நியாயமான ஆய்வு...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum