ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

4 posters

Go down

நம் முன்னோர்களின் செயல்கள்  அனைத்திற்கும்  விஞ்ஞானரீதியான காரணங்கள்    இருகின்றன!                       Empty நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

Post by விநாயகாசெந்தில் Tue Jul 10, 2012 4:21 pm

நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!
விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?

அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது. அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள் ( விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம். இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்.

சாம்ப்ராணி போடுவது ஏன்?

சாம்ப்ராணி ஒரு வகை மரப்பிசினே. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.

வடக்கு பக்கம் தலை வைத்து ஏன் படுக்க கூடாது ?

பூமியின் வட-தென் திசையில் உள்ள காந்த புலம் வடக்கே தலை வைத்து படுக்கும் பொழுது மூளை நுண்குழாய்களில் மூலம் இரத்த ஓட்டத்தில் மற்றும் மூளை செல்கள் செயல்பாட்டை பாதிக்கும்.

இதனால் மன அமைதியின்மை மற்றும் ஒரு நிம்மதியற்ற தூக்கம் ஏற்படும். எனவே வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என கூறினார்.

அரசமரத்தை சுற்றுவதால் புத்திர பாக்கியம்
ஏற்படுமா?

பெண்ணின் ஓவரிக்கு (கருப்பை) சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ஃபிலோப்பியான் ட்யூப் போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் .அரசமரத்தை சுற்றி வந்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி பல முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான காற்றோட்டம் நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன.

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகள் கால் விரல்களில் சென்று முடிகின்றன. எனவே திருமணமான பெண்களுக்கு காலில் மெட்டி போடுவதால் கருப்பை நீர்சமநிலையை பாதுகாக்கபட்டு கருப்பையின் வளர்ச்சி சீராக உள்ளது.

மருதோன்றி/மருதாணி பூசுவது ஏன்?

கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளை கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்க படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன மேலும் மனக்குழப்பத்தை தவிர்கின்றன.


வளைகாப்பு நடத்துவது ஏன்?

கர்ப்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர்.

எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படுவதற்கு கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும் கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.


இடி இடிக்கும் பொழுது அர்ஜுனா என்று சொல்ல சொல்வது ஏன்?

பலமா இடி இடிக்கும் பொழுது அந்த சத்தத்தில காது அடைச்சிக்கும். அப்ப "அர்ஜுனா அர்ஜுனா "னு சொன்னா வாய் திறந்து குவிஞ்சி அப்பறமா பிளக்கும். அப்போ தாடைகள் நல்லா அகன்று காற்று வெளியேறும். அடைச்சிட்டு இருந்த காது சரி ஆகிடும்.


முளைப்பாரி:

முளைப்பாரி பற்றி பல கற்பனைகதைகள் நிகழ்ந்தாலும், முளைப்பாரி ஓர் அறம் தொடர்பான செயலாக கருதப்படுகிறது, இது பௌத்த தொடர்பு விழாவாக இருக்கலாம் என கருதப்படுகிறது, ஏனென்றால் பர்மா, தாய்லாந்து, கம்போடியா, போன்ற நாடுகளிலும் இது பாரம்பரிய விழாவாக நடைபெறுகிறது.

முற்காலத்தில் தூரப்பயணங்களுக்கு செல்வோர்கள் நீண்ட நாட்களுக்கு உணவுகளை எடுத்து செல்ல முடியாது இதுபோன்ற காரணத்தால் சமைக்காமல் சாப்பிடும் தானியங்களை ஆற்று ஓரங்களிலும் குளத்து ஓரங்களிலும் நட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த முறை ஒழுங்குபடுத்தப்பட்டது.

பெண் தெயவ வழிபாட்டு முறைகளில்(கி மு 2 துவக்கம்)இதை ஒரு சடங்காக ஆக்கினர். முக்கியமாக மழைகாலம் துவங்கும் சில நாட்களுக்கு முன்பு அம்மன் திருவிழாக்களின் போது வீட்டில் தானியங்களை மண்பானையில் இட்டு முளை உண்டாக்கி அதை ஆற்றில் கலந்துவிடுவார்கள், பிறகு அவை ஆற்றின் போக்கில் சென்று தரை தட்டிய இடங்களில் முளைவிட்டு வளரும்.

அக்காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்ட வழிப்போக்கர்களும் துறவிகளும் தங்களில் பசியாற்ற முளைபாரியில் விட்ட பயிர்களின் செடியில் இருந்து தானியங்களை பிடிங்கி அவற்றை உண்டு பசியாறி வந்தனர்.



செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

நம் முன்னோர்களின் செயல்கள்  அனைத்திற்கும்  விஞ்ஞானரீதியான காரணங்கள்    இருகின்றன!                       Empty Re: நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 4:28 pm

அதானே
நம் முன்னோர்கள் எதுவும் காரண காரியம் இல்லாம சொல்லி இருக்கமாட்டாங்க
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நம் முன்னோர்களின் செயல்கள்  அனைத்திற்கும்  விஞ்ஞானரீதியான காரணங்கள்    இருகின்றன!                       Empty Re: நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

Post by யினியவன் Tue Jul 10, 2012 4:41 pm

நல்ல பகிர்வு செந்தில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் முன்னோர்களின் செயல்கள்  அனைத்திற்கும்  விஞ்ஞானரீதியான காரணங்கள்    இருகின்றன!                       Empty Re: நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

Post by ஹர்ஷித் Tue Jul 10, 2012 7:17 pm

நல்ல பகிர்வு. சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நம் முன்னோர்களின் செயல்கள்  அனைத்திற்கும்  விஞ்ஞானரீதியான காரணங்கள்    இருகின்றன!                       Empty Re: நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum