Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
+4
கவிதாஜாய்
யினியவன்
rameshnaga
arjunsugu
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
இன்னும் மழை
விடவில்லையா ...???
பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...
நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...
நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???
கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...
மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...
எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...
ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...
அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...
பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...
எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...
ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!
எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...
நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...
பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...
குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...
பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...
இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...
எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...
சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...
(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)
அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...
விடவில்லையா ...???
பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...
நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...
நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???
கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...
மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...
எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...
ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...
அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...
பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...
எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...
ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!
எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...
நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...
பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...
குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...
பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...
இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...
எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...
சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...
(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)
அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...
Last edited by arjunsugu on Sun Jul 08, 2012 12:22 am; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
நண்பர்களே எழுத்து பிழைகளுக்கு மன்னியுங்கள் ...இந்த கவிதையினை எழுதும் போது கைகள் ஏனோ முழு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டன...அத்துணை வலியும் வேதனையும் கண்களிலும் இதயத்திலும் ... பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் ...
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
வேதனை தரும் வரிகள் - அந்த வேதனையே வாழ்க்கையாக
அவர்கள் அனுபவிப்பதற்கு மேலா நாம் படும் வேதனை?
கண்டிப்பாக நாம் அனைவரும் இதை மாற்ற முயற்சிக்கலாம்.
அவர்கள் அனுபவிப்பதற்கு மேலா நாம் படும் வேதனை?
கண்டிப்பாக நாம் அனைவரும் இதை மாற்ற முயற்சிக்கலாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
நிச்சயமாக நண்பர் இனியவன் அவர்களே ...நமது தேசத்தின் இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் ஒரு குழந்தையினை வளர்க்கும் பொறுப்பினை ஏற்று கொண்டால் இந்நேரம் அநாதை என்ற சொல் வழக்கொழிந்து போயி இருக்கும் ...நாம் காண விரும்பும் மாற்றமாக நாம் தான் முதலில் மாற வேண்டும் என்ற சொல்லுக்கு இணங்கி அதற்கான முயற்சியினை ஒரு வருட காலத்திற்கு முன்பே நினைத்து விட்டேன் ...அதன் பயனாய் கல்லூரியில் படிக்கும் நாட்களில் இருந்தே STUDENTS MISSION 5 TRUST என்ற சேவை அமைப்பை நண்பர்களை ஒன்றிணைத்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் ...இறுதி கட்டமாக வங்கி கணக்கு ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது பல பேர் இம்முயற்சிக்கு உதவாமல் போனாலும் அலட்சிய போக்கை கடை பிடிப்பதினால் முன்பு பல பேர் டிரஸ்ட் என்ற பேரில் செய்த மோசடிகளை எண்ணி அவர்கள் உதவ மறு ப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது...இது முடியாமல் போனாலும் தனி ஒருவனாய் என்னால் இயன்ற உதவி செய்வேன் ...நன்றி உங்களின் மேலான பகிர்வுக்கும் சிந்தனைக்கும் நண்பர் இனியவன் அவர்களே ...யினியவன் wrote:வேதனை தரும் வரிகள் - அந்த வேதனையே வாழ்க்கையாக
அவர்கள் அனுபவிப்பதற்கு மேலா நாம் படும் வேதனை?
கண்டிப்பாக நாம் அனைவரும் இதை மாற்ற முயற்சிக்கலாம்.
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
நல்ல முயற்சி சுகுமார் - வெற்றி கிடைக்கும் விரைவில்.
தனி ஆளாக நாம மன அமைதிக்கு வேண்டுமெனில் ஒன்றிரண்டு பேருக்கு நம்மால் உதவ முடியும் - மற்றபடி ஒரு கட்டுக் கோப்பான அமைப்பால் தான் இது பலரையும் பயனுற செய்யும்.
தொடங்கியவுடன் இங்கே சொல்லுங்கள் - இங்குள்ள நண்பர்கள் உதவ ஏதுவாகும்.
தனி ஆளாக நாம மன அமைதிக்கு வேண்டுமெனில் ஒன்றிரண்டு பேருக்கு நம்மால் உதவ முடியும் - மற்றபடி ஒரு கட்டுக் கோப்பான அமைப்பால் தான் இது பலரையும் பயனுற செய்யும்.
தொடங்கியவுடன் இங்கே சொல்லுங்கள் - இங்குள்ள நண்பர்கள் உதவ ஏதுவாகும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
கடவுளின் குழந்தையாகவே வாழும் பிள்ளைகளின் மன உணர்வுகளை கச்சிதமாக காட்டியுள்ளீர்கள். இந்நிலை மாற முயற்சி எடுத்தால் மட்டும் போதாது. பெரியவர்கள் மாறும் போது, பிள்ளைகளின் நிலை தானாக மாறும். நன்றி.
கவிதாஜாய்- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
மேலான நன்றி தோழி கவிதா அவர்களே ...நாம் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையின் வாழ்விற்கு ஒளி ஏற்றினால் அநாதை என்ற சொல்லே இருக்காது ...நமது தேவைகளினை குறைத்து கொண்டு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ...குழந்தைகளை இன்னிலைக்கு தள்ளும் பெரியோர், மன்னிக்கவும் அவர்களை அவ்வாறு சொல்ல தோன்ற வில்லை அவர்களை போன்றோரை கட்டாயம் தண்டிக்க வேண்டும் ...மாற்றத்தை எதிர் நோக்காமல் நாமே கொண்டு வர முயற்சிப்போமாக ...மிக்க நன்றி மேல கருத்துகளுக்கும் பகிர்வுக்கும் ...kavithajoy wrote:கடவுளின் குழந்தையாகவே வாழும் பிள்ளைகளின் மன உணர்வுகளை கச்சிதமாக காட்டியுள்ளீர்கள். இந்நிலை மாற முயற்சி எடுத்தால் மட்டும் போதாது. பெரியவர்கள் மாறும் போது, பிள்ளைகளின் நிலை தானாக மாறும். நன்றி.
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
நிச்ச்யம் நண்பர் இனியவன் அவர்களே ... ஒரு நம்பக தன்மை கொண்ட வங்கி கணக்கு உருவாக்கி விட்டால் இந்த முயற்சியின் இறுதியாய் செயல் வடிவம் பெற்று விடும் ... பின்பு நம்மால் முயன்ற உடன் பிறப்புகளுக்கு உதவுவோமாக ...நிச்சயம் நான் அந்த தருணத்தில் இணைந்து செயல் ஆற்றுவோமாக ...நன்றி நண்பரேயினியவன் wrote:நல்ல முயற்சி சுகுமார் - வெற்றி கிடைக்கும் விரைவில்.
தனி ஆளாக நாம மன அமைதிக்கு வேண்டுமெனில் ஒன்றிரண்டு பேருக்கு நம்மால் உதவ முடியும் - மற்றபடி ஒரு கட்டுக் கோப்பான அமைப்பால் தான் இது பலரையும் பயனுற செய்யும்.
தொடங்கியவுடன் இங்கே சொல்லுங்கள் - இங்குள்ள நண்பர்கள் உதவ ஏதுவாகும்.
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
நன்றி நண்பர் ரமேஷ் நாக அவர்களே மேலான கருத்துகளுக்கும் பகிர்விர்க்கும் ...மிக்க நன்றிrameshnaga wrote:நன்றாய் இருக்கிறது arjunsugu .
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தயவு செய்து...
» கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..!
» கொஞ்சம் வளைந்து கொடுங்கள்...!
» தயவு செய்து மாற்றுக...
» தயவு செய்து உதவவும்
» கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..!
» கொஞ்சம் வளைந்து கொடுங்கள்...!
» தயவு செய்து மாற்றுக...
» தயவு செய்து உதவவும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|