ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு

3 posters

Go down

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு Empty நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு

Post by கே. பாலா Fri May 25, 2012 12:30 pm

திருநெல்வேலி: சுக்மா மாவட்ட மக்களை நிர்க்கதியாகவிட்டு விடாமல் அங்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று நெல்லை மாவட்டத்தில் தமது சொந்த ஊருக்குவந்தார். காலையில் ரயிலில் வந்தவர், தமது கிராமமான சமாதானபுரத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்தார். மாலையில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: நான் கடத்தப்பட்டபோது எனக்காக குரல் கொடுத்த நெல்லை மாவட்டத்து மக்களை நினைக்கும்போது நெகிழ்வாக உள்ளது. நான் ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் பத்திரிகை, மீடியாவின் வெளிச்சத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். தற்போது அதற்கெல்லாம் சேர்த்து தெரிய ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் நான்மேற்கொண்ட மக்கள் பணிக்காக நான் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியடைவேன். கடத்தப்பட்ட கலெக்டர் என்ற அடையாளம் எனக்கு தேவையில்லை. சுக்மாவிற்கு முன்னதாக இன்னொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது அங்கு சுயஉதவி பெண்கள் குழுக்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

நான் கடத்தப்பட்ட சுக்மா மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களிலும் மக்கள் என்னை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருந்தார்கள். அரசியல்வாதிகள் கடத்தப்பட்டபோதெல்லாம் மக்களிடம் ஏற்படாத எழுச்சி நான் கடத்தப்பட்டபோதும் இன்னொரு கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டபோதும் மட்டுமே இத்தகைய எழுச்சி ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழர்களான பாரதிதாசன், பிரசன்னா, அன்பழகன், ஆர்.பிரசன்னா உள்பட ஐந்து பேர் கலெக்டர்களாக உள்ளோம். நேர்மையுடனும், உள்ளத்திடத்தோடும் பணியாற்றுவதில் தமிழர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள்,மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்..கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான். இதனை செய்தியாளர்கள் பெரிதுபடுத்திவிடவேண்டாம். சத்தீஸ்கரில் இதனை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. நான் கடத்தப்பட்டிருந்தபோது, ஏன் கடத்தினோம் என என்னிடம் மாவோயிஸ்ட்கள் மூன்று காரணங்களை தெரிவித்தனர். அங்கு போலீஸ் காவலில் நடந்த ஒரு இறப்பு குறித்தும், முன்பு பணியாற்றிய ஒரு எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறியும், அதிகாரிகள் நடத்திய ஒரு கூட்டம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு நான் தெளிவான பதில் தந்தேன். போலீஸ் காவலில் நடந்த இறப்பிற்கு அதை விட யாரும் செய்யமுடியாதபடி மனித உரிமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து, தன்னிச்சையான டாக்டர்களால் பரிசோதனை செய்தது ஆகியவற்றை தெரிவித்தேன். மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவான பதில் சொன்னதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

சுக்மா மாவட்டம் துவக்கப்பட்டு முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டிருந்ததால் அடிப்படை பணிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. நான்கு மாதங்களில் 4 ஆயிரத்து 500 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். 9 ஆயிரம் பேருக்கு அந்யோதயா திட்டத்தின் கீழ் உணவு உறுதியளித்துள்ளோம். 7 ஆயிரத்து 500 பேருக்கு வீடுகள் கட்டிதந்துள்ளோம். சவுக்கெடுத்து அடிக்காத குறையாத அதிகாரிகளை வேலை வாங்கி அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகளை முறைப்படுத்தி வழங்கியுள்ளோம்.இதையெல்லாம் நான் அவர்களிடம் குறிப்பிட்டு என்னை ஏன் கடத்தினீர்கள் என்றேன். நேர்மைத்திறனோடு செயல்பட்டதால் மாவோயிஸ்ட்களின் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் நான் பணியாற்றியதை பேசமுடிந்தது. ஒவ்வொருவருக்கும் "அறச்சீற்றம்' இருக்கவேண்டும். இத்தகைய சீற்றம் வயிற்றில் எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். சத்தீஸ்கரில் எனக்காக போராடிய மக்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களை நான் நிர்க்கதியாக விட்டு விட விரும்பவில்லை. எனவே நான் அந்த மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். நான் அரசியலில் இணைவேனா என ஒரு நிருபர் கேட்டார். அத்தகைய எண்ணமில்லை. எனவே அவரிடம் நானே புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். ஏதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள் என ஜாலியாக சொன்னேன். அந்த அடித்தட்ட மக்களுக்காக நான் தொடர்ந்து கலெக்டராக இருந்துகொண்டே போராடுவேன்.வெளியில் இருந்து அரசாங்கத்தை குறைசொல்வதை விட உள்ளே இருந்துகொண்டு பணியாற்றுவதுதான் சிறந்தது இவ்வாறு அலெக்ஸ்பால் மேனன் பேசினார்.

தினமலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு Empty Re: நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு

Post by சார்லஸ் mc Fri May 25, 2012 12:42 pm

பாராட்டுக்கள் திரு.அலெக்ஸ்பால் மேனன்.

பதிவுக்கு ந்ன்றி திரு.பால அவா்களே நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 678642 நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550


நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு Empty Re: நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு

Post by யினியவன் Fri May 25, 2012 12:46 pm

நல்ல ஆட்சியாளர் - ஆட்சியில் இருப்பவர்கள் அவரை நல்லவராகவே இருக்க விட்டால் சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு Empty Re: நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட்: கடத்தப்பட்ட சுக்மா கலெக்டர் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum