Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறியா அறிவிலியா தமிழன்?
+4
அசுரன்
யினியவன்
இரா.பகவதி
சாமி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறியா அறிவிலியா தமிழன்?
ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.
தமிழ் எனது தாய்மொழி, தமிழ் ஒரு தனிமொழி, தமிழ் இனிய எளிய இயல்பு மொழி எனக் கூறுவது தவறெனப்பட்டது. தமிழர் ஒரு தனியினம் என்பதை அறியா அறிவிலியானான் தமிழன்.
இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து ஏக்கழுத்தமுடன் வாழ்ந்த தமிழன் தன்னாட்சியிழந்து தன்னுரிமையிழந்து, தன்னிலை தாழ்ந்து, தன்னியல் பிறழ்ந்து அயலார்க்கு அடிமையானான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானமுடைய மறத்தமிழன் தன்மானத்தையும் இழந்தான்.
இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கொண்ட சோழன் எனத் தன் முன்னோர் பெயரை மொழிவதும் குற்றமெனக் கருதினான்; தமிழரைப் பழித்த கனகவிசயர் என்னும் ஆரிய வரசரின் முடித்தலையில் கண்ணகி படிமக்கல் ஏற்றிவந்த சேரன் செங்குட்டுவன் பெயரைச் சிந்திப்பதும் தீதென எண்ணினான்; தமிழரின் வலியறியாது வந்த வடபுலத்தரசனான மோரியனின் புறத்தைக் கண்டு செம்மாப்போடு சிரித்து நின்ற பழையன் மோகூரின் பண்பைப் பகர்வதும் பழுதெனக் கொண்டான்;
புகழொடு வாழ்ந்த தன் முன்னோர் பெயரையும் அறியாத முழுமகன் ஆனான் தமிழன்; இல்லை, ஆக்கப்பட்டான். தான் யார், தன் முன்னோர் யார், அன்னாரின் வாழ்க்கை வரலாறு என்ன, தன் வழி மரபு யாது? என்பன போன்ற தன்னிலை அறியா ஊமனான் தமிழன்.
தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம் பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப் பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, முதலிய சங்க நூல்கள் தமிழ்மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது.
“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவு மிலக்கணஞ் செய்து கொடுத்தான்” ( பாரதியார்)
எனத் தமிழ்மொழியும் கூட ஆரியமக்கள் பெற்று வளர்த்து அன்போடு தமிழர்க்குக் கொடுத்தார்கள் எனப்பேசப்பட்டது.
(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதியது)
தமிழ் எனது தாய்மொழி, தமிழ் ஒரு தனிமொழி, தமிழ் இனிய எளிய இயல்பு மொழி எனக் கூறுவது தவறெனப்பட்டது. தமிழர் ஒரு தனியினம் என்பதை அறியா அறிவிலியானான் தமிழன்.
இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து ஏக்கழுத்தமுடன் வாழ்ந்த தமிழன் தன்னாட்சியிழந்து தன்னுரிமையிழந்து, தன்னிலை தாழ்ந்து, தன்னியல் பிறழ்ந்து அயலார்க்கு அடிமையானான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானமுடைய மறத்தமிழன் தன்மானத்தையும் இழந்தான்.
இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கை கொண்ட சோழன் எனத் தன் முன்னோர் பெயரை மொழிவதும் குற்றமெனக் கருதினான்; தமிழரைப் பழித்த கனகவிசயர் என்னும் ஆரிய வரசரின் முடித்தலையில் கண்ணகி படிமக்கல் ஏற்றிவந்த சேரன் செங்குட்டுவன் பெயரைச் சிந்திப்பதும் தீதென எண்ணினான்; தமிழரின் வலியறியாது வந்த வடபுலத்தரசனான மோரியனின் புறத்தைக் கண்டு செம்மாப்போடு சிரித்து நின்ற பழையன் மோகூரின் பண்பைப் பகர்வதும் பழுதெனக் கொண்டான்;
புகழொடு வாழ்ந்த தன் முன்னோர் பெயரையும் அறியாத முழுமகன் ஆனான் தமிழன்; இல்லை, ஆக்கப்பட்டான். தான் யார், தன் முன்னோர் யார், அன்னாரின் வாழ்க்கை வரலாறு என்ன, தன் வழி மரபு யாது? என்பன போன்ற தன்னிலை அறியா ஊமனான் தமிழன்.
தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம் பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப் பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, முதலிய சங்க நூல்கள் தமிழ்மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது.
“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவு மிலக்கணஞ் செய்து கொடுத்தான்” ( பாரதியார்)
எனத் தமிழ்மொழியும் கூட ஆரியமக்கள் பெற்று வளர்த்து அன்போடு தமிழர்க்குக் கொடுத்தார்கள் எனப்பேசப்பட்டது.
(தொடரும்)
(புலவர் குழந்தை எழுதியது)
Last edited by சாமி on Fri May 25, 2012 9:39 am; edited 3 times in total
Re: அறியா அறிவிலியா தமிழன்?
நல்ல பகிர்வு சாமி.
ஒரு காலத்தில் பத்திரிகைத் துறை, ஆளும் வர்க்கம் இவற்றில் ஆரிய ஆதிக்கம் இருந்தது. தற்பொழுது அந்த அளவுக்கு இல்லை எனினும் இன்னும் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது.
இன்று இணைய, தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைவருக்கும் வேண்டியதும் வேண்டாததும் நிறையவே கிடைக்கிறது - நாம் நல்லதை அறிந்து பயன்பெறுவோம் - இதுபோல் செய்திகளையும் அறிந்து கொள்வோம்.
ஒரு காலத்தில் பத்திரிகைத் துறை, ஆளும் வர்க்கம் இவற்றில் ஆரிய ஆதிக்கம் இருந்தது. தற்பொழுது அந்த அளவுக்கு இல்லை எனினும் இன்னும் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது.
இன்று இணைய, தொழில் நுட்ப வளர்ச்சியினால் அனைவருக்கும் வேண்டியதும் வேண்டாததும் நிறையவே கிடைக்கிறது - நாம் நல்லதை அறிந்து பயன்பெறுவோம் - இதுபோல் செய்திகளையும் அறிந்து கொள்வோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அறியா அறிவிலியா தமிழன்?
தமிழன் ஆட்சிக்கு வந்தபிறகும் இதையெல்லாம் மறந்து போனான் பதவிக்காக.... இன்றைய தொலைக்காட்சிகள் பழையனவற்றை மறைக்கும் செயலை தான் செய்துக்கொன்டிருக்கிறது. அருமையான பகிர்வு..இது.. பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அறியா அறிவிலியா தமிழன்?
கீதை ஆரியர் நூல் அல்ல !கிரிச்னர் காலத்தில் பிராமணர்கள் ஆதிக்கமில்லை ! வால்மீகி விசுவாமித்திரர் வசிச்ட்டார் வியாசர் அகத்தியர் முதலானோர் திராவிடர்களே !பிராமணர்கள் அல்ல !
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: அறியா அறிவிலியா தமிழன்?
நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய?
ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
நல்ல பதிவு , நன்றி சாமி அவர்களே.
ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
நல்ல பதிவு , நன்றி சாமி அவர்களே.
Re: அறியா அறிவிலியா தமிழன்?
> உடன்பிறப்பன்புக்கு (சகோதர அன்பு) பாண்டுவின் மக்களும் தசரதன் மக்களும் எடுத்துக்காட்டாக விளங்கினார்களேயொழிய நெடுங்சேரலாதன் மக்கள் விளங்கவில்லை (நெடுஞ்சேரலாதன் மக்கள்-செங்குட்டுவனும் – இளங்கோவும். இளங்கோ, அரசு தனக்குரியதெனக் கூறிய நிமித்திகன் சொல்லைப் பொய்யாக்கித் துறவு பூண்டு அண்ணனுக்கு அரசு கிடைக்கும்படி செய்தவன்.)
> மாதர் பண்புக்குச் சீதையும் துரோபதையும் சான்றானார் களேயன்றிக் கோப்பெருந்தேவியும் மாதவியும் சான்றாகவில்லை (கோப்பெருந்தேவி – கோவலனைக் கொன்ற நெடுஞ்செழியன் மனைவி. கோவலனைக் கொன்றது தவறெனவுணர்ந்து பாண்டியன் இறந்ததும் உயிர் நீத்தவள். மாதவி – பொதுமகளாக இருந்தும் கோவலனிறந்ததும் துறவு பூண்டவள்.)
> ஆண்மைக்கு அர்ச்சுனனும் இராமனும் முன்னின்றார்களேயல்லாமல் செங்குட்டுவனும் கரிகாலனும் முன்னிற்கவில்லை.
> கொடைக்குக் கர்ணனும் நளனும் முன்வந்தார்களே தவிரக் காரியும் பாரியும் முன்வரவில்லை.
> அருந்ததி கற்பரசியானாளே யல்லது கண்ணகி கற்பரசியாகவில்லை.
> அரசியற் அறிவிற்குச் சாணக்கியன் சான்றானானே தவிர வள்ளுவன் சான்றாகவில்லை.
> காரிகையர் தீரத்துக்குக் கைகேசியும் ஜான்சி ராணியும் கை கொடுத்தார்களேயன்றி அல்லியும் முத்துநாச்சியும் கொடுக்கவில்லை (அல்லி-அர்ச்சுனன் மனைவி; பாண்டிக்குமரி; பாண்டவரைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தவள். முத்துநாச்சி – கட்டபொம்மன் தங்கை; ஆண்கோலம் பூண்டு வெள்ளைப் படையோடு வீரப்போர் புரிந்தவள்.)
> நட்புக்கு நரநாராயணர் (அர்ச்சுனனும் கண்ணனும்) எடுத்துக்காட்டானார்களேயல்லாமல் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் எடுத்துக் காட்டாகவில்லை ( கோப்பெருஞ்சோழன் – உறையூர், பிசிராந்தையார் – பாண்டுநாடு. இருவரும் கேள்விமூலம் உணர்ச்சியொன்றி நண்பரானவர். கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர்விட, பிசிராந்தையார் உணர்ச்சியால் அறிந்து உறையூர் வந்து உடனுயிர் விட்டவர்.)
> ஆடலுக்கு அரம்பையர் அரங்கேறினார்களே யொழியத் தமிழ் விறலியர் அரங்கேறவில்லை.
> இசைக்குக் கந்தருவர் பண்ணமைத்தார்களேயல்லது பாணர் பண்ணமைக்கவில்லை.
இதைப்போல சொல்லிக் கொண்டே போகலாம். இடம் போறாது.
ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.
(புலவர் குழந்தை எழுதியது)
(பின் குறிப்பு: தமிழன் தன்னையறியத் தலைப்படுவது எப்போது? யார் என்றே தெரியாத அயலார்களை எடுத்துக்காட்டுவதை விடுத்து நம்மவர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? பண்பாடு, ஒழுக்கம் உள்ள நமது முன்னோர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? எதற்கும் பயன்படாத திரைத்துறை நிழல் கதாநாயகர்களை விடுத்து உண்மைக் கதாநாயகர்களை கொண்டாடப் போவது எப்போது? தாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரப்போவது எப்போது? டாஸ்மாக் சாகசங்களை, தொலைக்காட்சி நேரப்போக்குகளை, வெட்டிப் பேச்சுக்களை விடுத்து தமிழன் வரலாறைப் பேசப் போவது எப்போது?????
இதை அறிந்து திருந்தும் வரை….
தமிழன் அறிவிலிதான் ! அறியா அறிவிலிதான் !! அறிந்தும் திருந்தா அறிவிலிதான் !!!)
> மாதர் பண்புக்குச் சீதையும் துரோபதையும் சான்றானார் களேயன்றிக் கோப்பெருந்தேவியும் மாதவியும் சான்றாகவில்லை (கோப்பெருந்தேவி – கோவலனைக் கொன்ற நெடுஞ்செழியன் மனைவி. கோவலனைக் கொன்றது தவறெனவுணர்ந்து பாண்டியன் இறந்ததும் உயிர் நீத்தவள். மாதவி – பொதுமகளாக இருந்தும் கோவலனிறந்ததும் துறவு பூண்டவள்.)
> ஆண்மைக்கு அர்ச்சுனனும் இராமனும் முன்னின்றார்களேயல்லாமல் செங்குட்டுவனும் கரிகாலனும் முன்னிற்கவில்லை.
> கொடைக்குக் கர்ணனும் நளனும் முன்வந்தார்களே தவிரக் காரியும் பாரியும் முன்வரவில்லை.
> அருந்ததி கற்பரசியானாளே யல்லது கண்ணகி கற்பரசியாகவில்லை.
> அரசியற் அறிவிற்குச் சாணக்கியன் சான்றானானே தவிர வள்ளுவன் சான்றாகவில்லை.
> காரிகையர் தீரத்துக்குக் கைகேசியும் ஜான்சி ராணியும் கை கொடுத்தார்களேயன்றி அல்லியும் முத்துநாச்சியும் கொடுக்கவில்லை (அல்லி-அர்ச்சுனன் மனைவி; பாண்டிக்குமரி; பாண்டவரைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தவள். முத்துநாச்சி – கட்டபொம்மன் தங்கை; ஆண்கோலம் பூண்டு வெள்ளைப் படையோடு வீரப்போர் புரிந்தவள்.)
> நட்புக்கு நரநாராயணர் (அர்ச்சுனனும் கண்ணனும்) எடுத்துக்காட்டானார்களேயல்லாமல் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் எடுத்துக் காட்டாகவில்லை ( கோப்பெருஞ்சோழன் – உறையூர், பிசிராந்தையார் – பாண்டுநாடு. இருவரும் கேள்விமூலம் உணர்ச்சியொன்றி நண்பரானவர். கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர்விட, பிசிராந்தையார் உணர்ச்சியால் அறிந்து உறையூர் வந்து உடனுயிர் விட்டவர்.)
> ஆடலுக்கு அரம்பையர் அரங்கேறினார்களே யொழியத் தமிழ் விறலியர் அரங்கேறவில்லை.
> இசைக்குக் கந்தருவர் பண்ணமைத்தார்களேயல்லது பாணர் பண்ணமைக்கவில்லை.
இதைப்போல சொல்லிக் கொண்டே போகலாம். இடம் போறாது.
ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழியைக் கொண்ட தமிழன், பின்னொரு காலத்தே ‘தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையடைந்தான்; தன்னை ‘நான் ஒரு தமிழன்’ எனப் பெருமையோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந்தான்.
(புலவர் குழந்தை எழுதியது)
(பின் குறிப்பு: தமிழன் தன்னையறியத் தலைப்படுவது எப்போது? யார் என்றே தெரியாத அயலார்களை எடுத்துக்காட்டுவதை விடுத்து நம்மவர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? பண்பாடு, ஒழுக்கம் உள்ள நமது முன்னோர்களை சான்றுகாட்டப்போவது எப்போது? எதற்கும் பயன்படாத திரைத்துறை நிழல் கதாநாயகர்களை விடுத்து உண்மைக் கதாநாயகர்களை கொண்டாடப் போவது எப்போது? தாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரப்போவது எப்போது? டாஸ்மாக் சாகசங்களை, தொலைக்காட்சி நேரப்போக்குகளை, வெட்டிப் பேச்சுக்களை விடுத்து தமிழன் வரலாறைப் பேசப் போவது எப்போது?????
இதை அறிந்து திருந்தும் வரை….
தமிழன் அறிவிலிதான் ! அறியா அறிவிலிதான் !! அறிந்தும் திருந்தா அறிவிலிதான் !!!)
Re: அறியா அறிவிலியா தமிழன்?
அருமையான கட்டுரை சாமி!!!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: அறியா அறிவிலியா தமிழன்?
பாவம் எதுவும் செய்யவில்லை. அவனது நல்ல குணங்களே, பண்பாடுகளே அவனுக்கு வினையானது.அகிலன் wrote:நன்றாயிருந்தபோது என்ன பாவம் செய்தானோ தமிழன் இன்று இந்த இழிநிலை அடைய? ஆனால் காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நிச்சயம் தமிழன் உலகையாளுவான்.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறியா மானிடரே
» வளம் அறியா நலம் ...!
» கேள்வி அறியா தேடல்
» அறிய ,அறியா படங்கள்..
» அறிய ,அறியா படங்கள்..2
» வளம் அறியா நலம் ...!
» கேள்வி அறியா தேடல்
» அறிய ,அறியா படங்கள்..
» அறிய ,அறியா படங்கள்..2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|