ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்

2 posters

Go down

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம் Empty மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 24, 2012 6:51 am

சென்னை:""மத்திய அரசு பெட்ரோல் விலையை திரும்ப பெறாவிட்டால், மக்களுடைய கண்ணீர் ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம் Tamil_News_large_472799

இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும், மத்திய அரசு பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணம். இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், பெட்ரோலுக்கு லிட்டருக்கு, 7 ரூபாய் 50 காசு வரை விலை உயர்த்தி உள்ளது. இது, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும்போது எல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதத்தையே எடுத்து வைப்பதை ஏற்று கொள்ள முடியாது.மேலும், அமெரிக்க டாலரில் இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுபடுத்தாமல், பெட்ரோல் விலை உயர்வை ஏற்று கொள்ள முடியாது.வழி உண்டு: மத்திய அரசின், இந்த மக்கள் விரோத செயல் காரணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு, இந்த உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.
மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உட்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத்தொகையினை அளிக்கிறது.

இந்த நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் வரியை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்கலாம்.மக்களை பெரிதளவில் பாதிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட்டு, பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மக்களுடைய கண்ணீர் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடையச் செய்யும் ஆயுதமாக மாறும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு செயல்பாட்டில் அதிருப்தி:முதல்வர் ஜெயலலிதா வெளிப்படை:"மத்தியில் ஓர் அரசு இருப்பதாகவே தெரியவில்லை. நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அ.தி.மு.க., பிரமுகர்கள் எல்லாம், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தீவிரமாகச் செயல்படுவது ஒரு புறம் இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
நேற்று, கட்சி அலுவலக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர்களிடம் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
இதுகுறித்த எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.

பா.ஜ., தலைவர் அத்வானியிடம் பேசினீர்களே?
ஜனாதிபதி தேர்தலில், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டேன். இதுகுறித்து, அ.தி.மு.க., சார்பில் விரிவான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேல், இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

பி.ஏ.சங்மா சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியே அவரை ஆதரிக்கவில்லையே?
இது பற்றி மேலும் கூற விரும்பவில்லை. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்று ஆண்டு ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
நாட்டின் சாதாரண குடிமகனுக்குக் கூட, மத்தியில் ஓர் அரசாங்கமே நடைபெறவில்லை என்று தெரியும். இதனால், நாடு இப்போது தத்தளித்துக் கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2014ம் ஆண்டுக்கு முன்னரே லோக்சபா தேர்தல் வந்துவிடும் என நினைக்கிறீர்களா?
யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

காங்கிரஸ் மீது முதல்வர் கடும் தாக்குதல் நடத்தி வருவதால், சங்மாவை அந்தக் கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதேசமயம், பா.ஜ., உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் வாய் திறக்க மறுப்பதால், தான் முன்னிறுத்திய ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, முதல்வர் அக்கறை கொள்வதாகத் தெரிகிறது. அவரது டில்லி பயணத்தில், ஜனாதிபதி தேர்தல் குறித்து அடுத்த உத்தி உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம் Empty Re: மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்

Post by Guest Thu May 24, 2012 10:45 am

நீங்க மட்டும் என்ன பண்ணுரிங்கோ ...

மாநில மானியத்த கட் பண்ண முடியுமா
avatar
Guest
Guest


Back to top Go down

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம் Empty Re: மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்

Post by இரா.பகவதி Thu May 24, 2012 12:30 pm

நீங்க மட்டும் என்ன பண்ணுரிங்கோ ...

மாநில மானியத்த கட் பண்ண முடியுமா

ஏதாவது பேசுனுங்கருதுக்காக பேசுறா அந்த கன்னடத்தி சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம் Empty Re: மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum