ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்

+6
கே. பாலா
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
hega
அசுரன்
shineson
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இயேசு என்னும் மனிதர் Empty இயேசு என்னும் மனிதர்

Post by shineson Fri May 18, 2012 7:57 pm

"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.

இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.

(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)

அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.

பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.

அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.

இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.

இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?

உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)


வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by அசுரன் Fri May 18, 2012 8:03 pm

நண்பரே விதிமுறைகளை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். மத சம்பந்தப்பட்ட திரிகளை அந்தந்த பகுதிகளில் தான் திறக்கவேன்டும். உங்கள் இந்த திரியின் வாத விவாத விதண்டாவாதங்களுக்கு நீங்களே பொறுப்பு. ஈகரையை செம்மையுடன் நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் - அன்புடன் அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Fri May 18, 2012 8:19 pm

அட இப்படித்தான் முன்னொருகாலத்தில் சவுல் நு ஒருவரிலிருந்து
இன்றையபோதகர் சாம் ஜெபத்துரை வரைக்கும் சொல்லிகிட்டிருந்தார்கள். கடைசியில் என்னாச்சு..

மத்தேயு 16:28 தாங்கள் புரிந்து கொண்டதென்ன...நாங்கள் புரிய வேண்டியதென்ன..

அடுத்து நடப்பது என்னவென யாருக்குதான தெரியும் உங்கள் வாழ்வு உட்பட.... பகிர்வுக்கு நன்றி shineson கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து வழி நடத்துவாராக..



Last edited by hega on Fri May 18, 2012 8:44 pm; edited 1 time in total
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Fri May 18, 2012 8:30 pm

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”
மத்தேயு 5:44


மத்தேயு 10:32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்


avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by shineson Fri May 18, 2012 8:53 pm

இவ்வளவு சொல்றீங்களே, அந்த மத்தேயு 16:28ஐயும் நீங்களே சொல்லிடுங்களேன்.



வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by அசுரன் Fri May 18, 2012 9:15 pm

shineson wrote:இவ்வளவு சொல்றீங்களே, அந்த மத்தேயு 16:28ஐயும் நீங்களே சொல்லிடுங்களேன்.

“இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

சொல்லியாச்சி நண்பரே இதுல என்ன இருக்கு? இதனால் நீங்க ஈகரை நண்பர்களுக்கு சொல்லவருவது என்ன?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Fri May 18, 2012 9:58 pm

அதுதானே...... அந்த வசனத்தின் படி தாங்கள் புரிந்து கொண்டதென்ன..நாங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 10:01 pm

இவர் கிருஸ்துவ மதத்தை நக்கல் செய்வதாகவே தெரிகிறது. சோகம் இதைத் தொடர விடுவது நல்லது அல்ல என்று நான் கருதுகிறேன் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by shineson Fri May 18, 2012 10:07 pm

அப்படி அவரு சொல்லும்போது, அங்க இருந்தது யாரு? அவரோட சீடர்கள், அவரோட சமகாலத்தவர்கள். சரிதானே? அவங்க எல்லாம் செத்து மண்ணோட மண்ணா மக்கிப் போயி 2000 வருஷமாச்சு. ஆனா அவரு இன்னும் வரல. இதுக்கு என்னப்பா அர்த்தம்?



வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Fri May 18, 2012 10:08 pm

மன்னிக்கவும் ஐயா. கிறிஸ்தவ மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் கேலி செய்வது நன்றன்று. ஆனால அவர் புரிதல் தவாறாக இருக்கும் பட்சத்தில் இப்பதிவின் மூலம் அவருக்கு விளக்கம் கிடைக்கலாம.

அவர் குறிப்பிட்ட அந்த வசனம் மட்டுமலல் பைபிள்காணப்படும் பல வசனங்கள் இப்படிதான் மேமபோக்காக புரியபடுகிறது. விதாண்டாவாதம் ஆகாத பட்சத்தில் பதிவிடுதல் தவறல்ல..
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: இவர் கிருஸ்துவ மதத்தை நக்கல் செய்வதாகவே தெரிகிறது. சோகம் இதைத் தொடர விடுவது நல்லது அல்ல என்று நான் கருதுகிறேன் சோகம்

மன்னிக்கவும் ஐயா. கிறிஸ்தவ மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் கேலி செய்வது நன்றன்று. ஆனால அவர் புரிதல் தவாறாக இருக்கும் பட்சத்தில் இப்பதிவின் மூலம் அவருக்கு விளக்கம் கிடைக்கலாம.

அவர் குறிப்பிட்ட அந்த வசனம் மட்டுமலல் பைபிள்காணப்படும் பல வசனங்கள் இப்படிதான் மேமபோக்காக புரியபடுகிறது. விதாண்டாவாதம் ஆகாத பட்சத்தில் பதிவிடுதல் தவறல்ல..
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum