ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

4 posters

Go down

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Empty இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

Post by முஹைதீன் Fri 18 May 2012 - 14:52





இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்





நம் நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி( Mutual Fund Companies ) திட்டங்கள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!
ஏன் இத்தனை திட்டங்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?அதற்கு முன் பரஸ்பர நிதியை பற்றி தெரிந்து கொள்வோமா?கைவசம் இருக்கும் சேமிப்புகளை ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெற்று, அவற்றை முதலீடு செய்து அடையும்நிகர லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வது தான் பரஸ்பர நிதி நிறுவனங்களின்( Mutual Fund Companies ) பணி, நோக்கம்.
இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், `செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்டு ஆப் இந்தியா’ (சுருக்கமாக, `செபி’) என்ற அமைப்பிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த செபி அமைப்பு இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அதனை முதலீடுகள் மூலம் நிர்வாகம் செய்கிற அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்தது.
முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் நிதியை எந்தெந்தப் பங்குகள் (Equity) மற்றும் கடன் பத்திரங்களில் (Debentures and Bonds) லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பதை ஆய்ந்து தெரிவிக்க, பரஸ்பர நிதி நிறுவனங்களில், இத்துறையில் போதிய அறிவும், அனுபவமும் வாய்ந்த நிபுணர் குழு ஒன்று தொடர்ந்து செயல்படும்.
முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் பங்குகள் வழங்கப்படும். இதற்கு `யூனிட்டுகள்’ என்று பெயர். இந்தத் தொகை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்போது யூனிட்டுகள் பங்குகளாக மாறும்.
குறிப்பிட்ட கால முடிவில் கிடைத்த லாபம் அல்லது அடைந்த நஷ்டத்தை யூனிட்தாரர்கள் அவரவர் யூனிட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்துகொள்வர்.முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.


பரஸ்பர நிதி திட்டங்களின் வகைகள்:


முடிவுறும் திட்டங்கள் (Close Ended Scheme):


இத்திட்டம், குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்டு மற்றொரு தேதியில் முடிவுக்கு வரும். அதாவது, முதலீட்டாளர்கள் எல்லா காலங்களிலும் இதுபோன்ற திட்டங்களில் சேர இயலாது. இருப்பினும், இத்திட்டம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால் இதன் யூனிட்டுகளை பங்குச் சந்தை மூலமாக வாங்கவோ, விற்கவோ முடியும். இத்திட்டங்களின் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை, அதனை வெளியிட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திடமே அன்றைய மதிப்புக்கு விற்று திட்டத்தைவிட்டு வெளியேறலாம். இந்த திட்டத்தில் 5-ல் இருந்து 7 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யலாம்.


முடிவுறா திட்டங்கள் (Open Ended Scheme)


இது பிரபலமாக இருக்கும் ஒரு திட்டம். முதலில் சொல்லப்பட்ட திட்டங்களைப் போல் அல்லாமல் இவ்வகைத் திட்டங்களில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். இதில் எத்தனை பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், ஒருவரது முதலீட்டுக்கான வரம்பு எது, இத்திட்டத்தில் இந்நிறுவனம் எவ்வளவு தொகையை திரட்டும் என்பதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை. அந்த நிறுவனம் விரும்புகிற காலம் வரையில் முதலீட்டாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.
இடைவெளி திட்டங்கள் (Interval Scheme)


முடிவுறும் மற்றும் முடிவுறா திட்டங்களின் தன்மையையும் கொண்டவை இவ்வகைத் திட்டங்கள். இத்திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதே நேரம் நிதி நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டாளர்களிடமிருந்து இவற்றை அன்றைய மதிப்பில் திரும்ப வாங்கிக்கொள்கின்றன.


பங்கு முதலீட்டு திட்டம் (Equity Mutual Fund)


பரஸ்பர நிதி நிறுவனங்கள் இத்திட்டங்கள் மூலம் திரட்டும் நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன.


கடன் பத்திரங்கள் (Debt Mutual Fund)


மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் நிதி நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. நிரந்தர வட்டி வருவாய் மற்றும் ஆபத்தில்லாத தன்மைகளை கருத்தில் கொண்டு இவ்வகை முதலீடுகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.


சரிவிகிதத் திட்டங்கள் (Proportionalschemes):


பெயரிலிருந்தே புரிந்திருக்கும். இது பங்கு முதலீட்டுத் திட்டம் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியும், கடன் பத்திரங்களின் முதலீடு காரணமாக நிச்சயமான வருவாய் மற்றும் பாதுகாப்பும் உறுதியாகிறது.


வளர்ச்சித் திட்டங்கள் (Development projects):


முதலீடு நல்ல வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்குடன், பெருமளவு நிதியை பங்குகளில் முதலீடு செய்கின்றன பரஸ்பர நிதி நிறுவனங்கள். நீண்ட கால அடிப்படையில் முதலீடு வளர்ச்சி காண இத்திட்டம் பயன்படுகிறது.


வருவாய்த் திட்டங்கள் (Revenue schemes):


முதலீட்டாளர்கள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வருவாயை எதிர்பார்க்கும்பட்சத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அரசு பாண்டுகளிலும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதில் நீண்ட கால வளர்ச்சி அதிகமாக இருக்காது என்றாலும் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர வருமானம் நிச்சயமாக உண்டு.


குறியீட்டுத் திட்டங்கள் (Coding schemes):


இந்தத் திட்டங்களின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தை குறியீட்டு எண்களை முடிவு செய்யும் நிறுவனப் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள்( Mutual Fund Companies ) முதலீடு செய்கின்றன.


Thanks;----- neelavaitheadi


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Empty Re: இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

Post by பாலாஜி Fri 18 May 2012 - 16:15

பதிவுக்கு மிக்க நன்றி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Empty Re: இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

Post by சார்லஸ் mc Fri 18 May 2012 - 20:19

என்ன வளா்ச்சி திட்டங்களோ போங்கள்.

மியூச்சுவல் ஃபண்டகளில் முதலீடு செய்து முடிவில் - அசலுக்கே ஆபத்தாக முடிந்து போனது என் மனதை மிகவும் பாதித்து விட்டது.

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.


இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Empty Re: இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

Post by கேசவன் Fri 18 May 2012 - 20:25

பதிவுக்கு மிக்க நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 1357389இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் 59010615இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Images3ijfஇந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள் Empty Re: இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum