ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

Top posting users this week
ayyasamy ram
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
heezulia
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
Dr.S.Soundarapandian
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
i6appar
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 
Jenila
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_m10மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

3 posters

Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by பிரசன்னா Thu May 10, 2012 1:47 pm

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் P5

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க, ரய்சினா குன்றத்தின் மீது அமைந்திருக்கும் அந்த நாள் வைஸ்ராய் மாளிகையான இந்நாள் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாளும் கிழமையும் அதிகரித்து வருகிறது. 13வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கப் போகிறவர் என்கிற பெருமைக்குரியவர் இன்னார்தான் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமைக்குக் காரணம், எந்த ஒரு கட்சியும், கூட்டணியும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான்.

÷இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போகும் இந்தியாவின் அடுத்த முதல் குடிமகன் யார் என்கிற சர்ச்சை வலுத்து வருகிறதே தவிர, அதன் பின்னணியில் சில மரபுகள் மீறப்படுவதும் அதன்மூலம் தென்னகம் வஞ்சிக்கப்படுவதும் வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

÷இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950-ல் பதவி ஏற்றபோது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறாத நிலையில், உடனடியாகக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் குடியரசின் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது யாரைக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு தெளிவான கருத்தை முன்வைத்தார்.

÷""இந்தியாவின் ஒற்றுமைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தென்னிந்தியாதான். தென்னிந்திய மக்கள் "தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது' (தில்லி பஹுத் தூர் ஹை) என்று துளியும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் வட நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குடியரசுத் துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராகவும், குடியரசுத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் துணைத் தலைவர் வடநாட்டைச் சேர்நதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல, குடியரசுத் தலைவர் பதவி வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்குமாக மாறிமாறி கிடைக்கும்படியான மரபும் கடைபிடிக்கப்பட வேண்டும்'' என்று தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதுடன் நிற்கவில்லை.

÷குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சார்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் பண்டித ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. அறிஞர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக வருவதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். "தத்துவ மேதை' டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்வு பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட தேர்வாக இருந்தது.

÷குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு முதன்முதலில் பிரதமர் இந்திரா காந்தியால் 1974-ல் மீறப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜி.எஸ். பதக்குக்கு பதிலாக பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1977, 1982, 2002, 2007 தேர்தல்களிலும் இந்த மரபு மீறப்பட்டது.

ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் என்று வடக்கும் தெற்கும் மாறி மாறிக் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த மரபு முதல் முறையாக மீறப்பட்டது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். அப்போதும்கூடத் துணைத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மிகப்பெரிய மரபு மீறல் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த கட்சி "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டுத் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

÷தென்னிந்தியரான (தமிழரான) ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவராக வடநாட்டைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் வருவதைத் திமுக ஆதரித்ததில் தவறில்லை. மரபுப்படி வடநாட்டவர் குடியரசுத் தலைவராக வேண்டியதுதான் முறையும் கூட. ஆனால், குடியரசுத் துணைத் தலைவராகத் தென்னிந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மரபு வழி நின்று திமுக குரல் கொடுத்திருக்க வேண்டாமா என்பதுதான் கேள்வி.


மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்குப் பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திமுகவின் ஆதரவு இருந்தாக வேண்டும் என்கிற நிலைமையும் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

÷"தினமணி' தனது தலையங்கத்தின் மூலம் மரபு மீறப்படுவதை சுட்டிக்காட்டியது மட்டுமல்ல, ஏன் திமுகவின் பொதுச் செயலாளரான க. அன்பழகனைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பி இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.


÷அப்படிச் செய்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் ஒரு தென்னிந்தியர்தான் மரபுப்படி குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருந்தால், இப்போதைய குடியரசுத் தேர்தலின் போக்கே மாறி இருக்கக் கூடும். அப்படி குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் தென்னிந்தியரின் பெயர்தான் மரபுவழி குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னணி வகிக்கும் பெயராக இருந்திருக்கும்.

÷இப்போது 13வது குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் மரபு மீறப்பட்டு தெற்கு வஞ்சிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மரபு வழி பார்த்தால், இந்த முறை குடியரசுத் தலைவர் பதவி ஒரு தென்னிந்தியருக்குத் தான் தரப்பட வேண்டும். அவர் தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமாக இருந்தாலும் சரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் சரி. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராகத் தென்னிந்தியர் ஒருவரின் பெயர் கூடப் பேசப்படுவதில்லை.

÷இந்த முறை மீண்டும் வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த மரபு, இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க அவர் ஏற்படுத்திய மரபு மீறப்படுவது மட்டுமல்ல, இனி வரும் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தென்னிந்தியர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் நிலைமைகூட ஏற்பட்டாலும் ஏற்படலாம்; படும்!

÷அப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிற பெருமை கருணாநிதியைத்தான் சாரும் - தெற்கை வஞ்சித்து வடக்கு வளர்வதற்கு உதவிய பெருமை!

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty Re: மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by பிரசன்னா Thu May 10, 2012 1:50 pm

கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.

தினமணி நாழிதல் தவறு செய்து விட்டு கருணாநிதியின் மேல் குறை சொல்கிறார்கள்.... தினமணி என்ன செய்து இருக்க வேண்டும்... அஞ்சாநெஞ்சன் அழகிரி பெயரையோ அல்லது கனிமொழியின் பெயரையோ பரிந்து இருந்தால் நிச்சயம் நடந்து இருக்கும் அதை விட்டு விட்டு சும்மா கே. அன்பழகன், "விடுதலை' கி. வீரமணி என்றால் எப்படி என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty Re: மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by பிரசன்னா Thu May 10, 2012 1:52 pm

பிரசன்னா wrote:
கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால், அவர் உண்மையிலேயே திராவிடப் பற்றாளராக இருந்திருந்தால் கே. அன்பழகனையோ, ஏன், "விடுதலை' கி. வீரமணியையோ கூடக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அந்தப் பதவியில் அமர்த்திப் பெருமிதம் அடைந்திருக்க முடியும்.

தினமணி நாழிதல் தவறு செய்து விட்டு கருணாநிதியின் மேல் குறை சொல்கிறார்கள்.... தினமணி என்ன செய்து இருக்க வேண்டும்... அஞ்சாநெஞ்சன் அழகிரி பெயரையோ அல்லது கனிமொழியின் பெயரையோ பரிந்து இருக்க வேண்டும்.... அப்படி எழுதியிருந்தால் நிச்சயம் குடியரசுத் துணைத் தலைவர் பதவி நமக்கு கிடைத்து இருக்கும் அதை விட்டு விட்டு சும்மா கே. அன்பழகன், "விடுதலை' கி. வீரமணி என்றால் எப்படி என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty Re: மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by கேசவன் Thu May 10, 2012 5:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் 1357389மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் 59010615மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Images3ijfமீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty Re: மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by இரா.பகவதி Thu May 10, 2012 8:37 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம் Empty Re: மீறப்படும் மரபு; வஞ்சிக்கப்படும் தென்னகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum