ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடன் மேடை - சந்தானம்

4 posters

Go down

விகடன் மேடை - சந்தானம்  Empty விகடன் மேடை - சந்தானம்

Post by பிரசன்னா Thu May 10, 2012 12:10 pm

பி.மகுடேஸ்வரன், குருவிக்கரம்பை.

''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?''

''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம்.

என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க. ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா. ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை மிஸ்டர் மகுடேஸ்!''

விகடன் மேடை - சந்தானம்  P38

ஆர்.குமரேசன், தல்லாகுளம்.

''விஜய், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யானு ஹீரோக்களே சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, வடிவேலு - சந்தானம் காம்பினேஷன் இனிமேல் சாத்தியமா? எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்க ஆசையா இருக்கே?''

''எனக்கும் அந்த ஆசை இருக்கு. நான் ரெடிங்க!''

கே.திவ்யகுமாரி, மீனம்பாக்கம்.

''நீங்க பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஆனாலும், பக்கா மெட்ராஸ் பாஷை பேசி ஒரு படம்கூட நடிக்கலையே நீங்க... ஏன்?''

''என்ன திவ்யா... நம்மகிட்டயே காமெடி பண்றீங்க. இப்ப நான் பேசுறது எந்த ஊர் பாஷைனு நினைச்சுட்டு இருக்கீங்க? 'எப்டிக்கீற? நாஷ்டா துன்னியா? இட்னு வா... வலிச்சுனு வா’னு பேசுற பழைய மெட்ராஸ் பாஷையை மனசுலவெச்சுட்டுக் கேக்குறீங்கனு நினைக்குறேன். அப்படிலாம் இப்ப சென்னையிலயே யாரும் பேசாதப்ப, நான் மட்டும் பேசினா ரொம்ப கேரிங்கா இருக்குங்க. இப்பல்லாம் மெட்ராஸ் பொண்ணுங்க செம டீசன்ட்டா இங்கிலீஷ்லதான் கலக்கு றாங்க. அவங்களுக்கு ஈக்குவலா இல்லாங் காட்டியும் பசங்களும் தமிழையே இங்கிலீஷா ரீ-மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க. அதைத்தான் நானும் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக் கேன். இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ படத்துலகூட பக்கா ட்ரிப்லிக்கேன் பாஷைதான் பேசி யிருப்பேன். அதைக் கவனிக்கலையா நீங்க? ஆங்... பை தி பை... திவ்யகுமாரி, நீங்க லூஸ் மோகன் ரசிகையா?''




அ.கிருஷ்ணமூர்த்தி, பல்லாவரம்.

''தமிழ் சினிமாவில் காமெடின்னா ஆண்கள்தானா... ஏன் பெண்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கவே மாட்டேங்கிறீங்க?''

விகடன் மேடை - சந்தானம்  P38a

''எப்பவுமே இப்படினு சொல்ல முடியாது. ஒருகாலத்துல மனோரமா ஆச்சி கொடுத்த ஸ்பேஸ் போகத்தான் எல்லாருக்கும் இடம் இருந்தது. தங்கவேல் சார், நாகேஷ் சார், சந்திரபாபு சார்னு வளைச்சு வளைச்சு எல்லாருக்கும் ஜோடியா நடிச்சுட்டு இருந்தாங்க ஆச்சி. அதுக்குப் பிறகு, கோவை சரளா மேடம் அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா, அவங்களுக்கு அப்புறம் யாரும் வரலை. பார்ப்போம்... யாராவது வருவாங்க... அது வரைக்கும் 'அவள் வருவாளா... அவள் வருவாளா’னு நாம பாட்டு பாடிட்டு இருப்போம்!''

எஸ்.சிவகுமார், நாகப்பட்டினம்.

''நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி... இவங்கள்ல யார் உங்களுக்கு நெருக்கமான தோழி?''

''நல்ல வேளை... என் நெருக்கமான தோழி பேரு இந்த லிஸ்ட்ல இல்லை. கிரேட் எஸ்கேப்!''

பெ.மணிகண்டன், செல்லூர்.

''தமிழில் எந்த ஹீரோவுடன் நடிப்பது உங்க கனவா இருந்தது?''

''ரஜினி சார்தான். அந்த அளவுக்கு அவரோட தீவிர வெறி பிடிச்ச ரசிகன். 'எந்திரன்’ மூலம் அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு. 'எந்திரன்’ ஷூட்டிங்ல என் டயலாக்கை எல்லாம் மறந்துட்டு, ரஜினி சார் நடிக்கிறதையே பார்த்துட்டு நிப்பேன். 'ஏன்... ஏன்... என்ன... என்ன... என்ன ஆச்சு சந்தானம்?’னு சார் பதற்றமா கேட்பார். 'இல்ல சார்... நீங்க நடிக்கிறதையே பாத்துட்டு இருந்துட்டேன்’னு சொல்வேன். 'ஓ.கே. நான் நடிச்சதைப் பார்த்துட்டீங்க. நீங்க என்ன நடிக்கிறீங்கனு நான் பார்க்கணும்ல. அதுக்காகவாவது நடிங்க சார்’னு கிண்டலடிப்பார். நாம ஏதாவது செட்ல காமெடி பண்ணா, அவரும் ஜாலியா சேர்ந்து கலாய்ப்பார். சீன்ல என் காமெடி டயலாக் டெலிவரி எல்லாத்தை யும் ரசிப்பார். 'சூப்பர்... சூப்பர்’னு என்கரேஜ் பண்ணுவார். கடைசியில ஒரு சீரியஸான சீன். நான் ரொம்பவே திணறிட்டேன். 'அப்பா, காமெடின்னா மட்டும் பபபபனு பேசிடுற. சீரியஸ் சீன்ல சிக்கிக்கிட்ட பார்த்தியா’னு சிரிச்சார். சார் செம ஸ்ட்ரிக்ட்டு... ஆனா, செம சாஃப்ட்டு!''

விகடன் மேடை - சந்தானம்  P38c

கா.மனோகரன், திருச்சேறை.

''எப்பவும் ஹீரோவுக்கு நண்பனாவே காமெடியன் வர்றது ஏன்?''

''இந்தக் கேள்வியைத்தாங்க நானும் எல்லா டைரக்டர்கள்கிட்டயும் கேட்டுட்டே இருக்கேன். அட... ஹீரோவுக்கு மட்டும்தான் உலகத்துல ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்களா? அந்த ஹீரோயின் ஹீரோயின்னு ஒருத்தங்க நடிக்கிறாங்களே... அவங்களுக்குலாம் பசங்க ஃப்ரெண்ட்ஸா இருக்க மாட்டாங்களா? 'அந்த கேரக்டர்ல ஒரு பொண்ணுதான் நடிக்கணும், நீ பையன். நடிக்கக் கூடாது’னு ஏதோ சினிமா இலக்கணத்தை மீறக் கூடாதுங்கிற மாதிரி சொல்றாங்க. அட... இந்த மாற்று சினிமா... ரியல் சினிமானு ஏதேதோ சொல்றாங்களே... அதுலயாச்சும் ஹீரோயினுக்கு ஒரு காமெடி யனை ஃப்ரெண்ட் ஆக்குங்கப்பா... அன் லிமிடெட் கால்ஷீட் தர்றேன்.''

ஆர்.சாய்மீரா, சென்னை-91.

''நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ஸ்கூல்ல வாத்தியார்கிட்ட அடிலாம் வாங்கி இருக்கீங்களா? ('சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா’னு கலாய்க்கக் கூடாது!)''

''டிப்ளமோ இன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்... சுருக்கமா டி.இ.சி. படிச்சிருக்கேன். அதுவே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் படிச்சேன். வாத்தியார்களையே கலாய்ச்ச சம்பவம்தான் நிறைய இருக்கு. ஒரு சின்ன சாம்பிள்... கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். காலையில நாலு பீரியட், மத்தியானம் மூணு பீரியட். மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டுப் போறப்ப ஒரே ஒரு புக்கை மட்டும் கைல வெச்சு ஸ்டைலா சுத்திக்கிட்டே ஸ்கூலுக்குப் போவேன். அப்படி ஒரு தபா போனப்ப, 'எங்கடா என் சப்ஜெக்ட் புக்?’னு வாத்தியார் கேட்டாரு. என்ன பண்றதுனு தெரியாம, 'இல்லைங்க சார்... வர்ற வழியில ஒருத்தர் புடுங்கிக்கிட்டாரு’னு சமாளிச்சேன். அப்புறம் அப்புறம் அவர் கேட்டப்பவும் அதே காரணத்தைச் சொன்னேன். ஒரு நாள் என்னை இறுக்கிப் புடிச்சுட்டாரு... 'புக்கை எவனாவது புடுங்குவானா? உன்கிட்ட புத்தகத்தைப் புடுங்குனது யார்னு சொல்லு... நான் என்னன்னு கேக்குறேன்?’னு என்னை ஸ்கூட்டர்ல தூக்கிப் பின்னால உட்காரவெச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு. 'என்ன பண்ணி டபாய்க்கலாம்’னு யோசிச்சுட்டே போறேன். ஒரு நாலு ரோடு சந்திப்புல ஸ்கூட்டரை நிப்பாட்டச் சொன்னேன். 'எங்கடா, யார்றா அது?’னு சுத்திமுத்திப் பார்த்துட்டே கேட்டார். 'அதோ அவருதான் சார்’னு கை காமிச்சுட்டு, வீட்டுப் பக்கம் ஓடிட்டேன். வாத்தியார் திரும்பிப் பார்த்தா, அங்கே கையில புத்தகத்தை வெச்சிட்டு சிலையா நிக்கிறார் பாரதியார். பயங்கர காண்டாயிட்டார் மனுஷன். 'டேய்...’னு நடுரோட்ல நின்னுட்டு ஆந்திரா வில்லன் மாதிரி கத்தினார். அக்கம்பக்கத்துல நின்னவங்க கூடி விசாரிச்சதும், விஷயத்தைச் சொல்லியிருக்கார். 'ஏன்யா, வாத்தியார் வேலைதானே பாக்குற... அறிவில்லையா உனக்கு. சின்னப் பையன் சொல்றான்னு கேட்டுக்கிட்டு இவ்ளவு தூரமா வருவ?’னு எல்லாரும் அவரைப் போட்டுக் கலாய்ச்சிட்டாங்க. இந்த மாதிரி மத்தவங்களை மாட்டிவிட்டு பிரச்னை ஆனது நிறைய இருக்கு!''



- அடுத்த வாரம்...

''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்போ எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடிகாலா காலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?''

''இப்போதைக்கு காமெடியில் உச்சகட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?''

''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?''

- இன்னும் கலாய்க்கலாம்...

ஆனந்த விகடன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விகடன் மேடை - சந்தானம்  Empty Re: விகடன் மேடை - சந்தானம்

Post by யினியவன் Thu May 10, 2012 1:01 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.

வாத்தியாரை பாரதி சிலை வரை கொண்டு சென்றது சூப்பர்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விகடன் மேடை - சந்தானம்  Empty Re: விகடன் மேடை - சந்தானம்

Post by பாலாஜி Thu May 10, 2012 1:11 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா. மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விகடன் மேடை - சந்தானம்  Empty Re: விகடன் மேடை - சந்தானம்

Post by ந.கார்த்தி Thu May 10, 2012 2:15 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விகடன் மேடை - சந்தானம்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விகடன் மேடை - சந்தானம்  Empty Re: விகடன் மேடை - சந்தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum