Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்தும் குழந்தைகளும் ..
Page 1 of 1
விவாகரத்தும் குழந்தைகளும் ..
குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும். இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம். உண்மையில் பெற்றோரைவிட குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம். எந்த நிலையிலும்
தன் அம்மாவோ அப்பா துன்புற தான் காரணமாகி விடக் கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு. விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகி விட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும்: உன்னால்தான் இதை விட்டேன் “ என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள். இப்போதெல்லாம் என் மகன் ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் நான் ஆராய்ச்சியை விட்டுவிட்டு மேலே படிக்க சென்றபோது யாராவது உனக்காகத்தானே என்று சொல்லி விட்டால் முகம் வாடிப் போவான். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் குழந்தைகள் காரணம் இல்லை.
அதேபோல சில சமயம் கணவன் மீது உள்ள கோபத்தை குழந்தைகளிடம் காட்டுவதும் தவறு. அவர்கள் செய்யாத குற்றத்திற்கு கோபம் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கிறது.
சமீபத்தில் விலகிவிட நினைத்து வெளியேறிய பெண்ணின் 4 வயது குழந்தையை பரீசீலித்த மன நல மருத்துவர் அவன் விவாகரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற் தெரிவித்தார்.
லயன் கிங் திரைப்படத்தில் எந்த பாத்திரம் பிடிக்கும் என்று கேட்டபோது ஸ்கார் என்று சொல்லி இருக்கிறான். ஏன் என்று கேட்டபோது அவன், நானும் அவனைப்போல எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று பதில் சொல்லி இருக்கிறான். அவனை படம் வரைய சொன்ன போது அவன் இறந்து விட்டதை போலவும் அதன் பின் அவன் அம்மா மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் வரைந்திருக்கிறான். நீ இல்லாவிட்டால் எனக்கு இந்த கஷ்டம் இல்லை என்றோ, இந்த பிள்ளைங்க இல்லாட்ட இத்தனை கஷ்டப்பட தேவையிலை என்று அவரின் தோழிகளோ சொல்லும் போது அவனுக்கு தான் இருப்பதுதான் அம்மாவை காயப்படுத்துகிறது என்று தோன்றி இருக்கிறது. கண்ணுக்கு கீழே உடலில் என்றெல்லாம் கீறிக் கொண்டிருந்திருக்கிறான்.
இன்னும் சிலர் மறுமணம் செய்துகொள்ளும் போது புதிய துணைவனை வருத்திவிட கூடாது என்று இன்னும் அதிக கவனத்துடன் இருக்கும் போது குழந்தைகளிடம் அதிகம் பழகுவதோ நேரம் செலவழிப்பதோ இல்லை. விவாகரத்தால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதால், அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவும் அன்பும் தேவை.
வளர்ப்பு தந்தையோ தாயோ குழந்தைகளிடம் அன்பை பெற இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும். மாறாக எடுத்த உடனே குழந்தைகள் அனபு செலுத்த வில்லை என்றால் அதை கண்டிப்பது, வெறுப்பை வளர்த்துவிடும். குழந்தைகள் அம்மா அல்லது அப்பா தன் புதிய துணைவன்/வியிடம் செலுத்தும் அன்பை கண்டு, அவர்கள் மேல் தான் குற்றம் சொல்வது அவர்கள் உறவை பாதிக்குமா என்றும் சொல்வதை நம்புவார்களா என்ற பயமும், அதைவிட தன்னை துன்புறுத்துவார்களா என்ற அச்சமும் சொல்லவிடுவதில்லை.
இதை தவிர பாலியல் துன்பங்கள் ஏற்படும் போது தன் மீது குற்றம் என்ற எண்ணமும், புரியாத வயதில் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் நம்ப மறுப்பதும் காரணம்.
குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். சரியாக சாப்பிடாமல் இருந்தால், மதிப்பெண்கள் குறைந்தால், உடலில் காயங்கள் வருவது அதிகமானால் அவர்களுடன் பேசுவது மிக நல்லது. சொல்வதை கவனமாக கேட்காமல் உடனே அவர்கள் மீது கோபப்படாதீர்கள்.
நல்லதும் அல்லதையும் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்வது மிக அவசியம்.
குழந்தைகள், பதின்ம வயதினருக்கு நட்பு அளவிலும் துன்பங்கள் நேரிடலாம். என் மகன் 6 வயதாக இருக்கும் போது மைக்கல் என்ற நண்பன் இருந்தான். அவனை நாங்கள் வீட்டிற்கு இரவு தங்கி விளையாட அழைத்திருந்தபோது மைக்கலுக்கு விருப்பம் இல்லாத விளையாட்டுகளை விளையாட அழைத்தால் அவன் மறுப்பதும், அவன் சொல்கிற எல்லாவற்றையும் என் மகன் செய்வதையும் பார்த்தோம். எனக்கு சரியில்லை என்று தோன்றிய போதும் அவனாக பேசட்டும் என்று விட்டு விட்டோம். மைக்கல் போனபின், என் மகன் அழ ஆரம்பித்து விட்டான். நான் எனக்கு பிடித்த எதையும் செய்ய முடியவில்லை என்று. நீ ஏன் விட்டு கொடுத்தாய் என்று கேட்டபோது இல்லை என்றால் மைக்கல் தன் வீட்டிற்கு போய் விடுவேன் என்று சொன்னான் என்று பதில் வந்தது.இது நடந்து மூன்று வாரங்களுக்கு பின், என் மகனின் வகுப்பாசிரியை என்னிடம்” Michael has a control over Varun, there is no equality in their friendship, would you like us to address it” என்றும் சொன்னார். அதன் பின் நானும் வகுப்பாசிரியை, பள்ளி கவுன்சிலர் மூவரும் அவனிடம் பொறுமையாக நான் விரும்பாதை செய்யாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன் என்று சொல்வதும் அதற்கு பயந்து உன் விருப்பங்களை மாற்றி கொள்வதும் தவறு என்று எடுத்து சொன்னோம். நண்பர்கள் அல்லது சகோதரர்கள் இடையே சம அளவு மரியாதையும் புரிந்துணர்வும் வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.
இதை சிறிய வயதில் கவனிக்காமல் விட்டிருந்தால், வளர்ந்த பின்னும் பிறருக்காக தன் விருப்பங்களை விட்டு கொடுப்பதும் உணர்ச்சி பயமுறுத்தல்களுக்கு அடிபணிவதும் பழகி இருக்கும்.
ஆகையால் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் சொல்வதை கேளுங்கள்.
நன்றி ---- பத்மா அர்விந்த்.
தன் அம்மாவோ அப்பா துன்புற தான் காரணமாகி விடக் கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு. விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகி விட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும்: உன்னால்தான் இதை விட்டேன் “ என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள். இப்போதெல்லாம் என் மகன் ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் நான் ஆராய்ச்சியை விட்டுவிட்டு மேலே படிக்க சென்றபோது யாராவது உனக்காகத்தானே என்று சொல்லி விட்டால் முகம் வாடிப் போவான். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் குழந்தைகள் காரணம் இல்லை.
அதேபோல சில சமயம் கணவன் மீது உள்ள கோபத்தை குழந்தைகளிடம் காட்டுவதும் தவறு. அவர்கள் செய்யாத குற்றத்திற்கு கோபம் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கிறது.
சமீபத்தில் விலகிவிட நினைத்து வெளியேறிய பெண்ணின் 4 வயது குழந்தையை பரீசீலித்த மன நல மருத்துவர் அவன் விவாகரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற் தெரிவித்தார்.
லயன் கிங் திரைப்படத்தில் எந்த பாத்திரம் பிடிக்கும் என்று கேட்டபோது ஸ்கார் என்று சொல்லி இருக்கிறான். ஏன் என்று கேட்டபோது அவன், நானும் அவனைப்போல எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று பதில் சொல்லி இருக்கிறான். அவனை படம் வரைய சொன்ன போது அவன் இறந்து விட்டதை போலவும் அதன் பின் அவன் அம்மா மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் வரைந்திருக்கிறான். நீ இல்லாவிட்டால் எனக்கு இந்த கஷ்டம் இல்லை என்றோ, இந்த பிள்ளைங்க இல்லாட்ட இத்தனை கஷ்டப்பட தேவையிலை என்று அவரின் தோழிகளோ சொல்லும் போது அவனுக்கு தான் இருப்பதுதான் அம்மாவை காயப்படுத்துகிறது என்று தோன்றி இருக்கிறது. கண்ணுக்கு கீழே உடலில் என்றெல்லாம் கீறிக் கொண்டிருந்திருக்கிறான்.
இன்னும் சிலர் மறுமணம் செய்துகொள்ளும் போது புதிய துணைவனை வருத்திவிட கூடாது என்று இன்னும் அதிக கவனத்துடன் இருக்கும் போது குழந்தைகளிடம் அதிகம் பழகுவதோ நேரம் செலவழிப்பதோ இல்லை. விவாகரத்தால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதால், அந்த நேரத்தில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவும் அன்பும் தேவை.
வளர்ப்பு தந்தையோ தாயோ குழந்தைகளிடம் அன்பை பெற இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும். மாறாக எடுத்த உடனே குழந்தைகள் அனபு செலுத்த வில்லை என்றால் அதை கண்டிப்பது, வெறுப்பை வளர்த்துவிடும். குழந்தைகள் அம்மா அல்லது அப்பா தன் புதிய துணைவன்/வியிடம் செலுத்தும் அன்பை கண்டு, அவர்கள் மேல் தான் குற்றம் சொல்வது அவர்கள் உறவை பாதிக்குமா என்றும் சொல்வதை நம்புவார்களா என்ற பயமும், அதைவிட தன்னை துன்புறுத்துவார்களா என்ற அச்சமும் சொல்லவிடுவதில்லை.
இதை தவிர பாலியல் துன்பங்கள் ஏற்படும் போது தன் மீது குற்றம் என்ற எண்ணமும், புரியாத வயதில் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் நம்ப மறுப்பதும் காரணம்.
குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். சரியாக சாப்பிடாமல் இருந்தால், மதிப்பெண்கள் குறைந்தால், உடலில் காயங்கள் வருவது அதிகமானால் அவர்களுடன் பேசுவது மிக நல்லது. சொல்வதை கவனமாக கேட்காமல் உடனே அவர்கள் மீது கோபப்படாதீர்கள்.
நல்லதும் அல்லதையும் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் எடுத்த எந்த முடிவிற்கும் அவர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்வது மிக அவசியம்.
குழந்தைகள், பதின்ம வயதினருக்கு நட்பு அளவிலும் துன்பங்கள் நேரிடலாம். என் மகன் 6 வயதாக இருக்கும் போது மைக்கல் என்ற நண்பன் இருந்தான். அவனை நாங்கள் வீட்டிற்கு இரவு தங்கி விளையாட அழைத்திருந்தபோது மைக்கலுக்கு விருப்பம் இல்லாத விளையாட்டுகளை விளையாட அழைத்தால் அவன் மறுப்பதும், அவன் சொல்கிற எல்லாவற்றையும் என் மகன் செய்வதையும் பார்த்தோம். எனக்கு சரியில்லை என்று தோன்றிய போதும் அவனாக பேசட்டும் என்று விட்டு விட்டோம். மைக்கல் போனபின், என் மகன் அழ ஆரம்பித்து விட்டான். நான் எனக்கு பிடித்த எதையும் செய்ய முடியவில்லை என்று. நீ ஏன் விட்டு கொடுத்தாய் என்று கேட்டபோது இல்லை என்றால் மைக்கல் தன் வீட்டிற்கு போய் விடுவேன் என்று சொன்னான் என்று பதில் வந்தது.இது நடந்து மூன்று வாரங்களுக்கு பின், என் மகனின் வகுப்பாசிரியை என்னிடம்” Michael has a control over Varun, there is no equality in their friendship, would you like us to address it” என்றும் சொன்னார். அதன் பின் நானும் வகுப்பாசிரியை, பள்ளி கவுன்சிலர் மூவரும் அவனிடம் பொறுமையாக நான் விரும்பாதை செய்யாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன் என்று சொல்வதும் அதற்கு பயந்து உன் விருப்பங்களை மாற்றி கொள்வதும் தவறு என்று எடுத்து சொன்னோம். நண்பர்கள் அல்லது சகோதரர்கள் இடையே சம அளவு மரியாதையும் புரிந்துணர்வும் வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.
இதை சிறிய வயதில் கவனிக்காமல் விட்டிருந்தால், வளர்ந்த பின்னும் பிறருக்காக தன் விருப்பங்களை விட்டு கொடுப்பதும் உணர்ச்சி பயமுறுத்தல்களுக்கு அடிபணிவதும் பழகி இருக்கும்.
ஆகையால் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் சொல்வதை கேளுங்கள்.
நன்றி ---- பத்மா அர்விந்த்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குழந்தைகளும் இன்டர்நெட்டும்
» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்-
» குளிர்காலமும் குழந்தைகளும்!
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்
» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்-
» குளிர்காலமும் குழந்தைகளும்!
» குழந்தைகளும் தொலைக்காட்சியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|