ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

5 posters

Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by சிவா Sun Apr 29, 2012 7:34 am

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்தார்.

பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

பெட்ரோல் விலை

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.

மன்மோகன் சிங் தகவல்

எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-

எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.

விலை உயர்வு அவசியம்

வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.

கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ரூ.2 லட்சம் கோடி இழப்பு

டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி


எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 9:02 am

அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by யினியவன் Sun Apr 29, 2012 2:31 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
ஆமா சதத்தில் சதம் அடிச்சவரை புது எம்பி ஆக்கிட்டாங்க - இதுவும் சதம் அடிச்சிடும் ரமேஷ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by balakarthik Sun Apr 29, 2012 2:40 pm

காசிருக்குறவனுக்கு கால்டாக்ஸ்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்சி என்ற கோட்பாடுடன் வாழும் நாங்கள் தற்பொழுது லிப்ட் கேட்போர் சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் எங்களுக்கு கவலை இல்லை என்பதை பெருமிதத்துடம் பல பேர் வயிறெரிய கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by மகா பிரபு Sun Apr 29, 2012 8:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
அடுத்த வருடம் இரட்டை சதம் அடிக்கும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Empty Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum