Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
selvanrajan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
+5
காளைவேந்தன்
ராஜா
பாலாஜி
யினியவன்
பிரசன்னா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், நேற்று துவங்கிய மாவட்ட காங்., தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில், எம்.எல்.ஏ., ஞானசேகரன், இளைஞர் காங்., தலைவர் யுவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, மணமக்கள் மதுசூதனன்- கணபதி ருச்சிரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின் அவர் செய்தியாளர்களிடம், ’’இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது இந்தியா. அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும், அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் தலைமையில், மத்திய அரசு கடந்த மாதம் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை, இலங்கைக்கு அனுப்பியது.
தமிழர்கள் இழந்த வீடு, நிலங்களை பெற்றுத் தர வேண்டும். சிங்களர்களுக்கு நிகரான உரிமையை பெற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை, அங்குள்ள தமிழக மக்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழுவின் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த பயணம், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் கொடுக்கும் என நம்புகிறோம்.
இலங்கை பிரச்னையை பொறுத்தவரை, மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் இலங்கைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது. குழுவினர் ஆட்சியாளர்கள், அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து, தமிழர்களின் நிலை குறித்தும், வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளனர்.
இக்குழுவினர், விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில், பிரச்னைகளை முழுமையாக தீர்வு கண்டு, தமிழர்கள் வாழ்க்கை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறினார்.
நக்கீரன்
பின் அவர் செய்தியாளர்களிடம், ’’இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது இந்தியா. அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும், அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் தலைமையில், மத்திய அரசு கடந்த மாதம் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை, இலங்கைக்கு அனுப்பியது.
தமிழர்கள் இழந்த வீடு, நிலங்களை பெற்றுத் தர வேண்டும். சிங்களர்களுக்கு நிகரான உரிமையை பெற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை, அங்குள்ள தமிழக மக்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழுவின் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த பயணம், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் கொடுக்கும் என நம்புகிறோம்.
இலங்கை பிரச்னையை பொறுத்தவரை, மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் இலங்கைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது. குழுவினர் ஆட்சியாளர்கள், அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து, தமிழர்களின் நிலை குறித்தும், வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளனர்.
இக்குழுவினர், விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில், பிரச்னைகளை முழுமையாக தீர்வு கண்டு, தமிழர்கள் வாழ்க்கை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறினார்.
நக்கீரன்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
மூப்பனாரின் சன்னே வாசனே - சோனியா அன்னை சொன்னத சொல்லிபூட்ட சன்னே நீவிர் வாழ்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
காங்கிரஸ் நண்பர்களே நீங்க வேற ஏதாவது படம் ஒட்டுங்க ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
வை.பாலாஜி wrote:காங்கிரஸ் நண்பர்களே நீங்க வேற ஏதாவது படம் ஒட்டுங்க ..
இருந்த ஒட்டுவாங்க.... இப்ப ஆளும்கட்சிய பத்தி பேசினா ஆப்பு டாப்ல எகிறிடும், அப்புறம் எத வைத்து அரசியல் பண்ணுறது.... !
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
காங்கிரஸ் ஐ மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை பூண்டோடு அழித்து விட்டால் அந்த உரிமையை பெற்று விடுவார்கள் , செய்ய தயாரா வாசன் அவர்களே
Guest- Guest
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
தமிழக காங்கிரஸ் அழிவு காலம் தொடங்கி ரொம்ப நாள் ஆகிறது ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
ஆடு நனையிதேன்னு
ஓனாய் கவலைப்பட்டுசாம்...!!
ஓனாய் கவலைப்பட்டுசாம்...!!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன் Image00045y](https://2img.net/r/ihimizer/img835/6533/image00045y.jpg)
காளைவேந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
ராஜா wrote:![]()
, இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அதை பெற்றுக்கொள்வார்கள். நீங்க சோனியாக்கு கொடிபிடிக்கிறத மட்டும் பாருங்க வாசன்னே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
பசியுள்ள ஓநாய்களுக்கு பௌர்ணமி நிலவாக தமிழக அரசியல்வாதிகளுக்கு "தமிழ் ஈழம்''!- ஓநாய் இந்து நாளிதழ்
பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்"ஈழம்'' இருக்கின்றது என்று இலங்கைக்கு ஆதரவான இந்து பத்திரிகை சாடியுள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.
"பிரச்சினையின் ஓர் அங்கம்' என்று மகுடமிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப்பத்திரிகை திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அவர்கள் உரத்து ஊளையிடுவது தொலைவிலுள்ள ஈழக்கனவுக்கான அழுகை அல்ல. ஆனால் இங்கு இப்போதுள்ள அரசியலின் அவசரத்தளமாக இருப்பதன் அறிகுறியாக காணப்படுகிறது.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தனிநாட்டை உருவாக்குவதற்கான அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்தார்.
மொன்ரனிகிரோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ போன்ற நாடுகளை அடியொற்றியதாக தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பு கருணாநிதியால் விடுக்கப்பட்டிருக்கிறது.
சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய இணக்கப்பாட்டை எட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு அப்பால் வெகு தொலைவிற்கு விலகிச் சென்று இந்த உணர்வுபூர்வமான விடயத்தை தமிழ்நாட்டில் அரசியல் மயப்படுத்துவதற்கு மேலும் கருணாநிதி தீனி போடுவதாக தென்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வை ஒரு கருவியாக மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மிகவும் நியாயமான வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஜெனீவாவில் அண்மையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தமானது சிறிய அளவினதானதொன்று அல்ல. ஆனால் இனங்களின் அடிப்படையில் இலங்கையில் பிரிவினைக்காக ஐ.நா. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமென்ற பரிந்துரையை முன்வைப்பதானது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தயக்கமின்றி எதிர்ப்பதற்கான விளைவை மட்டுமே இது கொண்டிருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியாயமற்ற கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக வெளிப்படுத்துவதானது சிறிய அளவு அனுகூலத்தை வென்றெடுப்பதிலும் பார்க்க நிலைமையை மோசமாக்குகின்றது.
கொசோவோ, மொன்ரனிகிரோ, தெற்கு சூடான் அல்லது கிழக்கு திமோரை இலங்கைக்கு எந்த விதத்திலும் ஒப்பிடக் கூடியதாக இல்லை. சர்வஜன வாக்கெடுப்புகள் அல்லது வெளிமட்டத் தலையீடுகளின் மூலம் புதிய தேசங்கள் உருவாக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே கருணாநிதி பார்க்கின்றார்.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதனை நம்பிக்கையளிக்கும் வகையில் வலுவானதாக உருவாக்கும் விடயத்தை அவர் நாடியிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணமொன்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.
செக்கோசிலாவாக்கியா பற்றி அவர் உதாரணம் காட்டியிருந்தார். செக்கோசிலாவாக்கியாவானது செக் குடியரசாகவும் சிலவாக்கியாவாகவும் பிரிந்திருந்தது. கருணாநிதியின் வார்த்தைகளில் இந்த விடயமானது, குருதி சிந்தாத பிரிவினையாகும்.
கடுமையான வேறுபாடுகள், பிளவுகள் நிலவும் நாடொன்றின் மோதலுக்கு சமாதானமான தீர்வாக அவர் இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அர்த்தமெதுவும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஆரவாரத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசிடம் எழுப்புவதற்கு தி.மு.க. தலைவர் சிறப்பான முறையில் செயற்பட முடியும்.
நீண்டகாலமாகத் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு துரிதமான பெறுபேறை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு மௌனமாகவோ அல்லது இதர வழியிலோ கருணாநிதி உதவமுடியும்.
இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே சமயம் அங்குள்ள தமிழர்களுக்கு விரைவான பெறுபேறுகளை எட்டக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வழங்குவதற்கு கருணாநிதி உதவ வேண்டும்.
நல்நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நாடும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்.
நன்றி லங்காஸ்ரீ
பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்"ஈழம்'' இருக்கின்றது என்று இலங்கைக்கு ஆதரவான இந்து பத்திரிகை சாடியுள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.
"பிரச்சினையின் ஓர் அங்கம்' என்று மகுடமிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப்பத்திரிகை திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அவர்கள் உரத்து ஊளையிடுவது தொலைவிலுள்ள ஈழக்கனவுக்கான அழுகை அல்ல. ஆனால் இங்கு இப்போதுள்ள அரசியலின் அவசரத்தளமாக இருப்பதன் அறிகுறியாக காணப்படுகிறது.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தனிநாட்டை உருவாக்குவதற்கான அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்தார்.
மொன்ரனிகிரோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ போன்ற நாடுகளை அடியொற்றியதாக தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பு கருணாநிதியால் விடுக்கப்பட்டிருக்கிறது.
சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய இணக்கப்பாட்டை எட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு அப்பால் வெகு தொலைவிற்கு விலகிச் சென்று இந்த உணர்வுபூர்வமான விடயத்தை தமிழ்நாட்டில் அரசியல் மயப்படுத்துவதற்கு மேலும் கருணாநிதி தீனி போடுவதாக தென்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வை ஒரு கருவியாக மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மிகவும் நியாயமான வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஜெனீவாவில் அண்மையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தமானது சிறிய அளவினதானதொன்று அல்ல. ஆனால் இனங்களின் அடிப்படையில் இலங்கையில் பிரிவினைக்காக ஐ.நா. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமென்ற பரிந்துரையை முன்வைப்பதானது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தயக்கமின்றி எதிர்ப்பதற்கான விளைவை மட்டுமே இது கொண்டிருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியாயமற்ற கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக வெளிப்படுத்துவதானது சிறிய அளவு அனுகூலத்தை வென்றெடுப்பதிலும் பார்க்க நிலைமையை மோசமாக்குகின்றது.
கொசோவோ, மொன்ரனிகிரோ, தெற்கு சூடான் அல்லது கிழக்கு திமோரை இலங்கைக்கு எந்த விதத்திலும் ஒப்பிடக் கூடியதாக இல்லை. சர்வஜன வாக்கெடுப்புகள் அல்லது வெளிமட்டத் தலையீடுகளின் மூலம் புதிய தேசங்கள் உருவாக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே கருணாநிதி பார்க்கின்றார்.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதனை நம்பிக்கையளிக்கும் வகையில் வலுவானதாக உருவாக்கும் விடயத்தை அவர் நாடியிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணமொன்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.
செக்கோசிலாவாக்கியா பற்றி அவர் உதாரணம் காட்டியிருந்தார். செக்கோசிலாவாக்கியாவானது செக் குடியரசாகவும் சிலவாக்கியாவாகவும் பிரிந்திருந்தது. கருணாநிதியின் வார்த்தைகளில் இந்த விடயமானது, குருதி சிந்தாத பிரிவினையாகும்.
கடுமையான வேறுபாடுகள், பிளவுகள் நிலவும் நாடொன்றின் மோதலுக்கு சமாதானமான தீர்வாக அவர் இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அர்த்தமெதுவும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஆரவாரத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசிடம் எழுப்புவதற்கு தி.மு.க. தலைவர் சிறப்பான முறையில் செயற்பட முடியும்.
நீண்டகாலமாகத் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு துரிதமான பெறுபேறை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு மௌனமாகவோ அல்லது இதர வழியிலோ கருணாநிதி உதவமுடியும்.
இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே சமயம் அங்குள்ள தமிழர்களுக்கு விரைவான பெறுபேறுகளை எட்டக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வழங்குவதற்கு கருணாநிதி உதவ வேண்டும்.
நல்நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நாடும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்.
நன்றி லங்காஸ்ரீ
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
» மத்திய அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜி.கே. வாசன்
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு
» இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது: ஜெயலலிதா
» மத்திய அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜி.கே. வாசன்
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு
» இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது: ஜெயலலிதா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|