ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்'

Go down

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Empty முதல்வர் அளித்த உற்சாக "டானிக்'

Post by பிரசன்னா Mon Apr 23, 2012 1:39 pm

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' 22sk1

பிரபலமான அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு வருவது மிகமிக அரிது. அதிலும் அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவிக்கு வருவது சாதாரண விஷயமல்ல.


நாவன்மையால் பொதுமக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்தவரும், "நாவலர்' என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான இரா.நெடுஞ்செழியன் குடும்பத்திலிருந்து கல்வியாளர் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்துள்ளார். அதிலும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு. ஆம்! அவர் தான் பேராசிரியர் கல்யாணி மதிவாணன்.

பதவியேற்று ஓரிரு நாள்களே ஆன நிலையில், கடைநிலை ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து கருத்துகளைக் கேட்கும் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் முதன்மையான பல்கலைக்கழகமாக உயர்த்துவோம் என்ற முழக்கத்தோடு பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இறுக்கமான முகத்துடன் செல்வோர் அனைவரும், அவரது அறையை விட்டு வெளியே வரும்போது, முகமலர்ச்சியுடன் காணப்பட்டனர்.

அவரது பணிகளுக்கு இடையே, அவரைச் சந்திக்கச் சென்றபோது "தினமணி' என்றதும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.
உங்களது குடும்பம் பற்றி?

எனது மாமனார் அனைவரும் அறிந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன். எனது கணவர் மதிவாணன், கோ-ஆப் டெக்ஸில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகள் சொப்னா மதிவாணன், அமெரிக்காவில் சமையற்கலை தொழில்நுட்ப நிர்வாகவியலில் பட்டம் பெற்று, தொழில்முனைவோராக இருக்கிறார். மகன் ஜீவன் நெடுஞ்செழியன், சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர். தற்போது திருச்சியில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். எனது தந்தை முனைவர் குத்தாலிங்கம் இதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சிறப்பாகப் பணியாôற்றியுள்ளார்.

அரசியல் குடும்பத்தில் குடிபுகுந்த உங்களால், கல்வித் துறையில் சாதிக்க முடிந்தது எப்படி?

நான் திருவனந்தபுரத்தில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே, எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கோ தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆவல். இதை குறிப்பால் உணர்ந்த எனது மாமனாரும், மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியனும், கணவரும் தொடர்ந்து படிக்க முழு சுதந்திரம் அளித்தனர். அதிலும், எனது மாமியார் 3-ம் ஆண்டு பி.ஏ. தேர்வு எழுதி முடிக்கும் வரை என்னுடன் திருவனந்தபுரம் வந்து தங்கி உற்ற துணையாக இருந்தார். பின்னர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்ஏ, டி.லிட் மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றேன். அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக ஆங்கிலத் துறை தலைவர் வரை கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கல்விப் பணி ஆற்றியுள்ளேன். இதற்கு எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்ததே காரணம். எனது மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியன், இன்று வரை எனக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வருகிறார்.

துணைவேந்தர் பதவி குறித்து?

"துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள்' என முதல்வர் ஜெயலலிதா எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அதிகப் பொறுப்புகளைக் கொண்டுள்ள பதவி துணைவேந்தர் பதவி என எனது தந்தையும் அடிக்கடி கூறுவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை பணியாற்றுவதற்குச் சளைக்க மாட்டேன். முதல்வர் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இன்னும் மேலும் மேலும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். 2023-க்குள் உயர்கல்வியில் தமிழகத்தை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் தொலை நோக்குத் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அவரது தொலை நோக்குப் பார்வையை, செயல்படுத்தும் திட்டங்களை, முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன். எனக்கு கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் 2-வது நிலையிலுள்ள இந்த பல்கலைக்கழகத்தை முதல்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றிக் காட்டுவேன். இதை என்னால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளீர்கள்? அதற்கான திட்டங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா?

பல்கலைக்கழகத்தில் அனைத்து கீழ்நிலையிலுள்ள ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், அலுவலர்கள் வரை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் எனது முதல் பணி. அவரவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை யார் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்படும். அப்போதுதான் பல திறமைகள் வெளிக் கொணரப்படும்.

இது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, செம்மையாகச் செயல்படவும் உதவும். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தை "பசுமை வளாகமாக' மாற்றவும் திட்டமிட்டுள்ளேன்.

பசுமை என்றால் மரங்களை மட்டும் நடவு செய்வதல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு வருதல் போன்ற பல்வேறு சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வளாகமாக மாற்றப்படும்.

பல்கலைக்கழக எரிசக்தித் துறை பேராசிரியர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளேன். ஜெர்மன் உதவியுடன் அதற்கான திட்டப் பணிகளை துவக்க கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தக் காலச் சூழலுக்கு உகந்த சர்வதேச தரமுள்ள பல்வேறு படிப்புகள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் முதலிடத்தை பெற்றவுடன், நாட்டிலும் இப்பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெறவும் முயற்சிப்பேன். ஆனால், 3 ஆண்டுகளில் இவ்வளவு பணிகளை முடிக்க இயலுமா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதலிடம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum