ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்கை = தூய தமிழ்ச் சொல்

+3
balakarthik
இரா.பகவதி
சாமி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by சாமி Sun Apr 22, 2012 9:13 am

தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது. வடமொழியில் தீ என்பது கொடு என்றும் ‘க்ஷ’ என்பது கெடு என்றும் பொருள் தரும். அதாவது கொடுத்துக் கெடுத்தல். அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.

உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வடமொழியில் உள்ள சொல் கொடுத்துக் கெடுத்தல் என்பது கேட்பதற்கே முரணாகவும் நடைமுறைக்கு மாறாகவும் உள்ளது.

ஆனால் தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.

குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 9:19 am

சாமி அண்ணா பதிவிற்கு நன்றி , ஆனால் உங்கள் பதிவு சரியாக எனக்கு புரியவில்லை சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by சாமி Sun Apr 22, 2012 9:22 am

இரா.பகவதி wrote:சாமி அண்ணா பதிவிற்கு நன்றி , ஆனால் உங்கள் பதிவு சரியாக எனக்கு புரியவில்லை சோகம்

எந்த இடம் புரியவில்லை என்று சொல்லுங்கள் பகவதி. விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். நன்றி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 9:30 am

அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.

உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.
இந்த இரு இடங்களும் தான் அண்ணா ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by balakarthik Sun Apr 22, 2012 10:11 am

நல்லதொரு விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by சாமி Sun Apr 22, 2012 10:16 am

[quote="இரா.பகவதி"]
அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

உடலில் நேரும் கழிவுப்பொருளை மலம் என்று கூறுகிறோம். அது போல உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளும் மலம் எனப்படும். இந்த உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளை அகற்றியபின் அதாவது தூய்மைப் படுத்திய பின்தான் இறைவன் அருளானது உயிர்களின் உள்ளே வர முடியும்.

வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by balakarthik Sun Apr 22, 2012 10:22 am

சாமி wrote:வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?

நல்லதொரு விளக்கம் அதனால்தான் ஹிந்து மதத்தில் அக்னிக்கென்று தனி சிறப்பு உள்ளது ஏனென்றால் அக்னி மட்டுமே தானுடன் சேரும் அனைத்தையும் நெருப்பாக மாற்றும் தன்மையுடையது சரிதானே சாமி ஐயா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 10:25 am

[quote="சாமி"]
இரா.பகவதி wrote:
அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.


உடலில் நேரும் கழிவுப்பொருளை மலம் என்று கூறுகிறோம். அது போல உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளும் மலம் எனப்படும். இந்த உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளை அகற்றியபின் அதாவது தூய்மைப் படுத்திய பின்தான் இறைவன் அருளானது உயிர்களின் உள்ளே வர முடியும்.

வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?

சாமி அண்ணா விளக்கியமைக்கு மிக்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by சாமி Sun Apr 22, 2012 10:35 am

குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

சீடன் தன்னுடைய இருப்பு வினையை (அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை) தாமே தீர்த்துக் கொள்ள முடியாது. அதற்கு குருவின் உதவி வேண்டும். எப்படி நமக்கு உள்ள நோயினை மருத்துவர் தீர்த்து வைக்கிறாரோ அது போல.

குருவானவர் சீடனின் முற்பிறவி வினையை தீக்கை சடங்கின் மூலம் தீர்த்து வைக்கிறார், சீடன் பக்குவ நிலையில் மேலேற வேண்டும் என்ற காரணத்திற்காக.

தமிழ்ச் சொல்லின்படி பார்த்தால் முதலில் தீய்த்தல் அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை குரு தீய்த்து விடுகிறார். அதன்பின் இறைவன் திருவடிகளில் சேர்ந்து அருள்பெற குரு சீடனைச் செலுத்துகிறார்.

ஐயப்பாடு தீர்ந்ததா பகவதி ?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 11:03 am

சாமி wrote:
குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

சீடன் தன்னுடைய இருப்பு வினையை (அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை) தாமே தீர்த்துக் கொள்ள முடியாது. அதற்கு குருவின் உதவி வேண்டும். எப்படி நமக்கு உள்ள நோயினை மருத்துவர் தீர்த்து வைக்கிறாரோ அது போல.

குருவானவர் சீடனின் முற்பிறவி வினையை தீக்கை சடங்கின் மூலம் தீர்த்து வைக்கிறார், சீடன் பக்குவ நிலையில் மேலேற வேண்டும் என்ற காரணத்திற்காக.

தமிழ்ச் சொல்லின்படி பார்த்தால் முதலில் தீய்த்தல் அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை குரு தீய்த்து விடுகிறார். அதன்பின் இறைவன் திருவடிகளில் சேர்ந்து அருள்பெற குரு சீடனைச் செலுத்துகிறார்.

ஐயப்பாடு தீர்ந்ததா பகவதி ?

சாமி அண்ணா மிகவும் எளிய முறையில் எனக்கு விளக்கியமைக்கு நன்றி, என் ஐயம் தீர்ந்தது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தீக்கை = தூய தமிழ்ச் சொல் Empty Re: தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum