ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா?

2 posters

Go down

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Empty ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா?

Post by சிவா Fri Apr 20, 2012 11:36 am



ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தலை தப்புமா, மாவோயிஸ்டுகள் அவர் தலைவிதி பற்றி என்ன முடிவு எடுப்பார்கள் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. கடத்தல்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளக்கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை (வயது 37) மாவோயிஸ்டுகள் கடந்த மாதம் 24-ந் தேதி துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று விட்டனர். பணயக்கைதிகளாக உள்ள எம்.எல்.ஏ.வை உயிருடன் விடுதலை செய்ய வேண்டுமென்றால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் 50-க்கும் மேற்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செடா பூசணம் என்ற கசியை விடுதலை செய்ய ஒடிசா அரசு மறுத்து விட்டது. இதை மாவோயிஸ்டுகளும் ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மற்ற சிறைவாசிகளும் நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியது. இதை மாவோயிஸ்டுகள் நிராகரித்து விட்டனர். வழக்குகளை திரும்பப்பெற்று, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒடிசா அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தனர்.

முடிந்தது கெடு

மாவோயிஸ்டுகள் தாங்கள் கோரியபடி, கைதிகளை விடுவித்து அவர்களை, எம்.எல்.ஏ.யின் மனைவி கவுசல்யா, மற்றும் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் ஆகியோர் நாராயண்பாட்னாவில் உள்ள பாலிப்பேட்டா அருகில் அழைத்து வர வேண்டும், அவர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.யை ஒப்படைப்போம். போலீசாரையோ, உளவுத்துறையினரையோ உடன் அழைத்துக்கொண்டு வரக்கூடாது எனவும் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்பதில் அரசுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.

மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடுவும் நேற்று முன்தினம் மாலையில் முடிவடைந்தது. எம்.எல்.ஏ.யின் கதி என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. கெடு முடிந்த நிலையில் மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் மீடியாக்களுக்கு ஒரு கேசட் அனுப்பி உள்ளார். அதில், "ஒடிசா மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பழங்குடி இன எம்.எல்.ஏ.வின் தலைவிதி, மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும். ஏற்கனவே 4 முறை கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கெடு நீட்டிக்கப்படமாட்டாது'' என கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.யை விடுவித்து விட்டால் 13 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுவதாக ஒடிசா அரசு அறிவித்தது.

மக்கள் கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் தலைவிதியை முடிவு செய்தற்காக மாவோயிஸ்டுகள் நேற்று மக்கள் கோர்ட்டை கூட்டி உள்ளனர். இதில் பிணயக்கைதியாக உள்ள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கோராப்பட் மாவட்டத்தில், நாராயண்பாட்னா பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி உள்ளது. இதில் ஆதிவாசி மக்கள் தங்கள் வாக்குமூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விசாரணையும் தொடங்கி உள்ளது.

இதை மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "மக்கள் கோர்ட்டு கூடி உள்ளது. இதன் நடவடிக்கை எப்போது முடியும், எம்.எல்.ஏ.யின் தலைவிதி எப்போது முடிவு செய்யப்படும் என்று எனக்கு தெரியாது'' என்றார். இதனால் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் உயிர் தப்புமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே கைதிகளை விடுவித்து, எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை விடுதலை செய்ய ஒடிசா அரசு முயற்சி செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ராணுவ அதிகாரியும், தீவிரவாத தடுப்பு வல்லுனருமான மேஜர் ஜெனரல் கங்குர்திப் பக்ஷி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், "சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பதற்காக கோர்ட்டுகளில் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை எதிர்ப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையுமே ஒடிசா அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான கூட்டுச்சதி ஆகும்'' என்றார்.

நோட்டீஸ்

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, "அப்படிப்பட்ட பட்சத்தில் எங்கள் தலையீட்டுக்கான எல்லை மிகவும் குறுகியது ஆகும். நீங்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சென்று, எதிர்த்து வழக்கு தொடரலாமே'' என்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் விரும்பவில்லை. ஆனால் வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று வலியுறுத்திக்கூறினார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ஒடிசா அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினத்தந்தி


ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Empty Re: ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா?

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 11:44 am

உள்நாட்டு தீவிரவாதிகளை அடக்க துப்பில்லை இவர்கள் விடுதலை புலிகளை அழிக்க உதவுகிறார்கள் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum