Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது. இந்தோனேஷியாவில் கடந்த 11-ம தேதி சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் இன்று இந்தோனேஷியாவின் பாண்டாஅசே பகுதியில் கடலுக்கு அடியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆகபதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
பாகிஸ்தான் ஜெயில் மீது குண்டு வீசி தாக்கு; கைதிகள் பலரை மீட்டு சென்ற தலிபான் பயங்கரவாதிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பலர் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தி முக்கிய கைதிகள் பலரை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைபர் பக்துன்ஹவாக்குட்பட்ட பன்னு நகரில் முக்கிய ஜெயில் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகள் பலர் உள்ளனர்.
இன்று காலை இச்சிறைச்சாலையை 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை அடுத்து சிறையில் இருந்து 380-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து பன்னுநகர் போலீஸ் அதிகாரி இப்திகர்கான் கூறுகையில்; இந்த தாக்குலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் டிரக்கர் மூலம் ஆயுதங்களுடன் வந்து சிறை பகுதிக்கு நெருங்கினர். இவர்கள் கையெறி குண்டுகளø எறிந்தும், துப்பாக்கியால் சுட்டபடியும் வந்தனர். இந்த திடீர் தாக்குதலால் உரிய பதிலடி கொடுக்க முடியாமல் போனது. எதிர்ப்பு போராட்டத்தில் 3 போலீசார் காயமுற்றுள்ளனர் . மொத்தம் 381 பேர் தப்பி ஓடி விட்டனர் என்றார்.
தலிபான் பிரமுகர் தகவல் : இந்த சம்பவம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; நாங்கள் தாக்குதல் நடத்தி 100 க்கும் மேற்பட்ட கைதிகளை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் எங்களின் இருப்பிடத்திற்கு வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
முஷாரப்பை கொல்ல முயற்சித்தவர்: தப்பியவர்களில் 20 பேர் பெரும் கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் ஒருவர் பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல நடந்த சதி திட்டத்தில் மரணத்தண்டனை பெற்ற ஆட்னன்ரஷீத்தும் அடங்குவார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பலர் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தி முக்கிய கைதிகள் பலரை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைபர் பக்துன்ஹவாக்குட்பட்ட பன்னு நகரில் முக்கிய ஜெயில் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகள் பலர் உள்ளனர்.
இன்று காலை இச்சிறைச்சாலையை 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை அடுத்து சிறையில் இருந்து 380-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து பன்னுநகர் போலீஸ் அதிகாரி இப்திகர்கான் கூறுகையில்; இந்த தாக்குலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் டிரக்கர் மூலம் ஆயுதங்களுடன் வந்து சிறை பகுதிக்கு நெருங்கினர். இவர்கள் கையெறி குண்டுகளø எறிந்தும், துப்பாக்கியால் சுட்டபடியும் வந்தனர். இந்த திடீர் தாக்குதலால் உரிய பதிலடி கொடுக்க முடியாமல் போனது. எதிர்ப்பு போராட்டத்தில் 3 போலீசார் காயமுற்றுள்ளனர் . மொத்தம் 381 பேர் தப்பி ஓடி விட்டனர் என்றார்.
தலிபான் பிரமுகர் தகவல் : இந்த சம்பவம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; நாங்கள் தாக்குதல் நடத்தி 100 க்கும் மேற்பட்ட கைதிகளை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் எங்களின் இருப்பிடத்திற்கு வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
முஷாரப்பை கொல்ல முயற்சித்தவர்: தப்பியவர்களில் 20 பேர் பெரும் கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் ஒருவர் பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல நடந்த சதி திட்டத்தில் மரணத்தண்டனை பெற்ற ஆட்னன்ரஷீத்தும் அடங்குவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
ஆப்கனில் பல இடங்களில் குண்டு வெடிப்பு !
காபூல்: ஆப்கனின் காபூலில் பல இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்தியர்கள் நலமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது/
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், பல நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஆப்கன் பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். காபூலில் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இங்கிலாந்து தூதரகத்தை பயங்கரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குத் நடத்தியுள்ளதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தூதரகத்தை 2 ராக்கெட் குண்டுகள் தாக்கியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெர்மன் தூதரகம் அருகிலும் தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகம் அருகே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
காபூலில் உயரமான கட்டடங்களில் பதுங்கி கொண்டு பயங்கரவாதிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பிரிட்டன் உறுதி செய்யவில்லை.
அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதிகள் ஆப்கன் பார்லிமென்ட் மீதும் ரஷ்ய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்லிமென்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பார்லிமென்ட் கட்டடம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மற்றொரு அதிகாரி கூறுகையில், பார்லிமென்ட் கட்டடம் மற்றும் ஆப்கன் வர்த்தகத்துறை அமைச்சகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என கூறினார். பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலின் வெளிப்புறப்பகுதியில் அமைந்துள்ள நேடோ முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அங்குள்ள துருக்கி கிரீஸ் நாட்டு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை. பயங்கரவாதிகள் காபூல் தவிர லோகர், பக்டியா மற்றும் நங்கர்ஹர் நகரிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிபர் மாளிகை அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் ஈரான் தூதரகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், கட்டடத்தில் புகை கிளம்பி வருவதாகவும் ஆப்கன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேடோ படை வெளியிட்டுள்ள செய்தியில், காபூல் நகரில் 7 இடங்களில் தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.
தலிபான் பொறுப்பேற்பு: இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நேடோ படை முகாம்கள், பார்லிமென்ட் கட்டடம், தூதரக அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்ததாக கூறியுள்ளனர்.
இந்தியர்கள் நலம்: இதனிடையே குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், இந்தியர்கள் காயம் அடைந்ததாக இதுவரை தகவல் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இந்திய தூதரகம் அதிக உஷார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
காபூல்: ஆப்கனின் காபூலில் பல இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்தியர்கள் நலமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது/
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், பல நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஆப்கன் பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். காபூலில் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இங்கிலாந்து தூதரகத்தை பயங்கரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குத் நடத்தியுள்ளதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தூதரகத்தை 2 ராக்கெட் குண்டுகள் தாக்கியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெர்மன் தூதரகம் அருகிலும் தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகம் அருகே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
காபூலில் உயரமான கட்டடங்களில் பதுங்கி கொண்டு பயங்கரவாதிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பிரிட்டன் உறுதி செய்யவில்லை.
அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதிகள் ஆப்கன் பார்லிமென்ட் மீதும் ரஷ்ய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்லிமென்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பார்லிமென்ட் கட்டடம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மற்றொரு அதிகாரி கூறுகையில், பார்லிமென்ட் கட்டடம் மற்றும் ஆப்கன் வர்த்தகத்துறை அமைச்சகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என கூறினார். பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலின் வெளிப்புறப்பகுதியில் அமைந்துள்ள நேடோ முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அங்குள்ள துருக்கி கிரீஸ் நாட்டு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை. பயங்கரவாதிகள் காபூல் தவிர லோகர், பக்டியா மற்றும் நங்கர்ஹர் நகரிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிபர் மாளிகை அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் ஈரான் தூதரகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், கட்டடத்தில் புகை கிளம்பி வருவதாகவும் ஆப்கன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேடோ படை வெளியிட்டுள்ள செய்தியில், காபூல் நகரில் 7 இடங்களில் தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.
தலிபான் பொறுப்பேற்பு: இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நேடோ படை முகாம்கள், பார்லிமென்ட் கட்டடம், தூதரக அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்ததாக கூறியுள்ளனர்.
இந்தியர்கள் நலம்: இதனிடையே குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், இந்தியர்கள் காயம் அடைந்ததாக இதுவரை தகவல் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இந்திய தூதரகம் அதிக உஷார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
ஆப்கனில் இந்தியர்கள் நலமாக உள்ளனர்: இந்திய தூதரகம்
காபூல்: ஆப்கனில் பல இடங்களில் தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை எந்த இந்தியரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. நாங்கள் உஷார் நிலையில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
காபூல்: ஆப்கனில் பல இடங்களில் தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை எந்த இந்தியரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. நாங்கள் உஷார் நிலையில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
சிவா wrote:
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது. இந்தோனேஷியாவில் கடந்த 11-ம தேதி சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் இன்று இந்தோனேஷியாவின் பாண்டாஅசே பகுதியில் கடலுக்கு அடியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆகபதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.
சுனாமி எச்சரிக்கை விடபடவில்லையே ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
இந்த நிலநடுக்கத்தால் செஷல்ஸ் கடற்கரைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், எனவே அங்குள்ளவர்கள் நிம்மதியாகத் தண்ணியடித்து விட்டுத் தூங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
சிவா wrote:இந்த நிலநடுக்கத்தால் செஷல்ஸ் கடற்கரைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், எனவே அங்குள்ளவர்கள் நிம்மதியாகத் தண்ணியடித்து விட்டுத் தூங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தல ( ஏற்கனவே நான் அப்படித்தான் உள்ளேன் )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
சிவா wrote:இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்!
மலேசியாவிலும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
வை.பாலாஜி wrote:சிவா wrote:இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்!
மலேசியாவிலும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்
இப்பொழுது இல்லை தல. பல மாதங்களாகிவிட்டது. காதலுக்காகத் தியாகம் செய்துவிட்டேன், திருமணம் முடிந்ததும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற ஆசையில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: வீடுகள்-கட்டிடங்கள் குலுங்கின
» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
» இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
» ஜப்பானில் மீண்டும் ஒரு பெரும் நிலநடுக்கம் 7.1
» இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்
» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
» இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
» ஜப்பானில் மீண்டும் ஒரு பெரும் நிலநடுக்கம் 7.1
» இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|