ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது

3 posters

Go down

படித்ததில் பிடித்தது  Empty படித்ததில் பிடித்தது

Post by eraeravi Fri Apr 13, 2012 10:40 pm

நூலின் பெயர் :தாயார் சன்னதி

ஆசிரியர்:சுகா

பதிப்பகம்:சொல்வனம்

மதிப்புரை :முனைவர் ச.சந்திரா

கோபுர நுழைவாயில் :

தல வரலாறா? தன் வரலாறா?கட்டுரைக்கனியா ? என யூகிக்க முடியாத அளவிற்கு, இயலோடு, இசை கலந்து நாடகப்போக்கில் படைக்கப்பட்ட முத்தமிழ் நூலே சுகா அவர்களின் தாயார் சன்னதி ! பழமொழியும் புதுமொழியுமாய் பேச்சு வழக்கும் எழுத்து வழக்குமாய்,அறுசுவையும் ஒன்பான் சுவையுமாய், கேலியும் கூத்துமாய் ,நக்கலும் நையாண்டியுமாய்- நாற்பத்திநான்கு அத்தியாயங்களையும் நளினமாய் நகர்த்தி செல்கின்றார் ஆசிரியர் சுகா!

நெல்வேலியா ?சொல்வேலியா?

பொருநை நதி பிரவாகமாய் சுகா அவர்களின் சொற்பிரயோகம்,சிற்பியின் விழி திறப்பாய் அதிகவனத்துடன் செதுக்கப்பட்ட கட்டுரைகளின் காந்த ஈர்ப்பு கொண்ட கடைசிவாசகம்.பர்வத நீர் வீழ்ச்சியின் துளிகளாய் தெறிக்கும் நகைச்சுவை,மேற்குத்தொடர்ச்சி மலை போல் பரவிக்கிடக்கும் தாய்மையின் ஏக்கம், நாம் இதுவரை கேள்விப்படாத சர்வசாதாரண மனிதர்களைக் கருவாகக்கொண்டு ,வட்டார வழக்கு வசவுச் சொற்களை இடையிடையே பொருத்தமான இடத்திலிட்டு ,காஞ்சி புரப் பட்டாய் நூலை இழைத்திருக்கும் நேர்த்தி , பொதிகைமலைத்தென்றலாய் ஆங்காங்கே வருடிச்செல்லும் ஆர்மோனிய இசை , பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் முதுமையைக் கொண்டாடியிருக்கும் பெருந்தன்மை -என தாம்பரத்தில் வசிக்கும் வாசகர்களைத் தன் சொல்வேலியால் தாமரபரணி ஆற்றங்கரைக்கு ஈர்க்கும் வல்லமை நூலாசிரியர்க்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

பயணமா?பாடமா?

வெண்ணிற ஆடையில், வேலைக்காரியிடம் அவமானப்பட்ட ஜங்ஷன் பயணம்,செமத்தியாய் அடிவாங்கிய கிருஷ்ணாபுர மிதிவண்டி பயணம்,பள்ளத்திற்குள் பாய்ந்த பைக் பயணம், நண்பன் குஞ்சுவின் காதற்பயணம்,அம்பி மாமாவின் திரையரங்குப்பயணம்,சொக்கலிங்கம் மாமாவின் இசைப்பயணம்- என்று பயணங்கள் நீள, நெல்லைவாழ் முதியோர் சிவலோகப்பயணத்திற்கு நீ-நான் என முந்த எண்ணும்வேளையில்

அம்மானிடர்களின் பாதம்தொட்டு வணங்கத்தோன்றுகின்றது.இவை எல்லாவற்றிற்கிடையே அம்மன்சன்னதியில் துஷ்டி நேரும்பொழுது,துக்கம் அனுஷ்டிக்கும் நெல்லையப்பர்-காந்திமதிஅம்மன் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கவும் தோன்றுகின்றது.

கல்வெட்டா?சொல்வெட்டா?

*கல்யாணி ஆச்சியின் வறுமையிலும் செம்மையாக வாழும் திறம்

*முதலாளி தொழிலாளியாகிப் பின் முதலாளியான நிகழ்வு

*மங்கல நிகழ்ச்சியானாலும் சரி!அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி!மனம் ஒன்றி தன்னைத்தன் தொழிலுக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் வீரையன் தாத்தாவின் செயல்பாடுகள்

*கயத்தாறு கீரை வியாபாரிகளிடம் 'சுகா' வீட்டினர் காட்டும் கனிவும் பரிவும்-

என நூலில் இடம்பெறும் மனதில் பதிந்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மனதார....

தன்னடக்கம் முன் செல்ல ,தன்மானம் பின்செல்ல,நாமெல்லாம் சொல்லத்தயங்கும் சில விஷயங்களை, தம்மிடம் இருக்கும் குறைபாடுகளைத் சிறிதும்தயங்காது, அகஸ்தியர் அருவிபோல் கொட்டியிருக்கும் ஆசிரியர் சுகாவின் பெருந்தன்மையைப்போற்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்! ஸ்வரம்,இராகம்,கீர்த்தனை,ஆலாபனை-என தன் வாழ்வில் படிப்படியாய் மேல்வந்த நூலாசிரியர் எழுத்துலகில்,இசையுலகில்,திரையுலகில்-என மும்முனையிலும் சிகரத்தை எட்டிப்பிடிக்க, விண்ணைமுட்டும் சொக்கப்பனை ஜோதியாய் வாழ்வில் உயர என் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by அதி Fri Apr 13, 2012 11:30 pm

படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by றினா Sat Apr 14, 2012 11:02 am

சுவாரஸ்யமான பதிவு.
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

படித்ததில் பிடித்தது  Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum