ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்

2 posters

Go down

தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் Empty தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்

Post by சிவா Wed Apr 11, 2012 6:14 am

சென்னையில் நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு தினவிழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விருதுபெறும் அறிஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சித்திரை திங்களில் தமிழ்ப்புத்தாண்டு

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், மீண்டும் சித்திரை திங்கள் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு சட்டத்தினை இயற்றியது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப்புத்தாண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.

கபிலர் விருது

இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளை புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையிலும்; இலக்கியத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்து அதிக அளவு பாடல்களை பாடிய புலவர் கபிலரின் பெயரில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கு பேராசிரியர் முனைவர் மணவாளன் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

உ.வெ.சா.விருது

இதேபோன்று, இந்த தமிழ்ப்புத்தாண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், கல்வெட்டுகள், அகழாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்து, வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பதிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழ் அறிஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், "தமிழ் தாத்தா'' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா. பெயரில் ஒரு புதிய விருது ஏற்படுத்தப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.

இந்த ஆண்டிற்கான உ.வே.சா. விருதிற்கு புலவர் செ.ராசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவ்வையார் விருது

இந்த விழாவில், சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது, திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு வழங்கப்படும்.

மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

தமிழ்த்தாய் விருது

இது மட்டுமல்லாமல், தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருதினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருது தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

மேற்சொன்ன விருதுகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 13-4-2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்படும்.

சிறந்த நூல்கள்

தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக தமிழ் மொழியில் வெளிவரக்கூடிய சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அந்த நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வழங்குவார்.

அந்த வகையில் 2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழக மண்டபம்

தமிழ்புத்தாண்டு தினமான 13-4-2012 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் காலை 8.30 மணி அளவில் "துறை தோறும் தமிழ்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணி அளவில் "முத்திரை பதிக்கும் சித்திரை'' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

ஜெயலலிதா பேச்சு

பின்னர் காலை 10.30 மணி அளவில் "முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், தமிழ் புத்தாண்டு விழா 12.15 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த விழாவில் தமிழ்தாய் விருது, அவ்வையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா.விருது, திருக்குறள் ஒப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழா பேருரை ஆற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் Empty Re: தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்

Post by யினியவன் Wed Apr 11, 2012 8:58 am

இந்தப் புதினப் படைப்புக்கு பரிசு தராமல் போனது வருத்தமே: சசியின் சகோதரி பாசம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _
» தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
» 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum