ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Apr 09, 2012 7:46 pm

யாரும் யாராகவும் ...

நூல் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் விருதாளர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் ervadiar@yahoo.co.in

விலை ரூபாய் 70 கவிதை உறவு 420E .மலர்க் காலனி ,அண்ணா நகர் மேற்கு ,சென்னை .40
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கலைமாமணி விருது பெற்றவர் .அவர்கள் கவிதை உறவு என்ற மாத இதழை 25 வருடங்களுக்கு மேலாக தொய்வின்றி நடத்தி வருபவர் . கணினி உலகில் இன்று மாத இதழை நடத்தி வருவதே பெரிய சாதனை தான் .கவிதை உறவு இதழின் 7ஆம் பக்கத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகி உள்ளது .கவிஞர் கல்யாண்ஜி அவர்களின்அணிந்துரை
நூலிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது .நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப் பட்ட புரட்சிக் கவிஞர் விருதைப் பெற்றவர் .பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் .இலக்கியத்தை, கவிதையை மூச்சாகக் கொண்டு வாழ்பவர் .கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் .பழகுவதற்கு இனிமையானவர் .மென்மையானவர் ,இவர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை .கவிதை மட்டுமல்ல கட்டுரை ,கதை எழுதும் பன்முக ஆற்றல் பெற்றவர் .மிகச் சிறப்பாக நூல் விமர்சனம் கவிதை உறவு இதழில் எழுதி வருபவர் .உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் பிறந்த மண் பற்று இருக்க வேண்டும் .கலைமாமணி எஸ் ராதா கிருஷ்ணன் அவர்கள் தான் பிறந்த ஊரான ஏர்வாடி என்பதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவர் .இவரை பலருக்கு எஸ் . ராதா கிருஷ்ணன் என்றால் தெரியாது ஆனால் ஏர்வாடியார் என்றால் எலோருக்கும் தெரியும் .
,
கவிதை வாழ்க்கை !

எழுதுகின்ற திறனெல்லாம்
எவருக்குமிங்கே வரக்கூடும்
எழுதுகிற தகுதிமட்டும்
இருப்பவர்கள் மிகக்குறைவு !

சிலர் நகைச்சுவையாக சொல்வதுண்டு மக்கள் தொகையை விட கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம் என்று .இன்று பலர் முற்போக்காகக் கவிதை எழுதுகின்றனர் எத்தனைபேர் எழுதியபடி வாழ்கின்றனர் .மகாகவி பாரதி குறிப்பிட்டதுப் போல கவிதை எழுதுவோர் கவிஞர் அன்று.
கவிதையாக வாழ்பவரே கவிஞர் என்ற கருத்தை வழி மொழிவதுப் போன்ற கவிதை !பாராட்டுக்கள் .

கவிதை சிலருக்கு !

கவிதை பலருக்கு
விதையாக இருக்கிறது
விளைவிக்கிறார்கள் .

கவிதை சிலருக்குதான்
கவிதையாக இருக்கிறது
காலத்தை வெல்கிறார்கள் .

எர்வாடியார் எழுதியது உண்மைதான் .பலர் பணத்திற்காக கவிதை எழுதி பணம் சேர்க்கிறார்கள்.ஆனால் பணத்தை பெரிதாய் எண்ணாத மகா கவியும் ,புரட்சி கவிஞரும் எழுதிய கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம் .

நூல் முழுவதும் கவிதைகள் தெளிந்த நீரோடை போன்ற நடையில் செல்கின்றது .நூலை வாசிக்கும் வாசகர்களின் மனதை மயில் இறகுப் போல சுகமாக வருடுகின்றது .தென்றலைப் போல இதமாக உள்ளது கவிதைகள் .

உலகில் உறவுகள் பல உண்டு ஆனால் அம்மா என்று உறவுக்கு ஈடு இணை எது ?நூல் ஆசிரியர் அம்மா பற்றி மிக உருக்கமான கவிதை எழுதி உள்ளார் .

அம்மாவின் சேலை !

அது பருத்தியால் மட்டுமன்று
பாசத்தாலும் நெய்யப்பட்டது
தான் அழுத கண்ணீரை
அந்த முந்தாணையில்தான்
அவள் துடைத்திருப்பாள் .

அவள் உடுத்திய
சேலைகள் கிழிந்திருக்கலாம்
அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும்
இன்னும் அப்படியே !

மனைவி பற்றியும் மறக்காமல் கவிதை வடித்துள்ளார் .கவிதையின் தலைப்பே மனைவியை உச்சத்தில் வைத்து மகிழும் விதமாக உள்ளது .
என் இரண்டாம் தாய் !

நீ ...
அணைக்க மட்டுமே
அறிந்திருக்கிற ஆண்களை
அணையாதிருக்க
அருள்கிறவர்கள் பெண்கள் !

உண்மைதான் மனைவி மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளா விட்டால் கணவன் என்ற ஜோதி என்றோ மறைத்திருக்கும் .கணவனின் வாழ்நாள் நீடிப்பே மனைவியின் நேசத்தில் ,பாசத்தில் உள்ளது .

பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் விதமாக உள்ள கவிதை !

இல்லாமலே இரு இறைவா !

ஏழைகளின் சிரிப்பில்
இறைவன் இருப்பதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
ஏழைகளைச் சிரிக்கவிடு
நீ ...இருப்பதை ஒப்புக்கொள்கிறோம் !

இன்று புதிதாக அந்த தினம் இந்த தினம் என்று தினம் தினம் ஒரு கொண்டாட்டம் வந்து விடுகின்றது .அது பற்றி ஒரு கவிதை இதோ !

தினந்தோறும் தினம் தான் !
தினந்தோறும் ஏதாவது
தினம் வந்து போகிறது .
அந்த தினம் பற்றி
அன்றைய தினம் மட்டுமே பேச்சு
அடுத்த நாள் அது
மறுதினமாகி விடுகிறது !

சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதைகள் நூல் முழுவதும் உள்ளது .பாராட்டுக்கள் .ஜென் தத்துவம் போன்ற நல்ல கவிதை இதோ !

அது மட்டும் ...
அந்தந்த நொடிச்சுகம்
அடைய வேண்டுமா
அடுத்த நொடியை மறுந்துவிடு !

தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சி வருகையின் காரணமாக இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவது இல்லை .கூட்டம் இல்லாமலே பல கூட்டம் முடிந்து விடுகின்றது .

கூட்டத்தோடு கூட்டம் !
கூட்டம் இல்லாமல்தான்
கூட்டங்கள் நடக்கின்றன
ஆயிரம் அழைப்பிதழ்கள்
அனுப்பியபோதும்
அதில் பாதிகூட
அரங்கத்தில் சேர்வதில்லை .

இயற்கை நேசத்துடன் ஆலைகள் மட்டும் போதாது .இனிய சோலைகள் வேண்டும்,சாலையில் வேண்டும் கவனம் . என்று குரல் தரும் கவிதை

சோலைகள் செய்வீர் !
வேகம் வேண்டியதுதான்
வேகமாகவே உங்கள் வாழ்க்கை
முடிந்துவிட வேண்டாம் .
சாலைச் சந்தடிகளை விடுத்து
இனி சோலைகளின் சங்கீதத்தைச்
செவிமடுக்கப் பாருங்கள் .

கவிதை உறவு மாத இதழில் மாதா மாதம் படித்த கவிதைகள் என்றாலும் மறு வாசிப்பு சலிப்பு வர வில்லை. மாறாக திரும்பத் திரும்ப வாசித்து சுவைக்கும் விதமாக இருந்தது .படிக்கும் வாசகர்களின் உள்ளதை நெறிப் படுத்தும் விதமாக ,மனித நேயம் கற்பிக்கும் விதமாக , மனிதன் மனிதனாக வாழ வைக்கும் வாழ்வியல் கருத்துக் கூறும் விதமாக நூல் உள்ளது . பாராட்டுக்கள் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum