ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா

Go down

வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Empty வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா

Post by சிவா Mon Apr 09, 2012 10:33 am

வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம்

கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் யூதர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் அவர் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வரும் தவக்காலத்தின் இறுதிநாளான ஈஸ்டர் தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதியிலிருந்து தவக்கால விரதம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்தது. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது.

பாஸ்கா திருவிழிப்பு சடங்கு

பின்னர் வெள்ளிக்கிழமையன்று தவக்காலத்தின் முக்கிய தினங்களுள் ஒன்றான புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்தனர். அப்போது பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சொரூப ஊர்வலம் நடந்தது. மேலும் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, பொது மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். நேற்று முன்தினம் புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

அன்று பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறவில்லை. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்ப்பை உணர்த்தும் பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் ஏற்றினார். பின்னர் பாஸ்கா ஒளி பேராலய கலையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு இயேசு உயிர்ப்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பேராலயத்தை சுற்றியும், பேராலய கலையரங்கு முன்னும் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.

ஈஸ்டர் திருநாள்

சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் இரவு 11.40 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளி அலங்காரங் களுடன் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் சொரூபம் குழுமியிருந்த பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும் மன்றாடினார்கள். பின்னர் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரகணக்கில் கலந்து கொண் டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இரவு 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் பாதிரியார்களால் வழங்கப்பட்டது.


வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Empty Re: வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா

Post by சிவா Mon Apr 09, 2012 10:34 am

காளையார்கோவில், திருப்பத்தூர், தேவகோட்டை ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி

ஈஸ்டர் பண்டிகை

ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருபப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் முதல் பங்கு குருவானவர் தாமஸ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. சூசையப்பர் பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குருவானர் எட்வின் ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

தேவகோட்டை

ஆண்டிச்சியூரணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் ஜேசுராஜ் கிறிஸ்டி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பங்குகுருவானவர் சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் தாமுஇதயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.


வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Empty Re: வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா

Post by சிவா Mon Apr 09, 2012 10:36 am

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாப் பட்டது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தோணி குருக்கள், பங்குதந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான் தலைமையிலும், பிங்கர் போஸ்ட்டில் உள்ள புனித திரேசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமை யிலும் சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குன்னூர்

ஊட்டி டிரினிட்டி ஆலயத்தில் போதகர் ஜெரோன் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலயம், யூனியன் ஆலயம், ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற் றது. இதே போல் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் மத போதகர் ஜெகன் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி

வெலிங்டன் நல்லப்பன் தெரு ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடை பெற்ற நள்ளிரவு பிரார்த்தனை யில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மிஷன் காம்பவுண்டு வெஸ்லி ஆலயம் உள்பட சோலூர்மட்டம், அரவேனு, கூக்கல்தொரை, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங் களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.


வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா Empty Re: வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum