Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா
Page 1 of 1
வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா
வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் யூதர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் அவர் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வரும் தவக்காலத்தின் இறுதிநாளான ஈஸ்டர் தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதியிலிருந்து தவக்கால விரதம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்தது. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது.
பாஸ்கா திருவிழிப்பு சடங்கு
பின்னர் வெள்ளிக்கிழமையன்று தவக்காலத்தின் முக்கிய தினங்களுள் ஒன்றான புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்தனர். அப்போது பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சொரூப ஊர்வலம் நடந்தது. மேலும் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, பொது மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். நேற்று முன்தினம் புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
அன்று பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறவில்லை. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்ப்பை உணர்த்தும் பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் ஏற்றினார். பின்னர் பாஸ்கா ஒளி பேராலய கலையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு இயேசு உயிர்ப்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பேராலயத்தை சுற்றியும், பேராலய கலையரங்கு முன்னும் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.
ஈஸ்டர் திருநாள்
சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் இரவு 11.40 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளி அலங்காரங் களுடன் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் சொரூபம் குழுமியிருந்த பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும் மன்றாடினார்கள். பின்னர் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரகணக்கில் கலந்து கொண் டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இரவு 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் பாதிரியார்களால் வழங்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் யூதர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் அவர் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வரும் தவக்காலத்தின் இறுதிநாளான ஈஸ்டர் தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதியிலிருந்து தவக்கால விரதம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்தது. புனித வாரத்தின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது.
பாஸ்கா திருவிழிப்பு சடங்கு
பின்னர் வெள்ளிக்கிழமையன்று தவக்காலத்தின் முக்கிய தினங்களுள் ஒன்றான புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்தனர். அப்போது பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சொரூப ஊர்வலம் நடந்தது. மேலும் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 10 பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி, பொது மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை நடத்தினர். நேற்று முன்தினம் புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
அன்று பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறவில்லை. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயிர்ப்பை உணர்த்தும் பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் ஏற்றினார். பின்னர் பாஸ்கா ஒளி பேராலய கலையரங்கிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு இயேசு உயிர்ப்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பேராலயத்தை சுற்றியும், பேராலய கலையரங்கு முன்னும் பல்லாயிரக்கணக்கில் கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர்.
ஈஸ்டர் திருநாள்
சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் இரவு 11.40 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளி அலங்காரங் களுடன் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்துவின் சொரூபம் குழுமியிருந்த பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும் மன்றாடினார்கள். பின்னர் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரகணக்கில் கலந்து கொண் டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இரவு 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் பாதிரியார்களால் வழங்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா
காளையார்கோவில், திருப்பத்தூர், தேவகோட்டை ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி
ஈஸ்டர் பண்டிகை
ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருபப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் முதல் பங்கு குருவானவர் தாமஸ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. சூசையப்பர் பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குருவானர் எட்வின் ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை
ஆண்டிச்சியூரணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் ஜேசுராஜ் கிறிஸ்டி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பங்குகுருவானவர் சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் தாமுஇதயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகை
ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருபப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் முதல் பங்கு குருவானவர் தாமஸ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. சூசையப்பர் பட்டிணம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குருவானர் எட்வின் ராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தேவகோட்டை
ஆண்டிச்சியூரணி தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் ஜேசுராஜ் கிறிஸ்டி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பங்குகுருவானவர் சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் பங்கு குருவானவர் தாமுஇதயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாள் விழா
நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாப் பட்டது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தோணி குருக்கள், பங்குதந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான் தலைமையிலும், பிங்கர் போஸ்ட்டில் உள்ள புனித திரேசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமை யிலும் சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊட்டி டிரினிட்டி ஆலயத்தில் போதகர் ஜெரோன் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலயம், யூனியன் ஆலயம், ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற் றது. இதே போல் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் மத போதகர் ஜெகன் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
வெலிங்டன் நல்லப்பன் தெரு ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடை பெற்ற நள்ளிரவு பிரார்த்தனை யில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மிஷன் காம்பவுண்டு வெஸ்லி ஆலயம் உள்பட சோலூர்மட்டம், அரவேனு, கூக்கல்தொரை, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங் களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாப் பட்டது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தோணி குருக்கள், பங்குதந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் ஆலய பங்குதந்தை ஜான் தலைமையிலும், பிங்கர் போஸ்ட்டில் உள்ள புனித திரேசா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை சகாயராஜ் தலைமை யிலும் சிறப்பு பிரார்த்தனை கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊட்டி டிரினிட்டி ஆலயத்தில் போதகர் ஜெரோன் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலயம், யூனியன் ஆலயம், ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற் றது. இதே போல் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் மத போதகர் ஜெகன் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
வெலிங்டன் நல்லப்பன் தெரு ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடை பெற்ற நள்ளிரவு பிரார்த்தனை யில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மிஷன் காம்பவுண்டு வெஸ்லி ஆலயம் உள்பட சோலூர்மட்டம், அரவேனு, கூக்கல்தொரை, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங் களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» கிறிஸ்து தாஸ் காந்தி
» உலக அதிசயங்கள் : மீட்பர் கிறிஸ்து சிலை
» உயிர்ப்பு..
» ஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்!
» கிறிஸ்து தாஸ் காந்தி
» உலக அதிசயங்கள் : மீட்பர் கிறிஸ்து சிலை
» உயிர்ப்பு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|