ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

4 posters

Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by சிவா Tue Apr 03, 2012 1:05 am

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Tamil_News_large_440027

சென்னை:மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வீடு இடிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும், ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும், சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, கடந்த, டிசம்பர் 19ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, 28ம் தேதி, சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், 24 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தேன், டிசம்பர் மாதம் அவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது தான் உண்மைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.மேலும், என்னுடைய உறவினர்களும், நண்பர்களும், ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் நான், வாழ்ந்து வந்ததை அடிப்படையாகக் கொண்டு, விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர். இதனால், கட்சிக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராகவும் சதித் திட்டங்களும் தீட்டியுள்ளனர். இதனால், மிகுந்த வேதனையடைந்தேன். என் உறவினர்களும், நண்பர்களும் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஜெயலலிதாவுக்கு தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். எனது, வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.இந்த அறிக்கையை, கடிதமாகவும் ஜெயலலிதாவுக்கு சசிகலா அனுப்பியிருந்தார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில், சசிகலா கணவர் நடராஜன் மற்றும் திவாகரன், தினகரன் உள்ளிட்ட, 19 பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என, கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எந்த நேரத்திலும் அவர் போயஸ் தோட்டத்துக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா நேரில் ஆஜரானதால் அவர் உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இந்நிலையில், இன்ற மாலை 4 மணியளவில், சசிகலாவும், இளவரசியும் போயஸ் தோட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.

தினமலர்


மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 1:08 am

அப்படி போடு...அப்படிப் போடு...
அசத்திப் போடு போடு...
இந்த ஆட்டம் போதுமா...
இன்னும் கொஞ்சம் வேணுமா?...
என்ன கொடுமை சார் இது


மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by சிவா Tue Apr 03, 2012 1:11 am

இறுதியில் மக்கள் மட்டுமே முட்டாள்கள். இவர்களின் நாடகம் நிச்சயம் ஒரு நாள் முடிவுக்கு வரும்!


மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by யினியவன் Tue Apr 03, 2012 1:16 am

தோழியே சின்ன மேடமே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

உன் எதிர்ப்பாளர்களை உடன் ஆப்படிக்க வா வா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 1:19 am

சனி விலகியதென போஸ்டர் ஒட்டினவன் பொழப்பெல்லாம் இனி டார்...டார்...
கழிவறையை விட மோசமானது அரசியல் சில நேரங்களில்...உண்மைதான்...


மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 4:22 pm

'அக்கா'வுடன் மீண்டும் சேர்ந்த சந்தோஷத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாத சசிகலா!
அக்காவுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்று அறிக்கை விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்து தற்போது மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் பிரவேசம் செய்து விட்ட சசிகலா, இன்று பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதேபோல அவரது அண்ணி இளவரசியும் கூட வரவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே வந்திருந்தார்.

பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் திடீரென சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் திடீரென சமீபத்தில் ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார் சசிகலா. அதில் அக்கா அக்காவென ஜெயலலிதா மீது பாசத்தைக் கொட்டி மெழுகியிருந்தார். இந்தப் பாச அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவும் ஏற்கனவே, பெரும் உற்சாகத்துடன் சசிகலாவும், அவரது அண்ணி இளவரசியும் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து விட்டனர்.

மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததால் சசிகலா பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சசிகலாவும், இளவரசியும் ஆஜராகவில்லை.

கடந்த மார்ச் 30-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா, தனக்கு படித்துப் பார்க்க 150 ஆவணங்களை தர வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 11 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என ஜெயலலிதா தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ கேட்கப்படவில்லை. இவர்களுக்கு எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என குறிப்பிடவில்லை. இதுவரை கேட்கப்படாத இந்த ஆவணங்களை தற்போது பார்க்க வேண்டும் என்று கூறுவது வழக்கை தாமதப்படுத்துவதற்கான செயல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணைக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே கூலிங் கிளாஸ் போட்டபடி வந்து கலந்து கொண்டார்.

ஜெயலலிதாவுடன் இணைந்த மகிழ்ச்சியில் சொத்துக் குவிப்பு வழக்கை மறந்து விட்டாரா சசிகலா...?
http://tamil.oneindia.in
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by யினியவன் Tue Apr 03, 2012 6:00 pm

ஜேன் என்ன புதுசா சசி மேல பாசமா பின்னாடியே போயி அவங்க நியூஸா தரீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 10:25 pm

இன்னொரு நாடகம் எப்போ தொடங்கும்?...
இந்த மக்கள் இ.வாயர்கள் ஆவார்கள்?...


மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! 224747944

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Aமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Emptyமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Rமூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா! Empty Re: மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum