ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by சிவா Thu Mar 29, 2012 11:36 am

பிரதமருக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம், கசிய விடப்பட்ட பிரச்சினையால், டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மேல்-சபையில் புயல்

ராணுவத்தில் உள்ள பீரங்கிகளில் வெடிமருந்துகள் இல்லை என்பது போன்ற அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலமாகிவிட்டது. இது டெல்லி மேல்-சபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது.

டெல்லி மேல்-சபை நேற்று கூடியதும் பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பது என்ன, அந்த கடிதத்துக்கு அரசின் பதில் என்ன என்று பாரதீய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்

பாரதீய ஜனதா எம்.பி.க்கள் வெங்கையா நாயுடு, அலுவாலியா ஆகியோர் ராணுவ தளபதியின் கடிதத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறினர். ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சிவானந்த் திவாரி பேசும்போது, "வி.கே.சிங் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். ஊடகங்களுடன் அவர் பேசி வருகிற போக்கு, அவரது ஒட்டுமொத்த ஒழுங்கின்மையை காட்டுகிறது. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபைத் தலைவர் ஹமீது அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

ஒத்திவைப்பு

அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, "பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி எழுதிய கடிதம் அதிமுக்கிய ரகசிய கடிதம். அந்த கடிதம் குறித்து நான் அறிவேன். அந்த கடிதம் வெளிவந்திருக்கக்கூடாது. இது குறித்து அரசு தகுந்த பதில் அளிக்கும்'' என்றார்.

ஆனால் ஏ.கே.அந்தோணியின் பதிலில் திருப்தி அடையாத பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள், இந்த பிரச்சினையில் அரசின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபையில் தொடர்ந்து அமளி நிலவியதின் காரணமாக, 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

சபை மீண்டும் கூடியபோது, பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதற்கு சபைத்தலைவர் ஹமீது அன்சாரி, "சபையில் ராணுவ மந்திரி உள்ளார். உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். சபையில் கூறப்பட்ட கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்'' என்று கூறி சபையை அமைதிப்படுத்தி, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இதையடுத்து சபையை அவர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

அந்தோணி விளக்கம்

பின்னர் சபை கூடியபோது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுப்பினர்களின் கருத்துக்களை நான் மிகுந்த கவனத்துடன் குறித்துக்கொண்டேன். பிரதமர், சக மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்போம்.

நாட்டின் ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் பிரதமர் தனது கவனத்தை கவரும் விதத்தில் மார்ச் 12-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி கடிதம் எழுதி இருப்பது உண்மைதான். இந்த காரியங்கள் எல்லாம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளின் (நாட்டின் பாதுகாப்பு) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை வெளிப்படையாக விவாதிக்க இயலாது.

தாய் நாட்டை அரசு காக்கும்

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. உலகின் சிறந்த படைகளாக நமது பாதுகாப்பு படைகள் திகழ ஏற்ற வகையில் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையையும் அரசு செய்யும். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த நாட்டுக்கு புகழ் சேர்க்கக்கூடியதாகும். நம்மிடையே எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், தேசத்தின் பாதுகாப்பு என்று வருகிறபோது நாம் எல்லாரும் ஒன்றுதான்.

கொள்முதல்களைப் பொறுத்தமட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட முக்கிய உடன்படிக்கையின்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.100 கோடி ஒப்பந்தம் என்றாலும் அதன்படிதான் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஏதேனும் மீறல்கள் நடந்தால், கறுப்புப்புள்ளி பட்டியலில் சேர்ப்பது, ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேர்மை, வெளிப்படையான தன்மை ஆகியவற்றில் யாரும் சமரசம் செய்துகொள்ள அரசு இடம் அளிக்காது. நமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்போம்.

இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.

தினத்ந்தி


ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by யினியவன் Thu Mar 29, 2012 1:48 pm

பீரங்கியில வெடி மருந்தும் இல்ல நம்ம ஆளுங்களுக்கு
ஊழல் பண்றதில அளவு முறையும் இல்ல - அது வெளில
வந்தா வெக்க மானம் சூடு சொரணையும் இல்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by ராஜா Thu Mar 29, 2012 1:51 pm

கேவலமாக இருக்கிறது , வேறென்ன சொல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by அருண் Thu Mar 29, 2012 1:54 pm

பீரங்கியில வெடி மருந்தும் இல்லையா... அதிர்ச்சி எங்கே போகிறது இந்தியா..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 2:47 pm

மானங்கெட்ட அரசியல் தலைவர்கள் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by ஹர்ஷித் Thu Mar 29, 2012 3:35 pm

வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டம்?

தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த தேதி அடிப்படையில் வரும் மே 31 அன்று நிறைவுக்கு வருகிறது. தனது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் அடுத்த ஆண்டு தான் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து வரும் மே 31 அன்று வி.கே.சிங் ஓய்வு பெறுவது உறுதியானது. புதிய தளபதி பெயரையும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக புதிய சர்ச்சையை வி.கே.சிங் கிளப்பினார். ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தான் புகார் கூறியதாகவும் தகவல் வெளியிட்டு, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி எழுதிய ரகசிய கடிதம் வெளியாகி, இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெடிமருந்துகள் இல்லை; விமானப்படை முற்றிலும் வலுவிழந்து உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் குறைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் பூதாகரமாக கிளம்பியது. வி.கே.சிங் கடிதம் வெளியானது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பா.ஜ. தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த திவாரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.கே.அந்தோணி, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவதளபதி எழுதிய கடிதம் வெளியாகி இருக்கக்கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு, சுகுணா நில மோசடி உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தவர் வி.கே.சிங். எல்லைக் காவல் படையில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அம்பிகா பானர்ஜி கடந்த மே மாதம் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை உடனடியாக சிபிஐக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் உத்தரவிட்டார். இப்படி பல்வேறு சூழ்நிலையில் நேர்மையாக செயல்பட்டுள்ள வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்தால் அது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடிதத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

dinakaran.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது  Empty Re: ராணுவ தளபதி கடிதம் : மேல்-சபை முடங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum