ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

5 posters

Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by சாமி Wed Mar 28, 2012 5:37 pm

சடங்குகளை அமைத்தபோது ஒவ்வொரு சடங்கினையும் அறிவார்ந்த அடிப்படையில் அமைத்தனர் நம் முன்னோர். அச்சடங்குகள் புரிகின்ற தாய்மொழியில் நம் செந்தமிழ் மொழியில் ஆற்றப்பட்டபோது அவற்றின் ஊடே பொதிந்த அறிவார்ந்த பொருள் வெளிப்பட்டு மின்னி இன்பம் பயக்க, சடங்குகளுக்கு மதிப்பு கூடியது. அதனால், அச்சடங்கின்றி வாழ்வின் குறிப்பிட்ட நிகழ்வில்லை என்று சடங்கு வாழ்வில் பின்னிப் பிணைந்தது.

நாளடைவில் அயலார் தாக்கத்தால் சடங்குகள் வேற்றுமொழியில், குறிப்பாக வடமொழியில் ஆற்றப்படலான போது சடங்குகள் மொழி இழந்து, பொருள் இழந்து, மதிப்பிழந்து போயின. மதிப்பிழந்ததை எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. எனவே சடங்குகளை எதிர்ப்பது என்பது தவறாக சீர்திருத்தம் என்று பேசப்படலாயிற்று. சீரைச் சீர் என்று உணராமல் சீரை எடுத்து விடுவதே சீர்திருத்தம் என்று வளரலாயிற்று.

இது சடங்கின் மொழிமாற்றத்தால் நிகழ்ந்த விபரீதம். இருந்தாலும், ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையான தமிழ்ச் சமூகம் சடங்குகளுக்கு மதிப்பு கொடுத்து, வேறுவழியின்றி அவற்றை வேற்று மொழியில் புரியாமல் செய்து கொண்டு, அது புரியாததால் ஏற்கவும் முடியாமல் சடங்கின் மீது வைத்த மதிப்பால் அதைத் தள்ளவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டு வந்தது; வந்து கொண்டிருக்கிறது.

ஒருமுறை மறைமலையடிகள் வீட்டில் நடந்த ஒரு காரிய நிகழ்ச்சி. வீட்டின் மூத்தோர் தொல்லை காரணமாக இந்நிகழ்ச்சிக்கு ஒரு வடமொழிப் புரோகிதரை அடிகள் அமர்த்த வேண்டியிருந்தது. வந்த புரோகிதர் சொல்லி வந்த வடமொழி மந்திரங்களைக் கேட்க கேட்க அடிகளின் முகம் இறுகியது.

“என்ன மந்திரம் சொல்லுகிறாய்?” என்று அதட்டினார் அடிகள். அவரோ வடமொழியில் நல்ல ‘பாண்டித்யம்’ உடையவர். புரோகிதர் அலங்க மலங்க விழித்து ‘எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்!’ என்றார். அது திருமணச் சடங்கில் கூற வேண்டிய மந்திரம். கல்யாணத்தில் கூற வேண்டியதை அந்தப் புரோகிதர் காரியத்தில் கூறிக் கொண்டிருந்தார்.

இது எத்தனை கேவலம்? அடிகட்கு வடமொழி தெரிந்ததால் இடையில் நிறுத்தி அந்நிகழ்ச்சியை அவரே செய்து முடித்தார். வடமொழி புரியாத பாமரர்களின் கதி என்ன! எனவே சடங்குகள் மதிக்கப்பட வேண்டியவை. அவை மதிப்புப் பெறுவது அவரவர் தாய்மொழியில் அவை ஆற்றப்படும் போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழியிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவது இன்றைய தேவை.

இனி வாழ்வில் ஒருவர் சந்திக்க வேண்டிய சடங்குகள் சிலவற்றின் பெயர்களைப் பார்ப்போம். சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு.
மங்கலச் சடங்குகள்
1. தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்
2. மகவுக்கு உணவூட்டல்
3. வாழ்நாள் வேள்வி
4. குருத்து முடி கழித்தலும் காதணி விழாவும்
5. எழுத்தறிவித்தல்
6. சிவதீக்கை
7. மஞ்சள் நீராட்டு விழா
8. திருமண உறுதி
9. திருமுறைத் திருமணம்
10. வளைகாப்பு
11. புதுமனை புகுவிழா
12. மணி, பவள, முத்து விழா

அமங்கலச் சடங்குகள்
1. உயிர் புறப்பாடு
2. சடல நீராட்டு
3. திருவடிப் பேறு (மோட்ச தீபம்)
4. கல் நிறுவல்
5. ஆண்டுத் திதி

( குறிப்பு: தமிழர் வாழ்வில் தாம் சம்பந்தப்பட்ட சடங்குகளைச் செய்து கொள்ளப் பிறரை நோக்கி நிற்கும் அவலம் நீங்க ‘வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பயனடையலாம் )


Last edited by சாமி on Wed Mar 28, 2012 6:01 pm; edited 3 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty Re: சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by balakarthik Wed Mar 28, 2012 5:41 pm

மிக்க நன்றி ஐயா அதுபோல சடங்குகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இன்னும் பல உண்டு என்று நினைக்கிறேன் சரியா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty Re: சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by அதி Wed Mar 28, 2012 9:50 pm

சடங்குகள் என்பதே இப்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறதே.வேலையில் இருப்பவர்கள் சிலர் நேரமின்மையால் சில சமயங்களில் சடங்குகளை பொருட்டாகவே நினைப்பதில்லை.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty Re: சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by ஆரூரன் Thu Mar 29, 2012 7:19 am

சாமி wrote:
( குறிப்பு: தமிழர் வாழ்வில் தாம் சம்பந்தப்பட்ட சடங்குகளைச் செய்து கொள்ளப் பிறரை நோக்கி நிற்கும் அவலம் நீங்க ‘வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பயனடையலாம் )

நண்பரே புத்தகத்தைப் பற்றிய தகவல் கொடுத்துள்ளீர்கள். இன்னும் கூடுதல் தகவல் தேவை.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty Re: சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by பேகன் Thu Mar 29, 2012 10:25 am

ஆரிய மாயை...!!

பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த "கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்" ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது.

ஆரிய மாயையில் சிக்குன்றவர்கள் ஆரிய சாத்திர சம்பிரதாயங்களையும், புரான-இதிகாசங்களையும், வர்ணாசிரம முறைகளையும் நேசிப்பவராயின் தமிழர்கள் சூத்திரர்கள்-நாலாந்தர குடிமக்கள், நான்வருண சாதியிலும் வராத தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்மக்கள் என்ற ஆரிய-பார்ப்பனர்களின் நியதியை ஒப்புக்கொண்டவராவர். பண்டைய தமிழர்களின் பண்பாடும் தமிழ் அரசர்களின் ஆட்சியும் சிறப்புற்று விளங்கியது என்றும், பண்டைய தமிழர்கள் இரண்டு பெரும் பிரிவாக (ஒன்று ஆட்சி புரியும் அரச குலத்தவர்கள் மற்றையவர் குடிமக்கள்-குடிபடைகள்) மட்டுமே இருந்தார்கள் என்பதனை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவித்துள்ளனர். பிற்பாடு வந்த ஆரிய படையெடுப்புகளினால் தந்திரத்தாலும், மூடபழக்கவழக்கங்களை திணித்தும், தமிழ் அரசர்களையும் - தமிழ் மக்களையும் ஆட்சி கொள்ள வெள்ளையனின் பிரித்தாலும் கொள்கையை அன்றைக்கே புராணங்கள், இதிகாசங்கள், வருணாசிரம முறைகள் என்றவாறு புகுத்தி வெற்றியும் கண்டுவிட்டனர்.

தென்பகுதி மீதான வட இந்திய படையெடுப்புகளினால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது, பிற்பாடு வந்த முகலாயர் படையெடுப்புகளினால் தென்பகுதி நோக்கி அதிக அளவில் பரவிய ஆரிய-பார்ப்பனர்கள் அக்பரின் ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முகலாய ஆட்சிகளிலும் பின்பு வந்த வெள்ளையர்களின் ஆட்சிகளின் போதும் தங்கள் மதிப்பு குறைந்து விடாது ஆட்சியாளர்களுக்கு ஆமாம் போட்டும் தங்களின் தந்திரங்களாலும் அவர்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

பிற்பாடு வந்த உலக அனுபவங்களாலும், மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளினாலும் ஆரிய-பார்ப்பனர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டும்மல்லாமல் போராட்டங்களில் தலைமையேற்கவும் தொடங்கினர். இதனால் உண்மையான பூர்வகுடி விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்னுக்கு தெரியாமல் போய்விட்டனர். இந்திய விடுதலைக்கு முன்பான போராட்டங்களில் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கீயிருந்தது என்பதும் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த சுபாசும் அவர்களின் வர்கக உணர்வுகளுக்கு பலியானவர் என்பதும் கண்கூடு. இந்திய துணைகண்டம் முழுக்க பல்வேறு மொழியினை பண்பாட்டினை உடையதாயினும் அனைத்து இடங்களின் ஆட்சி பீடங்களிலும் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கி உள்ளமையே இதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டும்.

இன்றும் இந்திய அறிவியலாளர்களில் ஆரிய-பார்ப்பனர்களின் ஆதிக்கமே அதிகம் என்பதனையும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஆரிய-பார்ப்பனர்கள் மீதம் 97 விழுக்காடு மக்களை முழுங்கி ஏப்பம் விட்டதையும், புதிய பல இந்திய கண்டுபிடிப்புகளுக்கு சமற்கிருததிலேயே பெயரிடுவதும் ஒரு புதிய பரிணாம வரலாற்று ஆதிக்கமே என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆரிய-பார்ப்பன இதிகாசங்கள் என்ற இராமாயணமும், மகாபாரதமும் அன்றைய தென்இந்திய-வடஇந்தியர்களுக்கிடையேயான போரினை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைதான் என்பதனையும் தமிழர்கள் உணரவேண்டும். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதிதான் என்பதனையும் அதில் வருணாசிரமங்கள் பற்றியும் அரசு, ஆட்சி, மன்னர், மக்கள் பற்றியும் கிருட்டினன் போதிப்பது போல அவர்களின் நிலைகளை உயர்த்தி கோலோச்சவே எழுதப்பட்டது என்பதனையும் கடவுள், பூசை, யாகங்கள் என்று மக்களை ஏமாற்றி வெற்றி கொண்டனர் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும். இக்காலத்தில் எழுதப்படுகிற கற்பனை கதைகள், நாவல்கள் கூட பிற்காலத்தில் வரலாற்று படிமனையாக வாய்ப்புள்ளது, 23ம் புலிகேசி படத்தில் வரும் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்ற வசனம் இங்கு நினைவு கொள்வது பொறுத்தமுடையதாகும்.

எங்கு ஆட்சி நடந்தாலும் அங்கு இவர்கள் தங்கள் மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு மந்திர-தந்திரங்கள் என்று ஏமாற்றி ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தங்களின் காரியங்களை சாதித்து கொள்கின்றனர். ஆரிய-பார்ப்பனர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுபவர்கள் ஆரிய-பார்ப்பனர்கள் மற்றையவரைவிட புத்திசாலிகள், அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். எது வித வேலையும் செய்யாமல் உடல் நோகாது உண்டு கொழுத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் மற்றையவரை ஏமாற்ற சிந்திப்பதை விடுத்து. அதுவே அவர்களை புத்திசாலிகள் ஆக்கியது என்றால் உழைப்பாலும் உயர்ந்த அறிவாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் தமிழர்கள் தம்மை உணர்ந்தால் வல்லமை பெற்ற ஒரு சிறந்த சமூகமாக உருவாகுவார்கள்.

ஆரிய-பார்ப்பனர்களினால் சமூதாயத்தில் ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகளை கண்கூடாக கண்டுணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு, ஆரிய மாயை, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு என பல பரிணாமங்களில் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதனை கடந்த கால வரலாறு தெளிவாக காட்டும். தந்தை பெரியார் அவர்களின் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு என்பதற்கு பிற்பாடு தான் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பார்ப்பனரல்லாதவர்களும் அரசியல் தலைமை ஏற்று முதலமைச்சர்களாக வர வழி சமைத்ததோடல்லாமல் வட இந்திய அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்புக்கு அப்பால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நமது பண்பாடு கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டும். இட்லர் ஆரியர் என்று ஆராய்ந்து கண்டு கொண்ட ஆரிய-பார்ப்பனர்கள் இரண்டாவது உலகப்போரில் இட்லர் வெற்றிபெறவேண்டும் என்றும் உருசிய கம்யூனிசம் தோல்வி பெறவேண்டும் என்றும் பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டதையும் சிலர் வேள்வி கூட நடத்தியதையும் மறந்து விட வேண்டாம். எங்கு அவர்கள் இருப்பினும் தமது ஆரிய-பார்ப்பன உணர்வை காட்டாமல் இருப்பதில்லை. பின்பு நாம் மட்டும் எந்த வகையில் இளைத்தவர்கள்.

"ஆரிய- திராவிட-பார்ப்பன மாயையில் இருந்து தமிழர்களை - விடுவிப்போம்...!

தூயதமிழ் தேசியத்தை ஆதாரங்களோடு- வென்றெடுப்போம்...!

தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை விழுமியங்களை பாதுகாப்போம் - இழந்ததை மீட்டெடுப்போம்...!"

நன்றி அருண்மொழி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல! Empty Re: சடங்குகள் வெற்றுச் சடங்குகள் அல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum