ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம்

2 posters

Go down

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Empty மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம்

Post by சிவா Sun Mar 25, 2012 1:51 pm

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Sun09

`கொத்தடிமை முறை ஒழிந்துவிட்டதா?' என்று கேட்டால், `பட்'டென்று `ஒழிந்து விட்டது' என்பீர்கள். ஆனால் கலை என்ற பெயரில் அது திரும்பி வந்திருக்கிறது. பட்டப் பகலில், பட்டவர்த்தனமாக, `நான் விற்பனைக்கு' என்ற அறிவிப்பைத் தாங்கி நிற்கிறார்கள் சிலர்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்...

இந்தியாவின் மும்பை, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் என்று மாறி மாறிச் செயல்படும் ஓவியர், பிரீத்தி சந்திரகாந்த். கருத்து அடிப்படையிலான கலையில் கவனம் செலுத்திவரும் பிரீத்தி, `வாழும் கலைப் படைப்புகள்' என்ற பெயரில் மனிதர்களை விற்பனைக்கு அறிவித்திருக்கிறார். இது தனது சோதனை முயற்சி என்று கூறும் பிரீத்தி, இப்போதைக்கு 6 பேரை விற்பனைக்கு நிறுத்தியிருக்கிறார், அவர்களை `வாங்குவோர்' தன்னை ஏற்கனவே அணுகியிருப்பதாகவும் கூறுகிறார்.

``முதல் வாடிக்கையாளரை நாங்கள் உலக அளவில் எதிர்பார்த்திருக்கிறோம். இதுவரை பலர் எங்களிடம் விசாரித்திருக்கிறார்கள். இம்மாதிரியான ஒரு கலைப் படைப்பை நீங்கள் வாங்குவது ஆர்வமூட்டுவதாகவே இருக்கும்'' என்கிறார் பிரீத்தி.

கருத்து சார்ந்த ஓவியர், சிந்தனையாளர் ரொமானோ பேசியாட்டி உடன் இணைந்து செயல்படும் பிரீத்தி, மனித கலைப் படைப்புகளை உருவாக்கும் யோசனை, பிரெஞ்சு கருத்தோவியர் யுவென் கிளெய்னின் கருத்தில் இருந்து பிறந்ததாகக் கூறுகிறார். கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்று கூறுபவர் கிளெய்ன்.

``நாங்கள் உண்மையில் அந்த லெவலுக்கு போயிருக்கிறோம். கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதோடு மட்டுமின்றி, மற்றவர்களையும் கலையாக உருவாக்க வேண்டும், அவர்களில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும்'' என்கிறார் பிரீத்தி.

கடந்த 2002-ம் ஆண்டிலேயே தனது இந்தப் புதுமை (?) முயற்சியைத் தொடங்கிவிட்டார் பிரீத்தி. தங்களைக் கலைப் படைப்பாக்குவதற்கு சுமார் ஆயிரம் பேர் தாமாகவே முன்வந்தார்கள் என்பதும் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆனால், விற்கத் தகுந்தவர்களாக 6 பேர் மட்டும் (3 இந்தியர்கள், 3 ஐரோப்பியர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரி, இந்த உயிருள்ள கலைப் படைப்பை வைத்து என்ன செய்வது?

கலைப்பொருளை எப்படி உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பிய இடத்தில் வைத்து அலங்கரிப்பீர்களோ, அதைப்போல, `இவர்களை' உட்காரவோ, நிற்கவோ வைக்கலாம். பூங்கா, அருங்காட்சியகம் என்று நீங்கள் விரும்பிய இடத்துக்கு அனுப்பலாம். அவர்கள் சென்றுவந்து, தங்களின் அனுபவங்களை உங்களிடம் சமர்த்தாக விவரிப்பார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்களின் `அறிவுஜீவித்தனமான நீட்சி'யாக இவர்கள் இருப்பார்கள்.

ஆனால் கலைப்படைப்பு என்று கூறினாலும், `விற்கப்படுவது' என்பது அவமானகரமானது இல்லையா?

அப்படியில்லை என்கிறார், மும்பையைச் சேர்ந்த `உயிருள்ள கலைப் படைப்பான' புருஷார்த்த சைனி.

``விற்கப்படுவதில் எனக்கு முழுச் சம்மதம். என்னுடைய ஒப்புதலைப் பெற்றபின்தான் என்னை விற்பதாக அறிவித்தார்கள்'' என்றும் கூறும் இவர், சாதாரணமாகத் தெருவில் போகிறவர் இல்லை. ஐ.ஐ.டி. பட்டதாரி. ஓவியர் பிரீத்தியின் மேலாளரும் கூட. இவர் தனக்கான `விலை'யை மட்டும் கூற மறுக்கிறார்.

ஒப்புதலை தெரிவித்தபின், பரிமாற்றம், விதிகள், கட்டுப்பாடுகள், `பேக்கேஜிங்', காப்பீடு, மறுவிற்பனை, ஏலம் போன்ற பல விஷயங்களைப் பிரீத்தி தெளிவாக விளக்கியதாகக் கூறுகிறார் இவர்.

ஆனால் மனிதர்களை விற்பது எப்படி கலை ஆகும் என்ற கேள்விக்கு சைனி தடுமாறாமல் பதில் கூறுகிறார்,

``நான் அறிந்தவரை, மனிதர்களை அவர்களின் சொந்த ஒப்புதலுடன் விற்றால் அது சட்டப்பூர்வமானதே.''

இந்த விஷயத்துக்கு மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்று அறிந்து அதற்கும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் இவர்.

``மனித உரிமை ஆர்வலர்கள் இதை எதிர்த்தால் அவர்களை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நான் தயாராயிருக்கிறேன். விற்கப்படுவதில் நான் உறுதியாக இருப்பேன். உங்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத ஒன்றை நான் செய்தால், அதற்கு எப்படி நீங்கள் கேள்வி எழுப்ப முடியும்?'' என்று கேட்கிறார் சைனி.

இப்படி விற்கப்படுபவர்களும், விற்பவர்களும் உறுதியாக இருந்தாலும், பழைய கொத்தடிமை முறையின் நவீன வடிவம்தான் இது என்கிறார்கள் விமர்சகர்கள்.

`விற்கப்படுவதற்கான உரிமை' என்பது நாளையே `சாவதற்கான உரிமை'யில் போய் நிற்கும். பெண் சிசுக்கொலை பெரும்பாலும் பெற்றொரின் ஒப்புதலுடன் நடப்பதால் அதுவும் சரிதான் என்று வாதிடத் தொடங்குவார்கள் என்கிறார்கள்.

உலகமெங்கும் மனிதக் கடத்தலும், விற்பனையும் பெரும் அளவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதை இப்படிச் சட்டபூர்வமாக்குவது பெரும் விபரீதமாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் அச்சம்.

ஆனால், தான் ஒன்றும் மலிவான விளம்பரம் தேடவில்லை. கலைப் பொருட்களில் இருந்து மனிதர்களை நோக்கி அனைவரின் கவனத்தைத் திருப்புவதற்காகவே இவ்வாறு செய்கிறேன் என்று வாதிடுகிறார் பிரீத்தி சந்திரகாந்த்.

வாதங்கள், பிரதிவாதங்கள் மத்தியில், `உயிருள்ள கலைப் படைப்புகள்' விற்பனைக்குக் காத்திருக்கின்றன.

தினதந்தி


மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Empty Re: மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம்

Post by இளமாறன் Sun Mar 25, 2012 1:53 pm

பகிர்வுக்கு நன்றி சிவா... இது ஏற்கெனவே வந்து விட்ட செய்தி இருப்பினும் ...

அறிவியல் மருத்துவம் இவைகளிலும் சிலர் தங்களை விற்று கொண்டு இருக்கிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum