ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்குட்டி

3 posters

Go down

கடைக்குட்டி Empty கடைக்குட்டி

Post by சிவா Fri Mar 23, 2012 8:48 am




நான்காம் வகுப்பு படிக்கும் கண்ணன் பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்துடன் குளித்து தயாரானான். பள்ளிச் சீருடையாக புதிய வெள்ளைச் சட்டை எடுத்துத் தரும்படி தன் அப்பாவிடம் சொல்லியிருந்தான்.

தனக்கு புதிய சட்டை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவனது அப்பா தந்த சட்டையைப் பார்த்ததும் ஒரு புறம் அதிர்ச்சியும், மறுபுறம் கோபமும் வந்தது. அதற்குக் காரணம் அந்தச் சட்டை அவனது அண்ணன் குமார் பயன்படுத்திய சட்டை.

`எனக்கு அண்ணனோட பழைய சட்டை வேண்டாம்பா. புது சட்டைதான் வேணும்' என்றான் கண்ணன்.

`இதோபாரு அண்ணனோட சட்டை புதுசாத்தானே இருக்குது. அண்ணன் வளர்ந்துட்டதால இனி இது அவனுக்கு பயன்படாது. உனக்கு சரியாயிருக்கும். நீ போட்டுக்க. அண்ணனோட சட்டையை தம்பி போட்டுக்கிறதுல என்ன தவறு?' என்று சொன்ன கண்ணனின் அப்பா சட்டையை கண்ணனிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

கண்ணனின் அப்பாவுக்கு வருமானம் குறைவு. அந்த வருமானத்தில் அடிக்கடி பிள்ளைகளுக்குப் புதிய சட்டை வாங்கித்தர இயலாது. எனவேதான் அண்ணன் குமாரின் சட்டையை கண்ணனிடம் போட்டுக் கொள்ளும்படி சொன்னார்.

கண்ணனுக்கோ எரிச்சலாய் வந்தது. `பிறந்தால் வீட்டின் முதல் குழந்தையாய்ப் பிறக்க வேண்டும். அப்போதுதான் புது சட்டை, புது பொம்மை எல்லாம் கிடைக்கும். என்னைப் போல கடைக்குட்டியாய்ப் பிறந்தால் மூத்த பிள்ளைகள் உபயோகித்த பழைய சட்டை, பழைய பொம்மைதான் கிடைக்கும்' என்று வருந்தியபடியே பள்ளிக்குச் சென்றான்.

பள்ளியில் கண்ணனின் வகுப்புத் தோழன் மதிவாணன். மகிழ்ச்சி, துக்கம் எது என்றாலும் கண்ணன் எப்போதும் மதிவாணனிடம்தான் பகிர்ந்து கொள்வான்.

அன்று மதிய இடைவேளையின்போது கண்ணன் மதிவாணனிடம், `மதிவாணா? நீ கொடுத்து வைத்தவன். நீ உன் வீட்டில் மூத்த குழந்தையாய் இருப்பதால் உனக்கு எப்போதும் புதிய சட்டை, புதிய பொம்மை எல்லாம் கிடைக்கும். ஆனால் கடைக்குட்டியான என்னைப் பாரேன், எனக்கு என் அண்ணன் உபயோகித்த பழைய பொருட்கள்தான் கிடைக்கிறது' என்று தன் பழைய வெள்ளைச் சட்டையை காண்பித்து வருந்தினான்.

அதைக்கேட்ட மதிவாணனோ, `நீ சொல்வது தவறு கண்ணா? எனக்கு உன்னைப்போல கடைக்குட்டியாய் பிறக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. கடைக்குட்டியாய்ப் பிறந்தால் அப்பா, அம்மாவுக்கு எப்போதும் நாம் செல்லக் குழந்தையாய் இருக்கலாம். என் வீட்டில் நான் மூத்த பிள்ளையாய் இருப்பதால் என் தம்பியோ, தங்கையோ தவறு செய்தால்கூட, அப்பாவும் அம்மாவும் என்னைத்தான் திட்டுகிறார்கள். ஏதாவது தின்பண்டம் வாங்கி வந்தால்கூட தம்பிக்கும், தங்கைக்கும்தான் முதலில் கொடுப்பார்கள். அந்த வகையில் நீ எவ்வளவோ கொடுத்து வைத்தவன்' என்று சொன்னான்.

கண்ணன் யோசித்துப் பார்த்தான்... மதிவாணன் சொல்வதும் சரிதான். வீட்டில் அண்ணனைவிட என் மீது தானே, அப்பாவும் அம்மாவும் செல்லமாய் இருக்கிறார்கள். நான் செய்த தவறுகளுக்காக அண்ணன் எத்தனை முறை திட்டு வாங்கியிருக்கிறான். எனக்கு எவ்வளவு சலுகைகள் கிடைக்கின்றன. இது தெரியாமல் கடைக்குட்டியாய் பிறந்ததற்கு எதற்காக குறைபட்டுக் கொள்கிறேன்' என்று எண்ணிப் பார்த்தான். மதிவாணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்பா மீது இருந்த கோபத்தை கைவிட்டான்.

- கீர்த்தி


கடைக்குட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடைக்குட்டி Empty Re: கடைக்குட்டி

Post by யினியவன் Fri Mar 23, 2012 11:13 am

நல்ல கதை சிவா - பகிர்வுக்கு நன்றி.

எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே - சிவா சொன்னது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடைக்குட்டி Empty Re: கடைக்குட்டி

Post by பாலாஜி Fri Mar 23, 2012 1:05 pm

நல்ல கதை .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடைக்குட்டி Empty Re: கடைக்குட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum