ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Empty இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

Post by சிவா Fri Mar 23, 2012 8:09 am



இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஞானதேசிகன்

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக மத்திய அரசையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தி சிலர் பேசிவந்தனர். ஆனால் இன்றைக்கு இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அப்பாவி தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதையும், மனித உரிமை மீறல்களை இந்தியா என்றைக்கும் ஆதரிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு துணைநின்ற தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கும், சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இலங்கையில் வாழ்கிற 30 லட்சத்திற்கும் மேல் உள்ள தமிழர்களுக்கு உரிமையையும், நல்ல வாழ்க்கை முறையையும், அரசியல் தீர்வையும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாலேயே இலங்கை தமிழர்களின் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று கூறமுடியாது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியவரக்கூடும். அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக இதை கருதலாம்.

அதே நேரத்தில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதுடன், நமது கடைமை முடிந்துவிட்டது என்று நாம் ஓய்ந்துவிடக்கூடாது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் அறிக்கையில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. சிங்களர்களுக்கு தமிழர்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பலமுறை கூறியுள்ள நிலையில், அவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு அதிகாரம் தரமாட்டார்கள். சிங்களர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்வதும் சாத்தியமற்ற ஒன்று.

எனவே இலங்கை இனச்சிக்கலுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் அமைப்பதுதான். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை நாம் விரைவுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நீதிபெற்று தரும் கடமை இந்திய அரசுக்கு உண்டு என்பதால், தனித் தமிழ் ஈழம் அமைக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. அமைப்பை இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜீ.ராமகிருஷ்ணன்


இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலும், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென முடிவெடுத்துள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமஅந்தஸ்து, சம உரிமைகள், சுயாட்சி, அதிகாரப்பகிர்வு ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளிட்ட ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய அரசியல் தீர்வு காண இலங்கை அரசினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

ஐ.நா. மனித உரிமை குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்ததற்கு பதிலாக, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். இருப்பினும், இப்போது போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கவும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் இலங்கையை நிர்பந்திப்பதற்கு இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இலங்கையை வற்புறுத்த வேண்டும்.

இந்த தீர்மானம், இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கை. சர்வதேச சமூகத்தின் கவலையை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச ஆய்வுக்கு இலங்கை உட்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இலங்கை என்ன செய்யப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கவனித்துக் கொண்டிருக்கும்.

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

தினதந்தி


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Empty Re: இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

Post by சிவா Fri Mar 23, 2012 8:10 am

ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு: இந்தியா விளக்க அறிக்கை


ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

வரவேற்பு

இலங்கை அரசு நியமித்த `கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்' (எல்.எல்.ஆர்.சி.) சிபாரிசுகளை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். இலங்கையின் பல்வேறு மதரீதியான, இனரீதியான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண இது நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.

கடந்த 2009-ம் ஆண்டு இதே குழு கூட்டத்தில் இலங்கை, இதை செய்வதாக உறுதி அளித்தது. தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தினோம்.

அரசியல் தீர்வு

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை எல்.எல்.ஆர்.சி. ஆணையம் அங்கீகரித்துள்ளது.

போரின்போது காணாமல்போன நபர்கள், சிறை வைக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், உயர் பாதுகாப்பு மண்டலங்களை குறைத்தல், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை தடை செய்தல், தனியார் நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், ராணுவமயமாக்கலை குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எல்.எல்.ஆர்.சி. ஆணையம் உறுதியான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த குழு கூட்டத்தில் இலங்கை அரசு விளக்கிக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவது, உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியா உதவி

இந்தியாவும், வடக்கு இலங்கையில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கணிசமான உதவிகளை செய்துள்ளது. வீடு கட்டிக் கொடுத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பொது சுகாதாரம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளதால், அங்கு இயல்பு நிலைமை திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகார பகிர்வு

இந்த பின்னணியில், இலங்கை அரசு விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துதல், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மனித உரிமை மீறல் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்களை பொறுப்பாளி ஆக்குவதுடன், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், இலங்கையின் சிறுபான்மை இனமாகிய தமிழர்கள் உள்பட அனைத்து இன மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.

இறையாண்மை

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, நாடுகளுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்புகிறது. எனவே, இதுதொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் (இலங்கை) இறையாண்மை உரிமையை மதிப்பதாக இருக்க வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதெல்லாம், ஐ.நா. மனித உரிமை குழுவில் நாம் ஒப்புக்கொண்ட விதிமுறைகள்.

நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக் கூடாது.

இலங்கையுடன் உறவு

அண்டை நாடான இலங்கையுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவு, இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கை நிகழ்வுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது.

இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் கூடிய எதிர்காலம் அமைவதற்காக, நல்லிணக்க நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Empty Re: இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

Post by சிவா Fri Mar 23, 2012 8:11 am

இலங்கைக்கு தோல்வி ஏன்? மந்திரி பெரீஸ்


ஜெனீவா நகரில் நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானம் அமோக வெற்றி பெற்றது. இது மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஓட்டெடுப்பின்போது உடனிருந்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல். பெரீஸ் கூறியதாவது:-

பல்வேறு வகையில் வந்த தீவிரமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் ஓட்டு அளித்திருப்பது மிகப்பெரிய திருப்தி அளிக்கிறது. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ள வில்லை. 47 உறுப்பினர்களை கொண்ட மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்க வில்லை. 24 நாடுகள்தான் ஆதரித்துள்ளன. அப்படிப்பார்த்தால் மிகக்குறைந்த வித்தியாசம்தான்.

இதில் மிகவும் வேதனை தந்த அம்சம், குறித்த பிரச்சினையின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஓட்டு உறுதி செய்யப்படவில்லை. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தீர்மானம் தொடர்பான நாட்டின் நலன் கண்டுகொள்ளப்படவில்லை. மனித உரிமை கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு இது எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு ஓட்டு அளிக்க தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியைத்தான், உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் என்று பெரீஸ் குறிப்பிட்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு Empty Re: இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. சபை தீர்மானம்: இலங்கைக்கு, இந்தியா ஆதரவு- தமிழக கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம்
» ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம்: யு.எஸ். முடிவு
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum