Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
5 posters
Page 1 of 1
மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
![மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று ! Mk-1](https://2img.net/h/2.bp.blogspot.com/-S0Nq_40xgAw/T2jKI5lUC7I/AAAAAAAAFnY/67tmHI04MNQ/s400/mk-1.jpg)
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்குமாக இருந்தால் திமுக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருப்பார்கள்… இந்தியப் பிரதமர் சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கப் போதில்லை என்று எழுதியிருப்பதால் இதோ பதவி விலகல் முடிவு கைவிடப்படுகிறதென மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதை மு. கருணாநிதி சொன்னதில் தப்பேதும் கிடையாது… ஆனால் மிகப்பெரிய வருத்தம்.. ஈழத் தமிழினத்தை அவர் எவ்வளவு பெரிய முட்டாள்களாக எடைபோட்டுள்ளார் என்பதுதான்.
இது மு.கருணாநிதி போட்ட நாடகமா இல்லை இது அவருடைய இயலாமையா.. இல்லை தமிழ் நாட்டு தலைவர்கள் இவ்வளவு கேவலமான செல்லாக்காசு அரசியல் வாழ்வையா வாழ்கிறார்கள் என்ற கவலையை ஏற்படுத்துகிறது அவரது பேட்டி.
அன்று..
சிறீலங்காவில் உள்ள இனவாத தொழு நோய் பிடித்த சிங்கள அரசியல் கட்சிகளுக்கு வடக்குக் கிழக்கில் பல ஏஜெண்டுகள் இருப்பார்கள். ஏமாற்றிப் பிழைப்பது இந்த மனச்சிரங்கு மனிதர்களின் பிழைப்பு. வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் யார் யாருக்கு வேலை கிடைத்துள்ளது என்று விபரத்தை கொழும்பு சென்று அறிந்து கொள்வார்கள்.
கொழும்பில் இருந்து கடிதம் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்க சுமார் ஒரு வாரம் இடைவெளியிருக்கும். இரவோடு இரவாக ஊருக்கு வந்துவிடும் இந்த அரசியல் திருடர்கள், வேலை பெற்றவர்களை சந்தித்து, குறிக்கப்பட்ட வேலையை எடுத்துத் தருவதாகக் கூறி, பணத்தைக் கறந்துவிடுவார்கள்.
பிறகு நியமனக் கடிதம் தானாக வரும்…
தானே குறிக்கப்பட்ட நபருக்கு வேலை எடுத்துக் கொடுத்ததாக தெருத்தெருவாக கதை பரப்பி இந்தத் திருடர்கள் வீதி வலம் வருவார்கள். மனிதப் பிறவியிலேயே மிகக் கேவலமானவர்கள் இத்தகைய பேர்வழிகள்.
இந்தமாதிரி ஏமாற்று முகவர்கள் சிங்கள கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இருந்தார்கள்.
இதே முகவர் வேலையைத்தான் இப்போது மு.கருணாநிதி செய்துள்ளார். இந்தியா சிறீலங்காவை ஆதரிக்காது என்பது போன்ற கடிதத்தை மன்மோகன் சிங் அனுப்புவார் என்று தெரிந்து, அதற்கு அமைவாக மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, பின் கடிதம் வந்துவிட்டது பார் என்று மக்களை ஏமாற்றியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது இவர் நடாத்திய உண்ணாவிரத நாடகம் சந்தி சிரித்து, பதவியில் இருந்தும் தூக்கி வீசப்பட்டார். திருந்தியிருப்பார் என்று கருதியவர்கள் ஏமார்ந்தார்கள், அவர் திருந்த முடியாத அரசியல் முகவர் என்பதை உணர்த்தியுள்ளார்.
இதை நன்கு அறிந்து மன்மோகனும், மு.கருணாநிதியும் ஆடிய நாடகம் என்பதை ஜெயலலிதா அம்பலமாக்கியுள்ளார். மு.கருணாநிதிபோலவே விழப்போகும் பனம் பழத்தில் உட்காரும் காகம்தான் மன்மோகன் சிங் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்தியாவின் நிலைப்பாடு உண்மையாக மாறிவிட்டதா என்றால் மர்மம் நீடிக்கிறது.. வாக்கெடுப்பு முடிய முன்பு இந்தியாவை நம்ப முடியாது..
இந்தியா வாக்களிப்பிற்கு ஆதரவளிக்கப் போவதாக சொல்லியிருப்பது ஜெனீவாவில் பிறக்கப் போகும் குழந்தைக்கு கருவிலேயே நஞ்சு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
அதைவிட பெரும் கவலை…
கொல்லப்பட்ட 140.000 அப்பாவிகளின் உயிர்களோடு மு.கருணாநிதி தனது குடும்ப சுயநல அரசியலை இணைக்கிறாரே என்பதுதான்.
அன்று..
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்த பின் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஈழத் தமிழினத்திற்கு ஓர் அறிவுரை கூறியிருந்தார். மு.கருணாநிதியை நம்பி ஈழத் தமிழர் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை.. ஆகவே கலைஞரை குறை கூறுவது தப்பு என்று கூறியிருந்தார்…
இப்போது..
ஐ.நா பிரேரணையில் கலைஞரை தலையிடும்படி எந்த ஈழத் தமிழன் கேட்டான்… கருணாநிதி எதற்காக இந்த நாடகத்தை ஆடினார்…
ஆம்..
ஈழத் தமிழனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழக தலைவர்களை கண்டிக்காது அவர்களுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டது ஈழத் தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் இழைத்த மாபெரும் அநீதி.. இப்படிப்பட்ட கேவலமான நிலையில் ஈழத் தமிழன் இருக்கும்போது, மு.கருணாநிதி இறந்த ஈழத் தமிழனின் சடலத்தில் அரசியல் நடாத்த முயல்வதில் தப்பேதும் இல்லை.
திமுகவின் போலி தமிழ் பிரச்சாரத்தை நம்பி திமுகவின் உதய சூரியன் சின்னத்தை வைத்து தேர்தலில் போட்டியிட்ட தமிழர் கூட்டணி.
தமிழக தலைவர்களை நம்பி முள்ளிவாய்க்காலில் முடிந்து போன புலிகள்.. மக்கள்.. குழந்தைகள்…
இத்தனை அவலங்களின் பின்னராவது, மு.கருணாநிதி ஆடியது கபட நாடகமே என்ற குரல் நம்மிடையே கேட்கிறதா..
கேட்காது..
ஏனென்றால் இந்தியாவை பகைத்தாக முடிந்துவிடுமென அமைதி காக்கிறான் ஈழத் தமிழன்..
அது தெரிந்து அவன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் தமிழக தலைவர்கள்..
அன்றொருநாள்…
நம்மூரில் கிளி அம்மான் என்றொரு பாமரன்… நமது கருணாநிதி வந்தானென்றால் இசுபிசு இசுபிசு வென்று சிங்கள ஆமிக்காரனை சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று அலறியபடி வாழ்ந்து வந்தான்..
ஒரு நாள்…
அவனை இந்திய அமைதிப்படை சுட்டு தெருவில் போட்டிருந்தது…
மன்மோகன் சிங்கும், மு.கருணாநிதியும் ஈழத் தமிழர்களை கிளியம்மான்களாகவே கருதுகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும்… இல்லையேல் அவர்களுடைய கனவுகளும் கிளியம்மான் போல தெருவிலேயே கிடக்கும்..
அலைகள் சீமான் GTVக்கு வழங்கிய செவ்வி…
Guest- Guest
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
மிகவும் உண்மை...புரட்சி தம்பி...மு.க. எல்லோரையும் முட்டாளாக்கியே மேலே வந்தவர்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
கருணாநிதியே, ஜெயலலிதாவே, உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?
மாத்தி மாத்தி லாவணி பாடிக்கிட்டு? தமிழருக்கு எதிரான செயல்களை செய்வதில் வல்லவர்கள் நீங்கள் இருவரும். இதுலே உங்களுக்குள்ளேயே போட்டி வேறயா?
மாத்தி மாத்தி லாவணி பாடிக்கிட்டு? தமிழருக்கு எதிரான செயல்களை செய்வதில் வல்லவர்கள் நீங்கள் இருவரும். இதுலே உங்களுக்குள்ளேயே போட்டி வேறயா?
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
மு. கருநாகநிதி ஒரு காமெடியர். அவரின் பேச்சுகளை பற்றி பேசி நேரம் கடத்துவது வீண்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை...புரட்சி தம்பி...மு.க. எல்லோரையும் முட்டாளாக்கியே மேலே வந்தவர்.![]()
நாம புத்திசாலியாகணுமுனா அடுத்துதவங்களா முட்டாளாகித்தானே ஆகணும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
கெட்டிக்காரன் புளுகு........................balakarthik wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை...புரட்சி தம்பி...மு.க. எல்லோரையும் முட்டாளாக்கியே மேலே வந்தவர்.![]()
நாம புத்திசாலியாகணுமுனா அடுத்துதவங்களா முட்டாளாகித்தானே ஆகணும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
அசுரன் wrote:கெட்டிக்காரன் புளுகு........................
அரசியல் வியாபாரத்துலத்தான் வயசோ, காலக்கெடுவோ கிடையாதே சங்கூதரவரைக்கும் கூட இல்ல சங்கூத்தினபிரகு கூட அரசியல் பண்ணலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
இனிமேல் இந்த ஏமாற்று அரசியல் தான் இருக்க போகிறதோ என்னமோ
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|