ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகு-சினிமா விமர்சனம்

Go down

கழுகு-சினிமா விமர்சனம் Empty கழுகு-சினிமா விமர்சனம்

Post by பிரசன்னா Sun Mar 18, 2012 5:15 pm

இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..!

ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு.. கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய கணவர்மார்களும், கணவரின் கள்ளக்காதலியை கொலை செய்ய மனைவிமார்களும் மூணாறுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு.. இவர்களில்லாமல் எப்போதுமே மாதத்திற்கு ஒன்றாக தேடி வந்து விழுபவர்கள் காதலர்கள்தான்..!

கழுகு-சினிமா விமர்சனம் Kazhugu-1

இப்படி மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்பவர்களையும், கொலை செய்யப்படுவர்களையும் பிணமாகத் தூக்கி வரும் வேலையைச் செய்து வரும் கூட்டத்தில் ஹீரோவான கிருஷ்ணா, கருணாஸ், தம்பி இராமையா, மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!

ஹீரோயின் பிந்து மாதவியின் தங்கை, தனது காதலனுடன் தற்கொலை செய்து கொள்ள.. அதில் ஹீரோயினின் தங்கையின் உடலை மட்டும் தேடியெடுத்து வருகிறார்கள். அதில் கவரப்பட்ட பிந்துவிக்கு ஹீரோவின் முரட்டு குணம், குடிகாரன் பட்டம் எல்லாம் வழக்கம்போல கவர்ந்துவிட ஹீரோவை லுக்கு விடுகிறார். அதற்குள்ளாக தங்கையின் உடலில் இருந்து உருவப்பட்ட மோதிரத்தையும், செயினையும் கிருஷ்ணா திருப்பிக் கொடுத்ததால் லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. இடையில் தேயிலை எஸ்டேட் முதலாளியான ஜெயப்பிரகாஷை ஒரு வழக்கில் இந்த டீம் சிக்க வைத்துவிட.. ஜெயப்பிரகாஷ் 1990 பட வில்லன் மாதிரி நான் வெளில வர்றதுக்குள்ள முடிச்சிரு என்று 4 பேருக்கும் சங்கு ஊதுகிறார்..! அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கிருஷ்ணா நடிக்கும் 3-வது படம் இது. முடிந்த அளவுக்கு அவரது முகவெட்டுக்கு ஏற்ற வேடம்தான் என்பதால் சமாளித்திருக்கிறார்..! லவ்வுன்னா என்னன்னுகூட தெரியாத அப்பாவி என்ற ஸ்கெட்ச்சுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு.. எப்பவும் பீடியை வலித்துக் கொண்டு ஒரே பாவனையுடன் இருப்பது கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது..!

ஏதோ பிந்து மாதவி இருப்பதால் பாடல் காட்சிகளில் ஒரு அட்ராக்ஷன் இருக்குன்னு நினைக்கிறேன்..! ஆனாலும் பல காட்சிகளில் முணுக்கென்றால் அழுக வைப்பது போல் நடிக்க வைத்திருப்பது சகிக்கவில்லை..! தங்கையிடம் கொடுத்த மோதிரத்தை கிருஷ்ணாவின் கையில் பார்த்தவுடன் அதில் தனது தலையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் அந்தக் காட்சி ஒரு கிளாஸ்..! பிந்துவின் திரும்பிப் பார்க்கும் அந்த ஷாட் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.. விபத்தில் சிக்கியது கிருஷ்ணாதானோ என்றெண்ணி அவருடைய பதட்டமும், ஓட்டமும், கடைசியில் அவரைப் பார்த்தவுடன் காட்டும் ஆக்சனும் அருமை..! கேமிராவும், இயக்கமும் ஏதோ ஒன்றைச் செய்கின்ற இந்த ஒரு இடத்தில். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை உண்டாக்கியது இதுதான் என்பதால் கனகச்சிதம்..! பிந்துவிக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால், ஒண்ணுமே இல்லாமல் கோடிகளைச் சுருட்டும் தமன்னா போன்ற சப்போர்ட்டாக்களை ஓரம்கட்டலாம்..!

தம்பி ராமையாவும், கருணாஸும்தான் கிருஷ்ணாவை பாதி காப்பாற்றியிருக்கிறார்கள். கருணாஸின் இந்த குணச்சித்திர வேட முடிவு பாராட்டுக்குரியதுதான்.. அம்பாசமுத்திரம் அம்பானிக்கு பிறகு அடுத்தப் படத்துக்கு பூஜையை போட்டுவிட்டு தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமாததால் புத்திசாலித்தனமாக வரும் வேடத்தைத் தொடர்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..! இதையே தொடர்ந்தால் நலமாக இருக்கும்..!

தம்பி ராமையாவின் நடிப்பு வழக்கம்போலத்தான்.. அவருடைய தலையை வைத்துச் சொல்லப்படும் வசனங்களை எந்தப் படத்தில்தான் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை..? தொடர்ந்து கேட்க எரிச்சலாக இருக்கிறது..!

ஜெயப்பிரகாஷ் போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடும் அளவுக்கு குற்றவாளியாக இருக்கிறார் என்பதை முதல் காட்சிலேயே பதிவு செய்யும் இயக்குநர், அவர் மீதான பார்வையை அழுத்தமாக பதிவு செய்யவில்லை..! கடத்தல் தொழில் செய்பவராக இருக்கட்டும்..! லோக்கல் போலீஸுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தனுஷ்கோடியில் இருப்பவனுக்குத் தெரியும்.. அப்படியிருக்க.. ஏதோ அவர் யாருக்குமே தெரியாமல் செய்கிறார் என்பது போல் காட்டி படத்தின் முடிவுக்கு அவரை பயன்படுத்திருப்பது வீண்தான்..!

இந்த நால்வர் கூட்டணியில் கடைசி ஆள் ஊமை என்பதே இடைவேளைக்கு பின்புதான் தெரிகிறது..! இந்த சஸ்பென்ஸ் எதற்கும் உதவவில்லை என்பது சோகம்தான்..! தங்களுக்கு உதவியாக இருப்பவர்களையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்து வெளுத்துக் கட்டுவதும், இன்ஸ்பெக்டர் அவர்களைவிடச் சொல்லும் காரணமும் ஏற்கக் கூடியதே.. தொடர்ச்சியான காட்சிகளில் போலீஸ் திருடன் விளையாட்டு மாதிரி இருவரும் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வதெல்லாம் ஏக பொருத்தம்தான்..!

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒளிப்பதிவுதான்.. மூணாறு என்பதால் இயற்கை தந்த அழகோடு, கேமிராமேன் சத்யா படமாக்கிய விதமும் காட்சிக்கு காட்சி கவிதையாக இருக்கிறது..! இப்போது வரக் கூடிய அனைத்து படங்களிலுமே ஒளிப்பதிவை ரம்மியமாகத்தான் செய்து வைக்கிறார்கள். ஆனால் கதையில்..? இசை யுவன்சங்கர்ராஜா...! ஆத்தாடி மனசுதான் பாடலும், பாதகத்தி கண்ணுபட்டு பாடலும் கண்ணைத் தொடுகின்றன..! பாடல் காட்சியிலேயே காதல் காட்சிகளை வரிசைப்படுத்தி சென்று கொண்டு கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறார் இயக்குநர்..!

படத்தின் துவக்கத்திலேயே கருணாஸ் சொல்லும் ஒரு வசனத்தின் மூலமே படத்தின் கிளைமாக்ஸ் புரிந்துவிட்டது. இது என் போன்றோருக்கு மட்டுமே..! வெகுஜன ரசிகர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனாலும் இறுதிக் காட்சி மனதுக்குள் பதியும் அளவுக்கு எடுக்கப்படவில்லை என்பது மட்டும் தெரிகிறது..!

இப்போதைய டிரெண்ட்டில் ஜெயிக்க வேண்டும். காதல் தேவை. நண்பர்கள் தேவை.. சிறந்த ஒளிப்பதிவும், பாடல்களும் இருக்கின்றன.. ஆனால் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று தேவை.. அது மனதிற்குள் படத்தை பதிய வைக்க இருந்த இடங்களிலெல்லாம் நகைச்சுவை போல தாவிச் சென்றுள்ளது படத்தின் மிகப் பெரிய மைனஸ்.

எழுந்திரிக்க முடியாமல் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கிருஷ்ணா ஒரு கப் தண்ணி பட்டவுடன் டி.ராஜேந்தர் அளவுக்குத் தெளிவாக, தெனாவெட்டாக பேசுவதெல்லாம் ஒட்டவேயில்லை.. அதேபோல் காரணமேயில்லாமல் பிந்துவிடம் முதலில் அலட்டிக் கொள்வதும், பின்பு நண்பர்களின் நிலைமை பார்த்து உடனுக்குடன் ஆவேசப்படுவதும் படத்தை முடிக்கும் அவசரத்தில் திரைக்கதை இருப்பதுபோல் தெரிகிறது..!

பணம் இருக்கிறது.. படம் எடுக்கலாம்.. திறமைசாலி இயக்குநர் கிடைத்துவிட்டால் போதும்.. ஆனாலும் இதற்கு மேலும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று சினிமாவுலகத்துக்குத் தேவை.. அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.. அல்லது முருகனின் ஆசி என்றும் சொல்லலாம்.. அதில் ஒன்று இவர்களுக்குக் கிடைத்தால் இயக்குநரும், கிருஷ்ணாவும் பிழைத்துக் கொள்வார்கள்..!


நன்றி - http://truetamilans.blogspot.com/2012/03/blog-post_16.html

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum