Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
+4
இரா.பகவதி
மகா பிரபு
யினியவன்
சிவா
8 posters
Page 1 of 1
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
மீடியா அலுவலகங்களில் எடிட்டோரியல் மீட்டிங் தொடங்கி, குக்கிராமங்களில் அதிகாலை டீக்கடை அரட்டை வரை சங்கரன்கோயில்தான் இப்போது ஹாட் டாபிக். பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகம். அதுவும் சங்கரன்கோயில் அ.தி.மு.க.வின் கோட்டை வேறு! என்றாலும்கூட தொடர் மின்வெட்டு, பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, எதிர்க்கட்சிகளின் பிரசாரம், தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி யாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது.
வெற்றி யாருக்கு? தொகுதிக்குள் ஒரு ரவுண்ட் வந்தோம்.
அ.தி.மு.க. தரப்பில் அனைத்து அமைச்சர்களும் தொகுதிக்குள் முகாம் இட்டு செயல்படுகின்றனர். அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளாக சொன்ன அனைத்தையும் தொகுதிக்குள் வழங்கிவிட்டனர். ஒருசில இடங்கள் மட்டுமே பாக்கி; அங்கே வழங்குவதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. அதனால், அவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் உண்டு என்று சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர்.
அ.தி.மு.க. வேட்பாளரான முத்துச்செல்வி சங்கரன்கோயில் நகராட்சித் தலைவராக இருப்பவர். அம்மாவின் ஆட்சியிலே ஏகப்பட்ட நலத்திட்டங்கள் உள்ளது. மேலும், சங்கரன்கோயில் தொகுதி மக்கள் என்றைக்கும் அ.தி.மு.க. விசுவாசிகள். எனது வெற்றி என்பது அம்மாவின் வெற்றி என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் முத்துச்செல்வி.
முதல்வர் ஜெயலலிதா மார்ச் 13ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளாராம். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கூடுதல் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் சூரியகுமார் நிற்கிறார். மறைந்த அமைச்சர் கருப்பசாமி பாணியில் சூரியகுமாரும் வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு கேட்கிறார்.
சங்கரன்கோயில் தொகுதி மக்களின் உயிர்நாடி விவசாயமும் கைத்தறியும்தான். இவை இரண்டையும் செயல்படுத்த மின்சாரம் தேவை. மின் தட்டுப்பாடு இருந்தாலும், தி.மு.க. ஆட்சியில் ஒழுங்குமுறைப்படி மின்சாரத்தை விநியோகித்தோம். அந்த மரபு இப்பொழுது பின்பற்றப்படவில்லை. விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கின்றது. எனவே, எத்தனை அமைச்சர்கள் தொகுதிக்குள் வலம் வந்தாலும் வெற்றி எங்களுக்குத்தான் என்கிறார் சூரியகுமார்.
தி.மு.க. சார்பில் மு.க. அழகிரி முன்னதாகவே தொகுதிக்குள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். கருணாநிதி, மு.க. ஸ்டாலின், அன்பழகன், குஷ்பு என்று முக்கிய தலைவர்களும் வாக்கு கேட்டு வரவிருப்பதால் கூடுதல் ஓட்டு கிடைக்கும் என திமு.க. தரப்பில் நம்பப்படுகிறது. தி.மு.க.வை ஆதரித்து ஞானதேசிகன் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது கூடுதல் பலம் என்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தலித் ஓட்டுகளை கணிசமாகப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
தேர்தல் களத்தை தன்மானப் பிரச்னையாகவே கருதி நிற்கிறது ம.தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டதனால் இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்கவும் சொந்த தொகுதியில் தங்களுக்கு அதிக செல்வாக்கை காட்டவேண்டிய நிலையிலும் வைகோ இருக்கிறார். ம.தி.மு.க. சார்பில் களம் காணும் சதன் திருமலைக்குமார் ஒரு மருத்துவர். கடந்த ஐந்து வருடங்கள் வாசுதேவநல்லூர் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
இங்கு எங்கள் பொதுச் செயலாளர் வைகோவுக்கென்று ஒரு செல்வாக்கு உண்டு. ம.தி.மு.க.வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க மக்கள் உதவி செய்வார்கள். ஆளும் அ.தி.மு.க.விற்கு ஒரு பாடம் புகட்டும் தேர்தலாகவும் இந்த இடைத் தேர்தல் இருக்கும் என்கிறார் ஆவேசமாக சாதன் திருமலைக்குமார்.
திராணியிருந்தால் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் தனித்து நின்று பாருங்கள் என்று முதல்வரின் சவாலை ஏற்று களத்தில் குதித்துள்ள தே.மு.தி.க. வேட்õபளராக முத்துக்குமார் நிற்கிறார். சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். தேர்தலுக்காக தனது பணியை ராஜினாமா செய்து களம் காண்கிறார். 2006 தேர்தலில் சங்கரன்கோயிலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு 5800 வாக்குகள் பெற்றவர்.
விஜயகாந்தும் பிரேமலதாவும் தங்களுடன் அனைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் களத்தில் இறக்கி அனல் பறக்க வைத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வும் இம்முறை தனித்து தன் பலத்தைக் காட்டவிருக்கிறது.
சின்னச் சின்னக் கட்சிகள், புதிய தமிழகம் கட்சி போன்ற ஜாதிய அமைப்புகளை அ.தி.மு.க. கையில் எடுத்துவிட்டது. இது வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்க உதவும் எனக் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறாரகள் அ.தி.மு.க.வினர்.
21ஆம் தேதி தெரிந்துவிடும்!
-டி.ஜோசப்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
அம்மா ஜெயிக்காம விட மாட்டாங்க. ஜெயிச்சவுடன் எல்லாரையும்
கேவலப் படுத்தி அசிங்க அசிங்கமா அறிக்கை விடுவாங்க.
வேற யாராவது ஜெயிச்சா அது உலக அதிசயமாத்தான் இருக்கும்.
கேவலப் படுத்தி அசிங்க அசிங்கமா அறிக்கை விடுவாங்க.
வேற யாராவது ஜெயிச்சா அது உலக அதிசயமாத்தான் இருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
எல்லா ஊர்லயும் இடைதேர்தல் வச்சா நல்லா இருக்கும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
டிஎம்கே போட்டி இடாமல் இருந்தால் எம்டிஎம்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
அறிவிச்சிடாருயா. தேர்தல் கமிஷ்னரு ...நேரு wrote:டிஎம்கே போட்டி இடாமல் இருந்தால் எம்டிஎம்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது .
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
கே. பாலா wrote:அறிவிச்சிடாருயா. தேர்தல் கமிஷ்னரு ...நேரு wrote:டிஎம்கே போட்டி இடாமல் இருந்தால் எம்டிஎம்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
உனமையில் இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்புதான்...
இதைப் பற்றிப் பேசுதல் கால விரயம் என்பது என் கருத்து...
இதைப் பற்றிப் பேசுதல் கால விரயம் என்பது என் கருத்து...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துரா.ரா3275 wrote:உனமையில் இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்புதான்...
இதைப் பற்றிப் பேசுதல் கால விரயம் என்பது என் கருத்து...
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Similar topics
» மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'
» வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு?, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்'
» வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு?, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|