ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை

2 posters

Go down

உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Empty உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை

Post by சிவா Tue 6 Mar 2012 - 14:43




தமிழ்நாட்டில், சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பான ஒரு பயனுள்ள கருத்தரங்கம் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த உள்துறை செயலாளர் ஆர்.ராஜகோபாலும், கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரமும் வெளியிட்ட கருத்துக்கள் சிந்திக்கவும், அடுத்து என்னென்ன வகையில் செயலாற்றலாம்? என்பதை விளக்கும் வகையிலும் அமைந்திருந்தன. அவர்கள் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துக்கள் பற்றி விளக்கியது, அடுத்து நாம் எவ்வளவு கவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை கோடிட்டுக்காட்டியது.

2010-ம் ஆண்டில் 64 ஆயிரத்து 976 சாலை விபத்துக்கள் நடந்திருந்தது. இது, 2011-ல் 66 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துவிட்டது. 2010-ல் இத்தகைய சாலை விபத்துக்களில் 13 ஆயிரத்து 35 விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம். ஆனால், 2011-ல் 15 ஆயிரத்து 244 இன்னுயிர்களை இழந்துவிட்டோமே என்று கவலைதோய்ந்த குரலில் அர்ச்சனா ராமசுந்தரம் கூறியது, ஒட்டுமொத்த தமிழகத்தையே கலங்க வைத்துவிட்டது. விபத்துக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துக்கொண்டே வருவதற்கான காரணங்களை அனைத்து துறைகளும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சரியான தருணம் இதுதான். ஒருகாலத்தில் மோட்டார் வாகனங்கள் என்றால், அது ஆடம்பர பொருள், வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிகொண்டிருந்தாலும், மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது.

மோட்டார் வாகனங்கள், இப்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஏழை குடும்பங்களில்கூட, இருசக்கர வாகனம் என்பது கண்டிப்பாக இருக்கவேண்டிய ஒரு பொருளாகிவிட்டது. கடந்த 2010-2011-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 553 போக்குவரத்து மோட்டார் வாகனங்களும், ஒரு கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 338 ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களும், 15 லட்சத்து 24 ஆயிரத்து 840 இதர வாகனங்களும் இருக்கின்றன. ஆக, தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 736 மோட்டார் வாகனங்கள் கடந்த ஆண்டில் நமது சாலைகளில் சுற்றி வந்துகொண்டிருந்தன. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 12.37 சதவீதம் அதிகமாகும். நிச்சயமாக தற்போது இந்த கணக்கோடு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

குடித்துவிட்டு மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஓவர் ஸ்பீடு, வாகனங்கள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது, ஆபத்தான டிரைவிங், ஸ்பீடு வரம்பை தாண்டி வண்டி ஓட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இப்போது இருக்கும் அபராதத்தை அதிகளவில் உயர்த்துவதற்கு வகை செய்யும் அளவில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதெல்லாம் விதிக்கப்படவேண்டிய அபராதம்தான். ஆனால், போக்குவரத்து குற்றங்கள் இழைத்தபிறகு விதிக்கப்படும் அபராதம்தான் இது. விபத்துக்கள் ஏற்பட்டபிறகு, நடவடிக்கை மேற்கொள்வதைவிட, விபத்தே நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே சாலச்சிறந்ததாகும். ஆக, நமது சாலைகளில் விபத்துக்கள் பெரும்பாலும் எப்போது நடக்கிறது, என்ன காரணம்? என்பதை ஆர்.ராஜகோபால் போன்ற இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதில் அதிக அக்கறைகொண்ட அதிகாரிகள் குழுவை கொண்டு ஆலோசித்து, அந்த குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொதுவாக விபத்துக்களில் உயிர் இழப்பவர்களில் அதிகம்பேர் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களும்தான். பெரும்பாலான விபத்துக்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் நடக்கிறது என்ற புதிய தகவலும் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக குடிபோதையிலும், தூக்கத்திலும் வண்டி ஓட்டும் டிரைவர்களால்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், ஓவர் ஸ்பீடும் காரணம் என்றும் கூறுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு களைப்பாக இருக்கும் டிரைவர்கள், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, சற்று ஓய்வெடுக்கவும், காபி, டீ குடித்துக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுபோல, விபத்துக்களை தடுப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து காரியங்களையும் உடனடியாக ஒருங்கிணைந்த அனைத்து துறைகளும் மேற்கொள்ளவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

தினதந்தி


உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Empty Re: உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை

Post by யினியவன் Tue 6 Mar 2012 - 15:00

மாலையிலும் இரவிலும் அதிக விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் -

ஒன்று:

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது,
குடித்துவிட்டு நடக்காமல் நடு ரோட்டில் ஆடுவது

இரண்டு:

தெருவிளக்கே இல்லாத ரோடுகள்
இருந்தும் கரென்ட் இல்லாமல் எரியாத விளக்குகள்
( அட போங்கப்பா ரோடு மொதல்ல இருக்கா?)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை
» அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்..
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum