Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
+2
உதயசுதா
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
![கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு CNI030307](https://2img.net/h/dailythanthi.com/images/news/20120303/CNI030307.jpg)
கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கூடங்குளம் பிரச்சினை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், தங்கள் ஆய்வு அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக போராட்டக் குழு நிர்வாகிகள் சென்னை சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் டி.ஜி.பி. வருகை
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருவதாக வந்த புகார்களின் எதிரொலியாக, சந்தேகத்துக்கு இடமான தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று கூடங்குளத்துக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் சென்னையில் இருந்து வந்தார். அவருடன் மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, வள்ளிïர் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் வருகையின் எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஆய்வு
கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடங்குளம் வந்து சேர்ந்தனர். கூடங்குளம் ஊருக்குள் வரும் சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிடச் சென்றனர். அருகே உள்ள தாமஸ் மண்டபம் சோதனைச் சாவடி, கூத்தங்குழி, உவரி, விசுவநாதபுரம் விலக்கு ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்து உள்ள கடலோர பகுதிக்குச் சென்று கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். அணு உலை அருகே செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
பகல் 11.30 மணி அளவில் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகருக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கூடங்குளத்தில் இருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
உதயகுமார் பேட்டி
இது குறித்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது அவர்களுடைய பணி. அதை செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அணுமின் நிலையத்தை திறக்கவிட மாட்டோம். அதற்காக எங்களுடைய உடலையும், உயிரையும் ஆயுதமாக தாங்கி போராடுவோம். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அகிம்சை வழியில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம் என்றார்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா இருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே.ராஜா wrote:எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.![]()
இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
நம் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி தானே இந்த அரசுகள் ஏமாற்றுகின்றன , இந்த அணு உலையால் இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் தான் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்?, இப்போது தானே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.உதயசுதா wrote:இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா ருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே. இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
கல்பாக்கத்தை சுற்றியுள்ள எத்தனை ஊர்களில் நன்கு ஆரோக்கியமாக இருந்த மனிதர்களுக்கு ரத்த புற்றுநோயும் , எலும்பு புற்றுநோயும் வந்து கொண்டு இறுக்கிறது என்ற வேதனையான செய்தியை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சென்று பாருங்கள் தெரியும். (இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சொன்ன தகவல் , இப்போது என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லை )
இப்படியே மூடி மறைத்து கொண்டு இருந்தால் எவ்வளவு காலம் முடியும்.
அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
2 ஜி ஊலலை விட இது ஒன்றும் பெரிய தொகை இல்லை.அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
தோரியம் இந்தியாவில் கிடைக்கிறதா? எனக்கு தெரிந்த வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குவதாக கேள்விப்பட்டேன்.பிரசன்னா wrote:தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
தாராளமாக முன்னேறலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?பிரசன்னா wrote:நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் ஆந்திராவிலும் மற்றும் மத்திய இந்தியாவிலும் இருக்கின்றனவே அங்கே அணு உலையை நிறுவினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஏற்கனவே பாலாறு , காவிரி , முள்ளைபெரியாறு என்று அனைத்து பக்கத்திலும் தடுத்துவிட்டார்கள் , இது போதாதென்று இந்த கூடங்குளத்திலும் ஒரு அணுகுண்டை போட்டு கடலை நம்பி வாழும் அப்பாவி குடும்பங்களையும் அழித்து அப்படி என்ன முன்னேற்றம் காண போகிறீர்கள்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|