ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கமுடியாத சிலுவைகள் !

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரேவதி Thu Feb 23, 2012 11:12 am

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
- வைரமுத்துவின் கவிதைகள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by யினியவன் Thu Feb 23, 2012 11:18 am

கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 11:27 am

என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...


இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரேவதி Thu Feb 23, 2012 11:38 am

கொலவெறி wrote:கவிதையையும்
தியாகத்தையும்
மறக்க முடியாது.

பகிர்வுக்கு நன்றி.
ரா.ரா3275 wrote:என்ன ஒரே வைரமுத்துக் கவிதைப் பதிவும் -பகிர்வும் இங்கே...
அவரின் உரைநடையில் கூட கவிநடைதான் இருக்கும்...

ரேவதி அவர்களுக்கு நன்றி...

நன்றி நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by இளமாறன் Thu Feb 23, 2012 11:57 am

ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரேவதி Thu Feb 23, 2012 11:58 am

இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by இளமாறன் Thu Feb 23, 2012 12:02 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:ரசித்த கவிதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

காதல் செய்து விட்டு திருமணம் செய்ய முடியாதவர்கள் எப்போதும் சொல்லும் ஒரே சாக்கு போக்கு இது தான் சிரி தியாகம் ... பிறகு எதற்கு இந்த காதல் எல்லாம்

இதை நானும் ஆமோதிக்கிறேன் அண்ணா ...காதல் கல்யாணத்தில் முடியனுமே தவிர தியாகதில் முடியக்கூடாது

காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 12:02 pm

கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...


இறக்கமுடியாத சிலுவைகள் ! 224747944

இறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! Aஇறக்கமுடியாத சிலுவைகள் ! Emptyஇறக்கமுடியாத சிலுவைகள் ! Rஇறக்கமுடியாத சிலுவைகள் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by ரேவதி Thu Feb 23, 2012 12:03 pm

இளமாறன் wrote:
காதல் காதல் என்று ஒரு பக்கம் இதயத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டு இருப்பார்கள் ... இன்னொரு பக்கம் வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து மனதை அழித்து கொண்டு இருப்பார்கள் ... கொஞ்ச நாட்கள் கழித்து சந்திர முகி மாதிரி மல்டிபில் பர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள் சிரி

உண்மை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by இளமாறன் Thu Feb 23, 2012 12:06 pm

ரா.ரா3275 wrote:கோழைகளின் கூச்சல் இது என்று கோபமாக சொன்னாலும்
குடும்பம்-சூழல் என்றும் இருக்கிறது...
அதற்கு காதலிக்காமலே இருக்கலாமே என்று கேட்கலாம்.
ஆனால் தும்மலை எப்படி தூங்க வைக்க முடியும்?...

கல்யாணத்திலும் முடிந்து அதன் பிறகும் அதே காதலோடு வாழட்டும் என்று காதலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்...

பல்லு உள்ளவன் பகோடா திண்ணுவான் நாம ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம் நு சொல்ற மாதிரி இருக்கு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறக்கமுடியாத சிலுவைகள் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இறக்கமுடியாத சிலுவைகள் ! Empty Re: இறக்கமுடியாத சிலுவைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum