Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
5 posters
Page 1 of 1
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
ஆர்.சரண்
ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!
கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.
வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.
இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.
''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர் பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?
விகடன்
ஆர்.சரண்
ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!
கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.
வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.
இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.
''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர் பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?
விகடன்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
அன்று சென்னை ரைநோஸ் சோதப்பினாலும் கடைசியில் வெற்றி பெற்று விட்டார்கள் அதான் ஆச்சிரியம்..!
தகவலுக்கு நன்றி..!
தகவலுக்கு நன்றி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
பிரசன்னா wrote:
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
தவறு அவங்க மேல் மட்டும் இல்லை நம்ம ஆளுங்க கூட ரொம்ப ஓவரத்தான் பண்றாங்க .....நிறைய கேட்ச் தவற விட்ட இந்த சாந்தனு கூட ரொம்ப சீன் போட்டான்...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
சும்மா பொழுதுபோக்குக்காக விளையாடுறாங்க அதுக்கே சண்டை வருது ........ நிஜமா விளையாடுறவங்களே சும்மாதான் இருக்காங்க இவங்க ரொம்பதான் பன்றாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
ஆரம்பத்தில் இருந்து சென்னை rainos சொதப்பிட்டே தான் இருந்தாங்க. என்னமோ அதிரிஷ்ட காத்து அவங்க பக்கம் அன்னிக்கு அடிச்ச தால தப்பிச்சாங்க.இவனுகளுக்கு பேரு சென்னை ரைநோஸ் இல்ல சென்னை cat .
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» தீவிரமாகும் கர்நாடகா-தமிழ்நாடு நதிநீர் பங்கீடு சச்சரவு
» கிரிக்கெட் போட்டியில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» கிரிக்கெட் உரிமையை பெற்றது ஸ்டார்
» தீவிரமாகும் கர்நாடகா-தமிழ்நாடு நதிநீர் பங்கீடு சச்சரவு
» கிரிக்கெட் போட்டியில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» கிரிக்கெட் உரிமையை பெற்றது ஸ்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|