Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண வரம் தரும் வள்ளிமலை!
2 posters
Page 1 of 1
திருமண வரம் தரும் வள்ளிமலை!
விரைவில் திருமணம் கைகூட மிகவும் சுலபமாக பரிகாரம், வள்ளி மலைக்குச் சென்று வழிபாடு செய்வது தான். வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்த இடம் வள்ளிமலை.
காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.
மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தைக் கடந்து சென்றதும், அழகான அடிவாரக் கோயில். ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் முருகப்பெருமனைக் கண்குளிர தரிசனம் செய்கிறோம். “முருகா முருகா’ என்று சொல்லியபடி 445 படிகள் ஏறி மலை உச்சிக் கோயிலுக்குச் செல்கிறோம். அத்தனை படிகளும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமானால் அவன் அருளைப் பெற வேண்டும். தடைகள் விலகப் போகின்றன என்னும் நம்பிக்கை நமது மனத்தில் உறுதியாக உள்ளதால் படி ஏறும் களைப்பு தெரியவில்லை. மாறாக உற்சாகம்தான் மேலிடுகின்றது.
அங்கு வரும் பக்தர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தேனும், தினை மாவும் வாங்கிக் கொண்டு வருகின்றனர். வள்ளி மலையில் முருகனுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் தேன்-தினை மாவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
வள்ளி தினைப்புனை காத்த இடம் இது. முருகனுக்கு தேனும், தினை மாவும் வள்ளி கொடுத்த இடம் இது. இங்குள்ள குமரிச் சுனையில் வள்ளியம்மை மஞ்சள் அரைத்துக் குளித்தார். சூரிய ஒளியே படாமல் ஒரு குகைக்குள் இந்த சுனை உள்ளது. ஒரு வெள்ளை நிறத் துணியை இந்தச் சுனை நீரில் முக்கி எடுத்துக் கல்லில் உரசினால் அது மங்சள் நிறமாக மாறிவிடும். இந்த மலையில் பல குகைகளும் நீர்ச்சுனைகளும் உள்ளன.
வள்ளியை மணந்து கொள்ள முருகன் செய்த லீலைகள் அனைவரும் அறிந்தவை. இந்த மலை மீது ஏறி நின்றதும் கந்தன் வேங்கை மரமாக மாறியதும் கிழவன் வேடத்தில் வந்து தாகம் என்றதும் பிறகு மோகம் என்றதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?
படியேறி மலை உச்சிக்குச் சென்றதும் இடப்பால் கல்லினால் ஆன த்வஜஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தினுள் நுழைகிறோம். “ஓம்’ என்னும் பிரணவ வடிவத்தில் ஆலயப் பிரகாரம் அமைந்துள்ளது. பாறைகளைக் குடைந்து செய்து குடவரைக் கோயில் இது. இக்கோயில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இரண்டாவது பகுதி சற்று உயரமாகவும் வெளிச்சமாகவும் உள்ளது. மூன்றாவது கட்டு மூலவர் சந்நதி உள்ள பகுதி. தினைப் புனை காத்த வள்ளி பறவைகளை விரட்டும் கோலத்தில் உள்ள காட்சியை நுழைவாயில் அருகே கற்சிற்பத்தில் காணலாம்.
மலை உச்சிக் கோயிலில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியருடன் அருட்காட்சி அருளும் முருகனைக் கண்டு மகிழ்கிறோம். எடுத்துச் சென்ற தேனையும் தினை மாவையும் அர்ச்சனைப் பொருட்களுடன் சேர்த்து குருக்களிடம் கொடுக்கிறோம். நமது பெயர் நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்கிறார் ஆலய குருக்கள். தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்து மற்ற பிரசாதங்களுடன் நம்மிடம் கொடுக்கிறார் அர்ச்சகர்.
யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.
மூலவர் சந்நிதியை வலம்வரும்போது விசாலாட்க்ஷி - காசி விஸ்வநாதர் நந்திகேஸ்வரர் ஆகிய சந்நிதிகளை வழிபடுகிறோம். பெருமாள் கோயில்களில் உள்ளது போல் இங்கும் சடாரி சாதிக்கின்றனர். திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் வள்ளியும், தெய்வானையும். முருகன் மணம் புரிந்து கொள்வதற்காக பெருமாளைக் குறித்து வள்ளி இங்கு தவம் புரிந்ததன் காரணம் பற்றி சடாரி சாதிக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது.
வள்ளியும், முருகனும் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு திருத்தணிக்குச் சென்று அங்கு தங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவரான முருகப் பெருமானுக்கு எதிரில் சதுர வடிவிலான கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு பாதாளக் குகை உள்ளதாம். அது திருத்தணி வரை செல்லுமாம். இந்த செவிவழிச் செய்தியை உள்ளூர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் வள்ளமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் சமாதி இக்கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அவருடைய பூர்வாஸ்ரமம் பெயர் அர்த்தநாரி. அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசனம் செய்தார். அவ்விருவரும் வள்ளி மலைக்குச் சென்று திருப்புகழைப் பாடி உலகெங்கும் பரப்பு என்று அருள்வாக்கு அளித்தனர். “சாதாரண சமயல்காரரான எனக்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கிடையாது. இசைஞானமும் கிடையாது. என்னால் எப்படி இதைச் செய்ய முடியும்?’ என்று நினைத்துக் கொண்டே வள்ளி மலைக்கு சுவாமிகள் வந்தாராம். ஒரு சிறுமி வடிவில் வள்ளி நேரில் வந்து திருப்புகழை இசையோடு கற்பித்து ஞானோபதேசம் செய்தாளாம். இந்த அதிசயம் வள்ளிமலையில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. அருணகிரிநாதரின் திருப்புகழை உலகறியச் செய்தவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு மொத்தம் 11 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.
மலை உச்சிக் கோயிலில் இருந்து வள்ளிமலை சுவாமிகளின் சமாதிக்குச் செல்லும் பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கும். வாழ்க்கை ஸ்மூத்தாக அமையவும் திருமணம் விரைவில் நடைபெறவும் அருள்புரியும் தலமல்லவா இது? எனவே பாதை எப்படி உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் திருப்புகழ் சுவாமிகளின் சமாதியிலும் வழிபாடு செய்து விட்டு மனநிறைவுடன் இல்லாம் திரும்புகிறோம்.
உங்கள் இல்லத்திலும் விரைவில் கெட்டி மேளம் கொட்டட்டும். தேனினும் இனிய மணவாழ்க்கை அமையட்டும்.
- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
மங்கையர்மலர்
காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.
மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தைக் கடந்து சென்றதும், அழகான அடிவாரக் கோயில். ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் முருகப்பெருமனைக் கண்குளிர தரிசனம் செய்கிறோம். “முருகா முருகா’ என்று சொல்லியபடி 445 படிகள் ஏறி மலை உச்சிக் கோயிலுக்குச் செல்கிறோம். அத்தனை படிகளும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமானால் அவன் அருளைப் பெற வேண்டும். தடைகள் விலகப் போகின்றன என்னும் நம்பிக்கை நமது மனத்தில் உறுதியாக உள்ளதால் படி ஏறும் களைப்பு தெரியவில்லை. மாறாக உற்சாகம்தான் மேலிடுகின்றது.
அங்கு வரும் பக்தர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தேனும், தினை மாவும் வாங்கிக் கொண்டு வருகின்றனர். வள்ளி மலையில் முருகனுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் தேன்-தினை மாவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
வள்ளி தினைப்புனை காத்த இடம் இது. முருகனுக்கு தேனும், தினை மாவும் வள்ளி கொடுத்த இடம் இது. இங்குள்ள குமரிச் சுனையில் வள்ளியம்மை மஞ்சள் அரைத்துக் குளித்தார். சூரிய ஒளியே படாமல் ஒரு குகைக்குள் இந்த சுனை உள்ளது. ஒரு வெள்ளை நிறத் துணியை இந்தச் சுனை நீரில் முக்கி எடுத்துக் கல்லில் உரசினால் அது மங்சள் நிறமாக மாறிவிடும். இந்த மலையில் பல குகைகளும் நீர்ச்சுனைகளும் உள்ளன.
வள்ளியை மணந்து கொள்ள முருகன் செய்த லீலைகள் அனைவரும் அறிந்தவை. இந்த மலை மீது ஏறி நின்றதும் கந்தன் வேங்கை மரமாக மாறியதும் கிழவன் வேடத்தில் வந்து தாகம் என்றதும் பிறகு மோகம் என்றதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?
படியேறி மலை உச்சிக்குச் சென்றதும் இடப்பால் கல்லினால் ஆன த்வஜஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தினுள் நுழைகிறோம். “ஓம்’ என்னும் பிரணவ வடிவத்தில் ஆலயப் பிரகாரம் அமைந்துள்ளது. பாறைகளைக் குடைந்து செய்து குடவரைக் கோயில் இது. இக்கோயில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இரண்டாவது பகுதி சற்று உயரமாகவும் வெளிச்சமாகவும் உள்ளது. மூன்றாவது கட்டு மூலவர் சந்நதி உள்ள பகுதி. தினைப் புனை காத்த வள்ளி பறவைகளை விரட்டும் கோலத்தில் உள்ள காட்சியை நுழைவாயில் அருகே கற்சிற்பத்தில் காணலாம்.
மலை உச்சிக் கோயிலில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியருடன் அருட்காட்சி அருளும் முருகனைக் கண்டு மகிழ்கிறோம். எடுத்துச் சென்ற தேனையும் தினை மாவையும் அர்ச்சனைப் பொருட்களுடன் சேர்த்து குருக்களிடம் கொடுக்கிறோம். நமது பெயர் நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்கிறார் ஆலய குருக்கள். தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்து மற்ற பிரசாதங்களுடன் நம்மிடம் கொடுக்கிறார் அர்ச்சகர்.
யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.
மூலவர் சந்நிதியை வலம்வரும்போது விசாலாட்க்ஷி - காசி விஸ்வநாதர் நந்திகேஸ்வரர் ஆகிய சந்நிதிகளை வழிபடுகிறோம். பெருமாள் கோயில்களில் உள்ளது போல் இங்கும் சடாரி சாதிக்கின்றனர். திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் வள்ளியும், தெய்வானையும். முருகன் மணம் புரிந்து கொள்வதற்காக பெருமாளைக் குறித்து வள்ளி இங்கு தவம் புரிந்ததன் காரணம் பற்றி சடாரி சாதிக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது.
வள்ளியும், முருகனும் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு திருத்தணிக்குச் சென்று அங்கு தங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவரான முருகப் பெருமானுக்கு எதிரில் சதுர வடிவிலான கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு பாதாளக் குகை உள்ளதாம். அது திருத்தணி வரை செல்லுமாம். இந்த செவிவழிச் செய்தியை உள்ளூர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் வள்ளமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் சமாதி இக்கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அவருடைய பூர்வாஸ்ரமம் பெயர் அர்த்தநாரி. அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசனம் செய்தார். அவ்விருவரும் வள்ளி மலைக்குச் சென்று திருப்புகழைப் பாடி உலகெங்கும் பரப்பு என்று அருள்வாக்கு அளித்தனர். “சாதாரண சமயல்காரரான எனக்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கிடையாது. இசைஞானமும் கிடையாது. என்னால் எப்படி இதைச் செய்ய முடியும்?’ என்று நினைத்துக் கொண்டே வள்ளி மலைக்கு சுவாமிகள் வந்தாராம். ஒரு சிறுமி வடிவில் வள்ளி நேரில் வந்து திருப்புகழை இசையோடு கற்பித்து ஞானோபதேசம் செய்தாளாம். இந்த அதிசயம் வள்ளிமலையில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. அருணகிரிநாதரின் திருப்புகழை உலகறியச் செய்தவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு மொத்தம் 11 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.
மலை உச்சிக் கோயிலில் இருந்து வள்ளிமலை சுவாமிகளின் சமாதிக்குச் செல்லும் பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கும். வாழ்க்கை ஸ்மூத்தாக அமையவும் திருமணம் விரைவில் நடைபெறவும் அருள்புரியும் தலமல்லவா இது? எனவே பாதை எப்படி உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் திருப்புகழ் சுவாமிகளின் சமாதியிலும் வழிபாடு செய்து விட்டு மனநிறைவுடன் இல்லாம் திரும்புகிறோம்.
உங்கள் இல்லத்திலும் விரைவில் கெட்டி மேளம் கொட்டட்டும். தேனினும் இனிய மணவாழ்க்கை அமையட்டும்.
- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
மங்கையர்மலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: திருமண வரம் தரும் வள்ளிமலை!
வள்ளிமலை எங்கள் ஊரின் அருகாமையில் தான் உள்ளது
மேலும் தகவலுக்கு http://murugan.org/centers/vallimalai.htm
மேலும் தகவலுக்கு http://murugan.org/centers/vallimalai.htm
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: திருமண வரம் தரும் வள்ளிமலை!
எங்கள் ஊரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தான் வள்ளிமலை உள்ளது..
அங்கு தேரோட்டம் வெகு சிறப்பாக இருக்கும்
அங்கு தேரோட்டம் வெகு சிறப்பாக இருக்கும்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» திருமண வரம் தரும் திருத்தலங்கள்
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
» வரம் தரும் மரம்!
» கல்யாண வரம் தரும் பெருமாள்
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
» வரம் தரும் மரம்!
» கல்யாண வரம் தரும் பெருமாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|