ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

4 posters

Go down

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Empty டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

Post by சிவா Fri Feb 03, 2012 12:49 pm


டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்ணின் மேல் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

"கோமா" நிலையில் இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் அருகே உள்ள செம்பொன்கரை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). கூலி தொழிலாளி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்ததாவது:-

"என் மனைவி ருக்மணி(34), தையல் வேலை செய்து வந்தாள். எனக்கு சுபாஷ்(15) என்ற மகனும், அமிர்தவர்ஷினி(13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 18.3.2011 அன்று என் மனைவியை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக சேர்த்தேன். மறுநாளில் இருந்து என் மனைவி "கோமா" நிலையில் இருந்தார். இதுகுறித்து விசாரித்த போது, ஆபரேசனின் போது என் மனைவிக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்த தெரியவந்தது.

பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றம்

இதன்காரணமாக, என் மனைவியின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டது தெரியவந்தது. தற்போது மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பல மாதங்கள் ஆகியும் என் மனைவி கோமா நிலையில் இருந்து மீளவில்லை. எனவே சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

கடுமையான பாதிப்பில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும், தவறு செய்த டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். என் மனைவியின் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் நானும், என் மனைவியின் பெற்றோரும் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே இடவசதி செய்து கொடுக்க மதுரை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு


மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, "மனுதாரர் கணேசனின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். கணேசன் தங்குவதற்கு வசதியாக மதுரை கலெக்டர் இடவசதி செய்து கொடுக்க வேண்டும். மதுரை பெரிய ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் ருக்மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று கடந்த 11.7.2011 அன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி கணேசனுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் அளிக்கப்பட்டது. மேலும் தங்குவதற்கும் இட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது அவர் கோமா நிலையிலே இருந்து வருகிறார்.

நவீன மருத்துவ கருவிகள் இல்லை

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி, மலைக்கனி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திறமையான டாக்டர்கள் உள்ளனர். ஆனால் நவீன மருத்துவ கருவிகள் இல்லை. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. இதனால் டாக்டர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. மேலும் உயிர்காக்கும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கி வரும்படி மனுதாரரை டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.

இதன்காரணமாக மிக அதிக விலை கொண்ட மருந்துகளை மனுதாரர் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து வருகிறார். இதனால் மனுதாரர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார். எனவே நவீன மருத்துவ கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் கொண்ட மருத்துவமனையில் அரசு சார்பில் சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மனுதாரரின் மனைவி ருக்மணிக்கு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சைக்காக முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை அரசு அளிக்க வேண்டும். அதன்பின்பு அடுத்தடுத்து ஏற்படும் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க வேண்டும். மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் வேலூரில் தங்கி இருக்க இடவசதியை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Empty Re: டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

Post by இளமாறன் Fri Feb 03, 2012 12:54 pm

சில மருத்துவ மனையில் மருந்துகள் இல்லை வசதிகள் இல்லை .. சில மருத்துவ மனைகளில் ஆட்களே இல்லை ...எங்கே செல்லும் இந்த பாதை என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Empty Re: டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

Post by கேசவன் Fri Feb 03, 2012 1:00 pm

நல்ல நீதிபதி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 1357389டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 59010615டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Images3ijfடாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Empty Re: டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

Post by சார்லஸ் mc Fri Feb 03, 2012 1:01 pm

என்ன கொடுமை இது. பயம்

மருத்தவா்கள் வர வர ரொம்பவே அஜாக்கிரதையாக இருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தவறிழைத்த மருத்தவா்களில் ஒரு சிலருக்க‌ேனும் நீதிமன்றம் சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டணை வழங்கப்பட்டால்தான் மீதம் இருக்கின்ற மருத்துவாகள் உண்மையாக வேலை பாா்ப்பாா்கள் போல தொிகிறது.

பாதிக்கப்பட்டவா் கொஞ்சம் வசதி நிறைந்த விவரமானவா் போல தொிகிறது. நீதிமன்றம் மூலம் பயனடைகிறாா்.

விவரமற்ற பொது ஜனம், கிராமவாசிகளின் பாதிப்பு மயான காடுகளில் மக்கிப் போகிறது.

என்று தீரும் இந்த மருத்துவமனை ஒழுங்கீனங்கள்?


டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் Empty Re: டாக்டர்களின் கவனக்குறைவால் "கோமா" நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தையின் குரல்
» ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி
» கோமா நிலைக்கு சென்றார் தொழிலாளி கிளினிக் சீல்: போலி டாக்டர் பிடிபட்டார்
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum