ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» க்க தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை!

Go down

கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Empty கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை!

Post by இளமாறன் Mon 30 Jan 2012 - 3:12

கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்த ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அந்த வீட்டிலுள்ளவர்கள் உடனே செய்ய வேண்டியது என்னென்ன? இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் டாக்டருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அதற்காக ஆறு மணி நேரம் வரை காலத்தை வீணாக்காதீர்கள்.

ஆறு மணி நேரத்திற்குப் பிறகு என்றால் இறந்தவரின் கரு விழியில் நீர் சேர ஆரம்பித்து கருவிழி வீங்கிவிடும். கருவிழி வீங்கிப் போய்விட்டால் அதனுடைய ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மை போய்விடும். அப்புறம் எதற்குமே உபயோகப்படாது. ஆகவே இறந்தவுடன் உறவினர்களுக்குத் தெரிவிக்கும்போதே, கண் டாக்டருக்கும் தெரிவித்து விடுங்கள்.

இறந்தவரது கண்கள் திறந்திருந்தால் உலர்ந்து போகாமலிருக்க கண்களை மூடி வையுங்கள். அதே மாதிரி, ஈரமான பஞ்சினால் கண்கள் இரண்டையும் மூடி வையுங்கள். ஏ.சி. இருக்கிற வீடாக இருந்தால் பேனை ஆப் செய்துவிட்டு, ஏ.சி.யை போட்டு விடுங்கள். இறந்தவரின் தலையை இரண்டு தலையணைகள் வைத்து நன்கு உயர்த்தி வையுங்கள்.

இறந்தவரின் `மெடிக்கல் ரிப்போர்ட் சர்டிபிகேட்', முதலிய எல்லா பேப்பர்களையும் ரெடியாக எடுத்து வையுங்கள். கண்தானம் பண்ண உறுதிமொழி கொடுத்த பேப்பரையும் மறக்காமல் எடுத்து வையுங்கள். இவையெல்லாம் கண்டாக்டர் வந்து நேரம் வீணாகாமல் இருப்பதற்காக செய்ய வேண்டிய விஷயங்களாகும்.

கண் வங்கியிலிருந்து வரும் ஆம்புலன்சில் ஒரு கண் டாக்டர், ஒரு டெக்னீசியன், ஒரு நர்ஸ் அடங்கிய குழுவினர் இருப்பார்கள். சுமார் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் இவர்கள் கருவிழிகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். கருவிழி பாதிப்பினால் கண் பார்வை இழந்தோர், கண் வங்கியில் தங்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இறந்தவரது கருவிழி கிடைத்தவுடன் சீனியாரிட்டி அடிப்படையில் யாருக்கு முதலில் கருவிழியைப் பொருத்த வேண்டுமோ அவர்களை உடனே கூப்பிட்டு ஆபரேஷன் செய்து பொருத்த வேண்டிய வேலைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட கருவிழி, கண் வங்கியில் `ஆப்டிஸால் ஜி.எஸ்.' மற்றும் `எம்.கே. மீடியம்' என்று சொல்லக் கூடிய மிக விலை உயர்ந்த பாதுகாப்பு திரவத்தில் போடப்பட்டு பத்திரமாக ஏ.சி. அறையில் ரெப்ரிஜிரேட்டரில் வைக்கப்படும்.

பாதிக்கப்பட்டவரின் கருவிழி நீக்கப்பட்ட அந்த இடத்தில் இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட கருவிழி பொருத்தப்படும். கருவிழியைச் சுற்றி சுமார் பதினாறு தையல்கள் போடப்பட்டு இந்தக் கருவிழி மிக அழகாகப் பொருத்தப்படும். கருவிழி பொருத்திய இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே அவருக்கு கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.

கருவிழி பாதிப்பினால் கண் பார்வை போனவர்களுக்கு மட்டுமே, இந்த மாற்று கருவிழி பொருத்துவதால் கண் பார்வை கிடைக்கும். மற்ற கண் பிரச்சினைகளினால் கண்பார்வை போனவர்களுக்கு இந்த மாற்று கருவிழி பொருத்துவதால் எந்த உபயோகமும் கிடையாது. ஒரு வயது குழந்தை முதல், ஆரோக்கியத்துடன் இருக்கும் எந்த வயதுக்காரர்களும் கண்களை தானம் பண்ணலாம்.

ஒரு முக்கிய விஷயம் உயிரோடு இருக்கும்போது யாரும் கண்தானம் செய்ய முடியாது. இறந்தவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, காசநோய் முதலிய நோய்கள் இருந்திருந்தாலும் அவர்களிடமிருந்தும் கருவிழியை எடுக்கலாம். அதாவது அவர்களும் கண்தானம் பண்ணலாம். எனக்கு மேற்கூறிய நோய் இருக்கிறதே நான் கொடுப்பது நல்லதில்லையே, நான் எப்படி கொடுக்க முடியும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டாம்.

இதுபோக பவர் கண்ணாடி அணிந்தவர்களும், கேடராக்ட் ஆபரேஷன் செய்தவர்களும்கூட கண்தானம் பண்ணலாம். கருவிழியில் காயம், தழும்பு இருந்தாலோ எய்ட்ஸ் மஞ்சள் காமாலை, ஜன்னி, நாய்க்கடி, மூளையில்கட்டி, புற்றுநோய் முதலியவைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர்களின் கருவிழியை உபயோகப்படுத்த முடியாது.

விஷ உணவினால் பாதிக்கப்பட்டவர்கள், நீரில் மூழ்கி இறந்தவர்கள் ஆகியோரும் கண்தானம் பண்ண முடியாது. இறந்தவரது கருவிழியை எடுத்து கண் பார்வை இல்லாத ஒருவருக்கு 1905-ஆம் ஆண்டுதான் முதன் முதலில் பொருத்திப் பார்த்தார்கள். உலகிலேயே முதன் முதலாக 1944-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில்தான் முதல் கண்தான வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

அதேமாதிரி 1945-ம் ஆண்டே இந்தியாவில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கண் வங்கி முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தது. இந்தியாவில் சுமார் 500-க்கும் மேலாக கண் வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவிலுள்ள கண் வங்கிகளில் ஒரு ஆண்டுக்குத் தேவையான சுமார் 46 ஆயிரம் கருவிழிகளை பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளதாம். நம் நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் கண்பார்வை இல்லாமல் இருக்கிறார்களாம். இதில் குழந்தைகளும், இளைஞர்களும்தான் அதிகம்.

இவர்கள் வாழ வேண்டிய காலம் ரொம்ப அதிகம். எனவே இவர்களுக்கு மாற்று கருவிழி கிடைத்தால் இவர்களுக்கும் கண் பார்வை கிடைத்து நீண்ட நாட்கள் நம்மைப்போல இந்த உலகத்தைப் பார்த்து பயன்பெறுவார்கள் அல்லவா? யோசியுங்கள். 2009- 2010ம் ஆண்டுகளில் நம் நாட்டில் சுமார் 37 ஆயிரத்து 103 கருவிழிகள்தான் தானமாக இறந்தவர்களிடமிருந்து கிடைத்ததாம்.

ஒரு ஆண்டில் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்தக் கருவிழிதானம் மிகமிகக் குறைவே. 2020-ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்தவர்களாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இதில் சுமார் 30 லட்சம் பேருக்கு கண்தானம் மூலம் கிடைக்கும் கருவிழியைப் பொருத்தி பார்வை கிடைக்கச் செய்ய வாய்ப்புண்டு.

மீதி பேருக்கு கருவிழிக்கு எங்கே போவது? ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் கருவிழி தானம் செய்தால்தான் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். எனவே கண்தானம் பண்ண முயற்சி செய்யுங்கள். அதற்காக முதலில் மனதை தயார் பண்ணுங்கள். அப்புறம் வாழ்க்கையில் யாருக்காவது உதவி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வாருங்கள்.

பின் நாமும் கண்தானம் செய்வோம் என்ற முடிவுக்கு கண்டிப்பாக நீங்கள் வந்துவிடுவீர்கள். அதற்குப்பிறகு உங்கள் வீட்டிலுள்ள வயதானவர்களிடம் கண்தானம் பற்றிப் பேசுங்கள். விளக்கமாக சொல்லுங்கள். அவர்களாகவே இஷ்டப்பட்டு கண்தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வர வையுங்கள். அருகிலுள்ள கண்தான வங்கியில் இவர்களது பெயரையும், முகவரியையும் பதிவு செய்து வையுங்கள்.

நீங்களும் கண்தானம் செய்ய உறுதிமொழி எடுங்கள். கருவிழி பற்றாக்குறையை சமாளிக்க... கண்பார்வை இல்லாத ஒரு குழந்தை, ஒரு இளைஞன் இந்த உலகத்தைப் பார்க்க... தன் ஆயுள் முழுக்க அந்தக் குழந்தை உங்களுக்கு தினமும் நன்றி சொல்ல... நீங்களும் கண்தானம் செய்யலாமே! அந்த நல்ல முடிவை இப்போதே எடுத்து, இன்றே அருகிலுள்ள கண் மருத்துவமனைக்குச் சென்று கண்தானம் செய்யும் படிவத்தை பூர்த்தி செய்யுங்களேன்!

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum