ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

+2
இளமாறன்
பிரசன்னா
6 posters

Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by பிரசன்னா Sun Jan 29, 2012 4:51 pm

கடந்த 2006 -ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்த நேரம். பா.ம.க.வுக்கு அதிக மான நெருக்கடியைக் கொடுத்ததாக அ.தி.மு.க. பிரமுகர் சி.வி. சண்முகம் கருதப்பட்டார். (இன்று வணிக வரித் துறை அமைச் சராக இருக்கிறார்!) மே 8-ம் தேதி அன்று அன்று சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. அவருடன் பேசிக்கொண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை வெட்டிச் சாய்த்தது

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Resize_20120128014722
உயிருக்குப் பயந்த நிலையில், பதுங்கித் தப்பித்தார் சண்முகம். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு உள்ளிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சி.வி.சண்முகம்.

ஆனால், அப்போது ஆளும் கட்சியான தி.மு.க.வில் பா.ம.க. அங்கம் வகித்ததால், விசாரணை சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தச் சமயத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். அதன் பிறகு இரண்டு முறை, 'சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் காரணமாக, அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கைக்கு மாறியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

இந்த நிலையில் திண்டிவனம் வந்த சி.பி.ஐ. போலீஸார் தங்களது விசாரணையைத் துரிதப் படுத்தினார்கள். கூலிப் படையைச் சேர்ந்த எட்டு பேரைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமதாஸ், அன்புமணி, சீனுவாசன் ஆகியோரை, சி.பி.ஐ. எந்த நேரமும் கைது செய்யலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், கடந்த 25-ம் தேதி ராமதாஸின் தம்பி சீனுவாசனை திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. கைது செய்து பரபரப்பைக் கூட்டியது. அவருடன், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதியையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அந்த செய்தி பரவியதும், திண்டிவனத்தில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால், திண்டிவனம் பதற்றமானது.

கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை முடிந்து, மாலை சுமார் 4.30 மணியளவில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

''ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டுக்கு கொலை வெறியோடு தாக்குதல் நடத்த வந்தவர்கள்தான். இப்போது கைதாகியிருப்பவர்கள்தான் அந்தக் கும்பலை சி.வி.சண்முகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள். அதிவிரைவில், இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த பெரிய தலைகளும் கைதாகும். ஆளும்கட்சித் தயவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாகத் தப்பித்து வந்தவர்களை இன்று சட்டம் கைது செய்கிறது. விரைவில், முருகானந்தம் கொலைக்குக் காரணமானவர்கள் கைது ஆவார்கள்'' என்கிறார்கள் சி.வி. சண்முகத்தின் விசுவாசிகள்.

இந்தச் சம்பவம் குறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ''சீனுவாசன் பா.ம.க.வைச் சேர்ந்தவர் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கருணாநிதி எனது சகோதரியின் மருமகன் தானே தவிர, அவருக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. வேறு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ''தன்னுடைய வழக்கில் இருந்து தப்பிக்கவே சீனுவாசன் காங்கிரஸில் இணைந்தார்'' என்றும் சொல்கிறார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மருத்துவர் ராமதாஸ் மீது இன்னொரு கொலை முயற்சி வழக்கும் பதிவாகி இருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்குச் சொந்தமான திண்டிவனம், கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிபவர் அரங்க. மாயக்கிருஷ்ணன். இந்தக் கல்லூரி நிர்வாகத்தில், சம்பந்தம் இல்லாமல் பா.ம.க.வினர் தலையிடுவதையும் மாணவர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதையும் இவர் தட்டிக்கேட்டாராம். இதனால், கடந்த 23-ம் தேதி கல்லூரியின் இயக்குநர் அரிய நாராயணன், அவரது உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர், 'நீ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடு. நாளை ஐயா வருகிறார். அவர் வந்தால், நீ உயிருடனே இருக்க மாட்டாய்’ எனக் கூறித் தன்னை அடித்ததாக அன்று இரவே ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் மாயக்கிருஷ்ணன். இந்தப் புகாரில் ராமதாஸையும் அவர் சேர்த்திருக்கிறார்.

இது சம்பந்தமாக, கடந்த 25-ந்தேதி ஒலக்கூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் புகார் குறித்து முழுமையாக விசாரணை நடத்த ஒலக்கூர் போலீசுக்கு, விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸுக்கு, சி.பி.ஐ. ஒரு பக்கம் வலைவிரித்து வரும் இந்த நேரத்தில், அவர்களைத் தமிழக போலீசார் முந்திக்கொள்வார்களோ என்ற பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

பா.ம.க. தரப்பில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வனிடம் பேசினோம். 'உதவிப் பேராசிரியர் அரங்க. மாயக்கிருஷ்ணனின் சொந்த ஊர் பண்ருட்டி. இதுல இருந்தே அந்த வழக்கோட பின்னணியை நீங்க தெரிஞ்சுக்கோங்க. மாணவர்களிடம் வன்முறையையும் தீவிரவாதத் தையும் தூண்டக்கூடிய வகையில் தொடர்ந்து அவர் பேசி வந்தார். இதற்காக ஏற்கனவே பலமுறை அவரை நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தபோது அவரது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து மன்னிப்பு கேட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை மன்னித்தது. இப்போது யாரோ ஒருவரின் தூண்டுதலால் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த உள்ளூர் அமைச்சர் ஒருவர்தான் புகாரில் ஐயாவின் பெயரையும் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

கடந்த ஐந்து நாட்களாக ஐயா கட்சி நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து வெளியூரிலேயே இருந்து வருகிறார். அப்படியிருக்கும் போது ஐயாவின் பெயரை இந்த வழக்கில் சேர்த்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக சேர்த்தார்களா..? மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கருணாநிதியை குற்றவாளியாக சேர்த்தார்களா..? அப்படி இருக்கும் போது எங்கள் மருத்துவர் ஐயாவுக்கு மட்டும் இது என்ன புது சட்டமா..? தமிழ்நாடு முழுக்க எங்கள் சின்ன ஐயாவின் பேச்சுக்குப் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கடுப்பில்தான் இப்படி பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

இந்த நெருக்கடியான சூழலில் 25-ம் தேதி ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, விழுப்புரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குப் போன் செய்து, 'இந்தப் பொய் வழக்கை எதிர்த்து நாம் போராட வேண்டும்'' என்று உத்தரவிட்டாராம். கைது நடவடிக்கைக்கு முன்பே பதற்றத்தை பா.ம.க.வினர் பற்றவைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by இளமாறன் Sun Jan 29, 2012 7:32 pm

புன்னகை புன்னகை அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by அசுரன் Sun Jan 29, 2012 8:25 pm

ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by சார்லஸ் mc Sun Jan 29, 2012 10:10 pm

அசுரன் wrote:ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?

கட்சிக்கு கட்சி தாவுவது எப்படி என்று இனி புதிதாக அரசியலுக்கு வரும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டியவா். சுயநல ஆதாயத்துக்காக எதையும் இழக்க தயங்காத தன்மான தலைவா்... அவரப்போயி... தமிழகத்திற்கு எதுவுமே செய்ய வில்லை என்கிறீா்களே... உங்கள நெனச்சா பாவமாயிருக்கு...


இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by அசுரன் Mon Jan 30, 2012 12:40 am

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?

கட்சிக்கு கட்சி தாவுவது எப்படி என்று இனி புதிதாக அரசியலுக்கு வரும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டியவா். சுயநல ஆதாயத்துக்காக எதையும் இழக்க தயங்காத தன்மான தலைவா்... அவரப்போயி... தமிழகத்திற்கு எதுவுமே செய்ய வில்லை என்கிறீா்களே... உங்கள நெனச்சா பாவமாயிருக்கு...

தப்புதாங்க... அதையெல்லாம் கவனிக்காம அவரை பற்றி சொன்னது தப்புதான். அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by நேரு Mon Jan 30, 2012 11:42 am

சிறைக்கு சென்றவர்கள் எல்லாம் தியாகிகள் இல்லை ஆனால் அரசியலில் எதிரியை வீழ்த்த கைது நடவடிக்க்யை தவிர வேறு என்ன இருக்க முடியும் இந்திய அரசியலில் கட்சி விட்டுகட்சி ம மாறுவது பா.ம .க மட்டும் இல்லை இடது சாரிகளும்தான்....................................


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by யினியவன் Mon Jan 30, 2012 12:02 pm

அவரு அரசியலுக்கு வந்தப்ப எம்புட்டு மரங்கள வெட்டி சாச்சார்?
அதெல்லாம் மக்கள் மறந்துட்டீங்களே? நன்றிகெட்ட ஜனங்கப்பா நாம.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Empty Re: இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum