Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
+2
அசுரன்
சார்லஸ் mc
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
யெகோவா என்பது ஒரு கூட்டுப் பெயர்.
தேவன் ஒருவரே என்பது நமது விசுவாசம். மூன்று ஆளத்துவங்கள் தேவனில் அடங்கியிருக்கின்றன என்று “கடவுளை அறிவோம்” என்ற தலைப்பின் கீழ் தெளிவாக பார்த்தோம். ஆகிலும் 3 தனிப்பட்ட தேவர்கள் என்று நாம் நம்பவில்லை. மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். தேவன் ஒருவரே என்பது நமது விசுவாசம்.
பிதாவாகிய தேவனுக்குள்ள சகல தன்மைகளும் குமாரனாகிய தேவனுக்கும் இருக்கின்றன. பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவரே பரிசுத்தாவி என்பதை வசனங்களே தெளிவாய் போதிக்கின்றன.
“யெகோவா” - என்ற எபிரேய வார்த்தையை “கர்த்தர்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “இருக்கிறவராகவே இருக்கின்றவர்” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது. கூட்டுப் பெயர் என்றால் தேவனின் மூன்று ஆளத்துவங்களும் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என இணைந்தே சொல்லபடுவது - “யெகோவா”.
பழைய ஏற்பாட்டில் கூட்டுப் பெயராகவே வருகின்ற யெகோவாவின் நாமங்கள், பெயர்கள்:
1. யெகோவா ரஃபா - உன்னை குணமாக்குகிற கர்த்தர் (யாத்திராகமம்: 15:26)
2. யெகோவா நிசி - கர்த்தரே நமது வெற்றி அல்லது கொடி (யாத்திராகமம்: 17:8-15)
3.யெகோவா ஷாலோம் - கர்த்தர் நமது சமாதானம் (நியாயாதிபதிகள்: 6:24)
4. யெகோவா ரா - கர்த்தர் நமது மேய்ப்பர் - (சங்கீதம்: 23:1-4)
5. யெகோவா சிட்க்கனு - கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார் (எரேமியா: 23:6)
6. யெகோவாயீரே - கர்த்தர் தேவைகளை பூர்த்தி செய்கிறவர் (ஆதியாகமம்: 22:14)
7. யெகோவா ஷம்மா - கர்த்தர் அங்கே இருக்கிறார் (எரேமியா : 48:35)
8. ஏல்-எலியோன் - கர்த்தர் உன்னதமானவர் (ஆதியாகமம்: 14:18-20
9. எல்-ஷடாய் - கர்த்தர் போதுமானவர் ; சர்வ வல்லவர் (ஆதியாகமம்: 17:1 ; யாத்திராகமம்: 6:3)
10. எல்-ஓலம் - சதாகாலமும் உள்ள தேவன் (ஆதியாகமம்: 21:33)
11. அடோனாய் - எஜமான் (யாத்திராகமம்: 23:17) கர்த்தராகிய ஆண்டவர்.
12. ஏலோகிம் - “ஏல்” என்ற வார்த்தையின் பன்மை இது. “தேவன்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வேதத்தில் கர்த்தரின் தன்மைகள் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. அத்தனை பெயர்களும் கூட்டுப் பெயர்களே.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:03 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
நல்ல தகவலுக்கு நன்றி சார்லஸ்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
“திரித்துவத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்து”
இயேசு கிறிஸ்து நித்தியமானவர். “அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அவர் தேனாயிருந்தார்.” (யோவான்: 1:1). உலக சிருஷ்டிப்புக்கு முன்னமே இருந்தார். எனவே, “லோகாஸ்” என்று அழைக்கப்படுகிறார்.
“லோகாஸ்” - என்பதின் அர்த்தம்:
“லோகாஸ்” - இது ஒரு கிரேக்க பதம். இதன் அர்த்தம்: “உள்ளான சிந்தை”. இதை தி.க.கட்சியினர் இதை “பகுத்தறிவு” என்பர்.
ஸ்தோயிக்கர் என்ற தத்துவஞானிகள்: “மனதில் உள்ள ஒரு எண்ணம்” “பேசுகிற ஒரு வார்த்தை” “சிந்தையை வெளிப்படுத்துதல்” “சொல்” ஆகிய இவற்றிற்கெல்லாம் “லோகாஸ்” என்ற பதத்தை உபயோகப்படுத்தினர்.
கிரேக்க பதம்: 'லோகாஸ்' - Logos - க்கு எபிரேய பதம்: 'டாபர் ' - Dabar
Dabar Yahweh - “டாபர் யாவே” என்றால் “கர்த்தருடைய வார்த்தை” என்று பொருள்.
Dabar Yahweh - “டாபர் யாவே” பற்றி மூன்று வித கருத்து :
1. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை குறிக்கும்.
2. செயலாக்கும் வார்த்தையை குறிக்கும்.
3. செயலாற்றும் ஆற்றலுடைய வல்லமையை குறிக்கும்.
யோவான்: 1:1 - “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”
யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”
வெளிப்படுத்தல்: 19:13 - “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே”
வார்த்தை என்பது “வெளிப்பாட்டின் வழி” “தொடர்பு கொள்வதற்கான வழி” தேவன் தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகளைக் கையாண்டார். அவருடைய வெளிப்பாட்டின் உச்சக்கட்டம் “இயேசுகிறிஸ்து”.
எபிரேயர்: 1:1 - “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்; இவரை சர்வத்திற்கும் சுதந்திரவாளியாய் நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்”
யோவான் இந்த “வார்த்தை” ஆளத்துவம் உடையது என்று கூறுகிறார். இந்த வார்த்தை தேவன் என்று கூறுகிறார். பவுல் இவரை (இயேசுவை) சிருஷ்டிகளின் முதற்பேறானவர் என்றழைக்கிறார்.
சிருஷ்டிப்பில் கிறிஸ்துவுக்கு பங்கு இருந்தது. பிதாவாகிய தேவன் வார்த்தையாலே உலக அண்ட சராசரத்தை உண்டாக்கினார். வேத வாக்கியங்களெல்லாம் கிறிஸ்துவை சிருஷ்டிக்கிறவராகவும் , பாதுகாப்பவராகவும், சிருஷ்டிப்பின் காரணகர்த்தாவுமாக கூறுகின்றன.
தேவன் மனிதனைப் படைக்கும் முன்பு, (IN GOD - HEAD) தேவனில் ஒரு ஆலோசனை நடத்தப்பட்டது. ஆதி: 1:26 - “நாம், நமது சாயலின்படி...” ஆதியாகமம்: 1 ல் தேவனுக்கு பயன்படுத்தப்பட்ட பன்மைப் பெயர் கிறிஸ்து சிருஷ்டிப்பின் வேலையில் பங்கு பெற்றார் என்பதை காட்டுகிறது.
நீதிமொழிகள்: 8:30 - “ நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்”
இயேசு கிறிஸ்து நித்தியமானவர். “அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அவர் தேனாயிருந்தார்.” (யோவான்: 1:1). உலக சிருஷ்டிப்புக்கு முன்னமே இருந்தார். எனவே, “லோகாஸ்” என்று அழைக்கப்படுகிறார்.
“லோகாஸ்” - என்பதின் அர்த்தம்:
“லோகாஸ்” - இது ஒரு கிரேக்க பதம். இதன் அர்த்தம்: “உள்ளான சிந்தை”. இதை தி.க.கட்சியினர் இதை “பகுத்தறிவு” என்பர்.
ஸ்தோயிக்கர் என்ற தத்துவஞானிகள்: “மனதில் உள்ள ஒரு எண்ணம்” “பேசுகிற ஒரு வார்த்தை” “சிந்தையை வெளிப்படுத்துதல்” “சொல்” ஆகிய இவற்றிற்கெல்லாம் “லோகாஸ்” என்ற பதத்தை உபயோகப்படுத்தினர்.
கிரேக்க பதம்: 'லோகாஸ்' - Logos - க்கு எபிரேய பதம்: 'டாபர் ' - Dabar
Dabar Yahweh - “டாபர் யாவே” என்றால் “கர்த்தருடைய வார்த்தை” என்று பொருள்.
Dabar Yahweh - “டாபர் யாவே” பற்றி மூன்று வித கருத்து :
1. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை குறிக்கும்.
2. செயலாக்கும் வார்த்தையை குறிக்கும்.
3. செயலாற்றும் ஆற்றலுடைய வல்லமையை குறிக்கும்.
யோவான்: 1:1 - “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”
யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”
வெளிப்படுத்தல்: 19:13 - “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே”
வார்த்தை என்பது “வெளிப்பாட்டின் வழி” “தொடர்பு கொள்வதற்கான வழி” தேவன் தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகளைக் கையாண்டார். அவருடைய வெளிப்பாட்டின் உச்சக்கட்டம் “இயேசுகிறிஸ்து”.
எபிரேயர்: 1:1 - “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்; இவரை சர்வத்திற்கும் சுதந்திரவாளியாய் நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்”
யோவான் இந்த “வார்த்தை” ஆளத்துவம் உடையது என்று கூறுகிறார். இந்த வார்த்தை தேவன் என்று கூறுகிறார். பவுல் இவரை (இயேசுவை) சிருஷ்டிகளின் முதற்பேறானவர் என்றழைக்கிறார்.
சிருஷ்டிப்பில் கிறிஸ்துவுக்கு பங்கு இருந்தது. பிதாவாகிய தேவன் வார்த்தையாலே உலக அண்ட சராசரத்தை உண்டாக்கினார். வேத வாக்கியங்களெல்லாம் கிறிஸ்துவை சிருஷ்டிக்கிறவராகவும் , பாதுகாப்பவராகவும், சிருஷ்டிப்பின் காரணகர்த்தாவுமாக கூறுகின்றன.
தேவன் மனிதனைப் படைக்கும் முன்பு, (IN GOD - HEAD) தேவனில் ஒரு ஆலோசனை நடத்தப்பட்டது. ஆதி: 1:26 - “நாம், நமது சாயலின்படி...” ஆதியாகமம்: 1 ல் தேவனுக்கு பயன்படுத்தப்பட்ட பன்மைப் பெயர் கிறிஸ்து சிருஷ்டிப்பின் வேலையில் பங்கு பெற்றார் என்பதை காட்டுகிறது.
நீதிமொழிகள்: 8:30 - “ நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்”
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:08 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
இயேசுவே யெகோவா
பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்தின் இரண்டாம் நபர் பல முறை தோன்றிய போதிலும் அவர் கிறிஸ்து என்று ஒரு போதும் அழைக்கப்படவில்லை. ஆனால், “குமாரன்” , “யெகோவாவின் தூதன்” என்னும் பெயர்களால் அவர் குறிப்பிடப்பட்டார். சங்கீதம்: 2:7 - ல் யெகோவா அவரை, அவருடைய குமாரனாக குறிப்பிடுகிறார். “தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்”.
கீழ்காணும் வசனங்களில் “யெகோவா” என்று குறிப்பிடப்படுபவர் “இயேசுவே”:
கர்த்தருடைய தூதன் என்னும் நிலைமையில் ஆகாருக்கு தாிசனமாகி சாராளிடத்தில் திரும்பி போகும்படி சொன்னதுடன் அவளின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும் என்றும் கூறினார். (ஆதியாகமம்: 16:7-14).
அதே தூதன் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுவதை தடுத்து நிறுத்தினான் (ஆதியாகமம்: 22:11-18).
அதே கர்த்தருடைய தூதன் லாபான் யாக்கோபுடன் அநீதியாய் நடந்து கொண்டபோது யாக்கோபை ஆசீர்வதிப்பதாக சொன்னான். (ஆதியாகமம்: 31:11,13).
அதேதூதன் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார். (ஆதியாகமம்: 3:2-5).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு பிரயாணம் பண்ணினபோது கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு முன் சென்றார். (யாத்திராகமம்: 14:19, 23:20, 32:34).
வனாந்தரத்தில் இஸ்ரவேலை பின் தொடர்ந்த கன்மலை கிறிஸ்துவே என்று பவுல் கூறுகிறார். (1கொரிந்தியர்: 10:4).
பிலேயாம் இஸ்ரவேலை சபிக்க வந்த போது கர்த்தருடைய தூதன் அவர்களை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(எண்ணாகமம்: 22:22-35).
கிதியோன் களத்தில் போரடிக்கையில் கர்த்தருடைய தூதன் தரிசனமாகி இஸ்ரவேலை மீதியானியரின் கையிலிருந்து விடுவிக்க அழைப்பு கொடுத்தார். மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் தரிசனமாகி சிம்சோனின் பிறப்பைப் பற்றி அறிவித்தான்.(நியாயாதிபதிகள்: 13:2-25).
தாவீது ஜனத்தொகை கணக்கிட்டபோது தண்டனை கொடுக்க அனுப்பப்பட்டவன் கர்த்தருடைய தூதன்.(1நாளாகமம்: 21:1-27).
எலியா யேசபேலுக்கு அஞ்சி ஓடியபோது சூரைச்செடியின் கீழ்படுத்திருந்தபோது போஜனம் கொடுத்தார் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:5-7).
எலியாவுடன் ஓரேபில் பேசினவர் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:9-19).
சகாியா: 1:11, 3:1 - ஆகிய வசனங்களில் கர்த்தருடைய தூதனைப்பற்றி வாசிக்கிறோம்.
மேலே கண்ட வேதவசனங்களின்படி, “யெகோவா” என்பதும் “கர்த்தருடைய தூதன்” என்பதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கும். இயேசுவே யெகோவா. யெகோவாவே இயேசு.
யெகொவா என்பது தனி நபரை குறிப்பதல்ல. அது ஒரு கூட்டுப் பெயர். அதற்குள் தேவனுடைய மூன்று ஆளத்துவங்கள் இருக்கிறது. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்தாவியாகிய தேவன் ஆகிய மூன்று ஆளத்துவங்கள் சோ்ந்த நிலைக்கு தான் “யெகோவா” என்று பெயர்.
குமாரன் என்பவர் வேலைக்காரன் அல்ல. குமாரன் என்றால் குமாரன்தான். வேதபுரட்டர்களுக்கு வேண்டுமானால் அவர்களுடைய பிள்ளைகளை வேலைக்காரர்களாக அடிமைகளாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலையில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் ஆண்டவர் இயேசுவை எந்த விதத்திலும் தவறாக சித்தரித்துக்காட்ட நாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது. வேதத்தின் மூலபாஷைக்கு விளக்கம் தெரியாத சில மூளையற்றவர்கள், வேத வசனத்தை ஒழுங்காக வாசித்து தியானம் செய்து ஆராயாத அறிவிலிகள், தவறான வாழ்க்கை வாழ்ந்து வழி மாறி போனவர்கள், யாருக்கோ எதற்க்கோ அடிமைப்பட்டு வேத வசனத்தை கலப்பாக போதித்து, வஞ்சிக்க நினைக்கும் கள்ள உபதேசகர்களின் கள்ள உபதேசங்களுக்கு விலகி ஜீவிக்க, நமது ஆத்துமாவை காத்துக் கொள்ளவே இந்த விழிப்புணர்வு பதிவு.
சில வேத புரட்டர்கள் கிறிஸ்துவின் நாமத்தை குலைச்சலாக்கும்படி, அவரது நாமத்தை மட்டுப்படுத்தும்படி இக்கடைசி நாட்களில் சில வஞ்சகர்கள் எழும்புவார்கள் என்று 2யோவான் நிரூபத்தில் வாசிக்கிறோம். எனவே, தேவபிள்ளைகள் கவனமாக இருந்து, வேதத்தை நன்கு வாசித்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது” (1கொரிந்தியர்: 1:18).
பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்தின் இரண்டாம் நபர் பல முறை தோன்றிய போதிலும் அவர் கிறிஸ்து என்று ஒரு போதும் அழைக்கப்படவில்லை. ஆனால், “குமாரன்” , “யெகோவாவின் தூதன்” என்னும் பெயர்களால் அவர் குறிப்பிடப்பட்டார். சங்கீதம்: 2:7 - ல் யெகோவா அவரை, அவருடைய குமாரனாக குறிப்பிடுகிறார். “தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்”.
கீழ்காணும் வசனங்களில் “யெகோவா” என்று குறிப்பிடப்படுபவர் “இயேசுவே”:
கர்த்தருடைய தூதன் என்னும் நிலைமையில் ஆகாருக்கு தாிசனமாகி சாராளிடத்தில் திரும்பி போகும்படி சொன்னதுடன் அவளின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும் என்றும் கூறினார். (ஆதியாகமம்: 16:7-14).
அதே தூதன் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுவதை தடுத்து நிறுத்தினான் (ஆதியாகமம்: 22:11-18).
அதே கர்த்தருடைய தூதன் லாபான் யாக்கோபுடன் அநீதியாய் நடந்து கொண்டபோது யாக்கோபை ஆசீர்வதிப்பதாக சொன்னான். (ஆதியாகமம்: 31:11,13).
அதேதூதன் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார். (ஆதியாகமம்: 3:2-5).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு பிரயாணம் பண்ணினபோது கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு முன் சென்றார். (யாத்திராகமம்: 14:19, 23:20, 32:34).
வனாந்தரத்தில் இஸ்ரவேலை பின் தொடர்ந்த கன்மலை கிறிஸ்துவே என்று பவுல் கூறுகிறார். (1கொரிந்தியர்: 10:4).
பிலேயாம் இஸ்ரவேலை சபிக்க வந்த போது கர்த்தருடைய தூதன் அவர்களை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(எண்ணாகமம்: 22:22-35).
கிதியோன் களத்தில் போரடிக்கையில் கர்த்தருடைய தூதன் தரிசனமாகி இஸ்ரவேலை மீதியானியரின் கையிலிருந்து விடுவிக்க அழைப்பு கொடுத்தார். மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் தரிசனமாகி சிம்சோனின் பிறப்பைப் பற்றி அறிவித்தான்.(நியாயாதிபதிகள்: 13:2-25).
தாவீது ஜனத்தொகை கணக்கிட்டபோது தண்டனை கொடுக்க அனுப்பப்பட்டவன் கர்த்தருடைய தூதன்.(1நாளாகமம்: 21:1-27).
எலியா யேசபேலுக்கு அஞ்சி ஓடியபோது சூரைச்செடியின் கீழ்படுத்திருந்தபோது போஜனம் கொடுத்தார் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:5-7).
எலியாவுடன் ஓரேபில் பேசினவர் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:9-19).
சகாியா: 1:11, 3:1 - ஆகிய வசனங்களில் கர்த்தருடைய தூதனைப்பற்றி வாசிக்கிறோம்.
மேலே கண்ட வேதவசனங்களின்படி, “யெகோவா” என்பதும் “கர்த்தருடைய தூதன்” என்பதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கும். இயேசுவே யெகோவா. யெகோவாவே இயேசு.
யெகொவா என்பது தனி நபரை குறிப்பதல்ல. அது ஒரு கூட்டுப் பெயர். அதற்குள் தேவனுடைய மூன்று ஆளத்துவங்கள் இருக்கிறது. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்தாவியாகிய தேவன் ஆகிய மூன்று ஆளத்துவங்கள் சோ்ந்த நிலைக்கு தான் “யெகோவா” என்று பெயர்.
குமாரன் என்பவர் வேலைக்காரன் அல்ல. குமாரன் என்றால் குமாரன்தான். வேதபுரட்டர்களுக்கு வேண்டுமானால் அவர்களுடைய பிள்ளைகளை வேலைக்காரர்களாக அடிமைகளாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலையில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் ஆண்டவர் இயேசுவை எந்த விதத்திலும் தவறாக சித்தரித்துக்காட்ட நாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது. வேதத்தின் மூலபாஷைக்கு விளக்கம் தெரியாத சில மூளையற்றவர்கள், வேத வசனத்தை ஒழுங்காக வாசித்து தியானம் செய்து ஆராயாத அறிவிலிகள், தவறான வாழ்க்கை வாழ்ந்து வழி மாறி போனவர்கள், யாருக்கோ எதற்க்கோ அடிமைப்பட்டு வேத வசனத்தை கலப்பாக போதித்து, வஞ்சிக்க நினைக்கும் கள்ள உபதேசகர்களின் கள்ள உபதேசங்களுக்கு விலகி ஜீவிக்க, நமது ஆத்துமாவை காத்துக் கொள்ளவே இந்த விழிப்புணர்வு பதிவு.
சில வேத புரட்டர்கள் கிறிஸ்துவின் நாமத்தை குலைச்சலாக்கும்படி, அவரது நாமத்தை மட்டுப்படுத்தும்படி இக்கடைசி நாட்களில் சில வஞ்சகர்கள் எழும்புவார்கள் என்று 2யோவான் நிரூபத்தில் வாசிக்கிறோம். எனவே, தேவபிள்ளைகள் கவனமாக இருந்து, வேதத்தை நன்கு வாசித்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது” (1கொரிந்தியர்: 1:18).
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:14 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
இயேசு குறித்த வாசகங்களை தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி சார்லஸ்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
யேசு தான் ஏகோவாவா இங்கு ஒரு வகை மக்கள் வேறு மாதிரி சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
மானிட அவதாரத்தில் இயேசுகிறிஸ்து
மானிட அவதாரத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் “குமாரன்” என்றும் “கர்த்தருடைய தூதன்” என்றும் குறிப்பிடப்பட்டார் என்று இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.
இந்த பகுதியில் மானிட அவதாரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
நித்தியத்திலும் மனித அவதாரத்திற்கு முன்பும் இருந்த கிறிஸ்து மானிட அவதாரமானார்.
யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி ...” ரோமர்: 8:3 - “மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக் கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை பாவத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார்.”
பிலிப்பியர்: 2:6,7 - “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் , தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். ”
எபிரேயர்: 2:14 - “ ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியான பிசாசனவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு...” அவர் அவதரித்தார்.
மத்தேயு: 1, 2 அதிகாரங்கள், லூக்கா: 1, 2 ஆகிய அதிகாரங்களில் இயேசுவின் பிறப்பின் செய்தியை நாம் வாசித்து அறியலாம்.
கொலோசெயர்: 1:15 - “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்”
மானிட அவதாரத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் “குமாரன்” என்றும் “கர்த்தருடைய தூதன்” என்றும் குறிப்பிடப்பட்டார் என்று இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.
இந்த பகுதியில் மானிட அவதாரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
நித்தியத்திலும் மனித அவதாரத்திற்கு முன்பும் இருந்த கிறிஸ்து மானிட அவதாரமானார்.
யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி ...” ரோமர்: 8:3 - “மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக் கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனை பாவத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார்.”
பிலிப்பியர்: 2:6,7 - “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் , தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். ”
எபிரேயர்: 2:14 - “ ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியான பிசாசனவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு...” அவர் அவதரித்தார்.
மத்தேயு: 1, 2 அதிகாரங்கள், லூக்கா: 1, 2 ஆகிய அதிகாரங்களில் இயேசுவின் பிறப்பின் செய்தியை நாம் வாசித்து அறியலாம்.
கொலோசெயர்: 1:15 - “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்”
1. மனித அவதாரத்தின் காரணங்கள்:
இயேசு மனிதனாக வந்ததற்கு பல காரணங்கள் உண்டு.
அ) தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வந்தார்:
தேவன் முற்பிதாக்களுக்கு (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) கொடுத்திருந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் புறஜாதிகளுக்கு இரக்கம் கிடைப்பதற்காகவும் வந்தார். ரோமர்: 9:8,9 - “...மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல; வாக்குதத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்த சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே”
ஆதியாகமம்: 3:15 - ல் முதல் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”
பழைய ஏற்பாட்டில் பல வாக்குத்தத்தங்களை பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டு பலி முறைகள், ஆசரிப்பு கூடாரம் இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பனையாக உள்ளன.
ஏசாயா: 7:14 - “ஆதலால், ஆண்டவர்தாமே உங்களுக்கொரு ஒரு அடையாளத்தை கொடுப்பார்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”
ஏசாயா: 9:6 - “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்., கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா , சமாதானப் பிரபு என்னப்படும்”
சங்கீதம்: 22:1 - “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமலும், ஏன் தூரமாயிருக்கிறீர்?”
சங்கீதம்: 41:9 - “என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.”
மேலே கண்ட பழைய ஏற்பாட்டு வேத வசனங்கள் இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி தெளிவாக நமக்கு போதிக்கின்றன.
இயேசு மனிதனாக வந்ததற்கு பல காரணங்கள் உண்டு.
அ) தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வந்தார்:
தேவன் முற்பிதாக்களுக்கு (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) கொடுத்திருந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் புறஜாதிகளுக்கு இரக்கம் கிடைப்பதற்காகவும் வந்தார். ரோமர்: 9:8,9 - “...மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல; வாக்குதத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்த சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே”
ஆதியாகமம்: 3:15 - ல் முதல் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”
பழைய ஏற்பாட்டில் பல வாக்குத்தத்தங்களை பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டு பலி முறைகள், ஆசரிப்பு கூடாரம் இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பனையாக உள்ளன.
ஏசாயா: 7:14 - “ஆதலால், ஆண்டவர்தாமே உங்களுக்கொரு ஒரு அடையாளத்தை கொடுப்பார்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”
ஏசாயா: 9:6 - “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்., கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா , சமாதானப் பிரபு என்னப்படும்”
சங்கீதம்: 22:1 - “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமலும், ஏன் தூரமாயிருக்கிறீர்?”
சங்கீதம்: 41:9 - “என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.”
மேலே கண்ட பழைய ஏற்பாட்டு வேத வசனங்கள் இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி தெளிவாக நமக்கு போதிக்கின்றன.
தொடரும்...
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:19 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
இளமாறன் wrote:யேசு தான் ஏகோவாவா இங்கு ஒரு வகை மக்கள் வேறு மாதிரி சொல்லி கொண்டு இருக்கிறார்கள்![]()
![]()
ஆம் ,யெகொவா ஏசுவிற்கு மேலானவர் என்று குறிப்பிடுகின்றனர் ,பைபிள் இல் கூட ஒவ்வொரு பிரிவினரும் தேவன் ,கர்த்தர் என்று மாற்றியுள்ளனர் ,எது உண்மயோ?
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
ஒரு விவசாயி பயிரிட்ட பயிர் பார்ப்போர் கண்களுக்கு தெரிவதில்லை. களைகள்தான் முதலில் தெரியும்.
உண்மையான பொருள் ஒன்று மார்க்கெட்டில் அதிக விற்பனையை தொட்டால் அதற்கு மாற்றாக போலிகள் சந்தைக்கு வருவது சகஜமே.
ஒன்றை நீங்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.
கிறிஸ்து தெய்வமல்ல என்பவன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவ மதத்தை சாராதவன். அவன் நிச்சயம் வேறு மதத்தை சார்ந்தவனாக மட்டுமே இருக்க முடியும்.
யாரோ மதப் பிரச்சினையை தூண்டி விடும்படியும், கிறிஸ்தவர்களின் மனதையும், மதத்தையும் புண்படுத்தும்படியாகவும், வேதனையை ஏற்படுத்தும்படியாவும் மறைமுகமாக செயல்பட்டு வருவது உங்கள் இருவரது கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
கிறிஸ்துவின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை, கிறிஸ்துவை பிடிக்காதவர்கள், தங்களுக்குள் இருக்கும் பகையை, கோபத்தை இப்படித்தான் தாறுமாறாக எதையாவது மக்கள் நடுவே எழுதி, குழப்பி விட்டு கொண்டு இருப்பார்கள். நாம் அவர்களுக்கு செவி கொடுக்கக் கூடாது.
கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன் என்று பைபிள் தெள்ளத் தெளிவாக 2யோவான் நிரூபத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் வேதத்தை அறைகுறையாக படித்துவிட்டு, நுனிப்புல் மேய்ந்து விட்டு அவர் கடவுளல்ல; அவரை வணங்கக் கூடாது என்றெல்லாம் தூ் உபதேசம் செய்வார்கள்.
திரு.இளமாறன் அவர்களும், திரு.ராஜ் அருண் அவர்களும் நான் இதே திரியில் ஆரம்பத்தில் இருந்து எழுதி வரும் கட்டுரைகளை வாசிக்கவில்லையென கருதுகிறேன்.
நீங்கள் இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதிலை விளக்கமாக வேத வார்த்தைகளுடன் தெளிவாக எழுதியுள்ளேன்.
தயவு செய்து தாங்கள் இருவரும் அதை மீண்டும் ஒருமுறை வாசிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த பகுதியில் எழுதி வரும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் இருவருடைய பின்னூட்டங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
உண்மையான பொருள் ஒன்று மார்க்கெட்டில் அதிக விற்பனையை தொட்டால் அதற்கு மாற்றாக போலிகள் சந்தைக்கு வருவது சகஜமே.
ஒன்றை நீங்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.
கிறிஸ்து தெய்வமல்ல என்பவன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவ மதத்தை சாராதவன். அவன் நிச்சயம் வேறு மதத்தை சார்ந்தவனாக மட்டுமே இருக்க முடியும்.
யாரோ மதப் பிரச்சினையை தூண்டி விடும்படியும், கிறிஸ்தவர்களின் மனதையும், மதத்தையும் புண்படுத்தும்படியாகவும், வேதனையை ஏற்படுத்தும்படியாவும் மறைமுகமாக செயல்பட்டு வருவது உங்கள் இருவரது கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
கிறிஸ்துவின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை, கிறிஸ்துவை பிடிக்காதவர்கள், தங்களுக்குள் இருக்கும் பகையை, கோபத்தை இப்படித்தான் தாறுமாறாக எதையாவது மக்கள் நடுவே எழுதி, குழப்பி விட்டு கொண்டு இருப்பார்கள். நாம் அவர்களுக்கு செவி கொடுக்கக் கூடாது.
கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன் என்று பைபிள் தெள்ளத் தெளிவாக 2யோவான் நிரூபத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் வேதத்தை அறைகுறையாக படித்துவிட்டு, நுனிப்புல் மேய்ந்து விட்டு அவர் கடவுளல்ல; அவரை வணங்கக் கூடாது என்றெல்லாம் தூ் உபதேசம் செய்வார்கள்.
திரு.இளமாறன் அவர்களும், திரு.ராஜ் அருண் அவர்களும் நான் இதே திரியில் ஆரம்பத்தில் இருந்து எழுதி வரும் கட்டுரைகளை வாசிக்கவில்லையென கருதுகிறேன்.
நீங்கள் இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதிலை விளக்கமாக வேத வார்த்தைகளுடன் தெளிவாக எழுதியுள்ளேன்.
தயவு செய்து தாங்கள் இருவரும் அதை மீண்டும் ஒருமுறை வாசிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த பகுதியில் எழுதி வரும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் இருவருடைய பின்னூட்டங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:22 pm; edited 1 time in total
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)
அசுரன் wrote:இயேசு குறித்த வாசகங்களை தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி சார்லஸ்
மிக்க நன்றிகள் நண்பரே.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உன் பெயரே கவிதைதான்…!!
» பிதா!!
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உன் பெயரே கவிதைதான்…!!
» பிதா!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|