Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
3 posters
Page 1 of 1
உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
கட்டுமானத் தொழில் செய்யவும், ஹோட்டலில் பணி புரியவும், சாலையோரங்களில் பானிபூரி, பேல்பூரி விற்கவும் என்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றது வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெருங்கும்பல். இப்போது கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு புதிய கும்பல் விஷக்கிருமிகளாக தமிழ்நாட்டில் பரவிக்கொண்டிருக்கிறது என்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி!
![உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்! Blackmoney](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2012/january/25.01.12/blackmoney.jpg)
ஒவ்வொரு பேருந்திலும், ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டே வட மாநில இளைஞர்கள் பயணம் செய்கின்ற காட்சிகள் இப்போது தமிழகத்தில்... அதுவும் குறிப்பாக சென்னையில் மிக சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.
தமிழகத்தில் தமிழர்களே கூட அவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டு பயணிப்பது இல்லை. இந்நிலையில் வட இந்தியர்கள் மூலம் பரவும் கள்ள நோட்டு அபாயம் என்பது, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத கும்பல் இச்சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நேபாளத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ""இந்திய பொருளாதாரத்தை சீர்குலைய வைக்க, கள்ள நோட்டுகள் நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அதை நேபாளம் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கள்ளநோட்டு சதி, தேசிய புலனாய்வு முக மையான என்.ஐ.ஏ.வின் கவனத் திற்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இந்தச் சூழலில்தான் புதுவையிலும், தமிழகத்திலும் கள்ள நோட்டு ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதல் கள்ள நோட்டு குற்றவாளி முகமது இஸ்மாயில் ஷேக் எப்படி சிக்கினாôன்?
புதுவை நுழைவாயிலில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவ மனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் ஜெயக்குமா ரிடம் விசாரித்தோம்...
""எழுபது ரூபாய்க்கு பழம் வாங்கிட்டு அந்த ஆளு ஆயிரம் ரூபா நோட்டை கொடுத்தாரு. என்கிட்ட சில்லறை இல்லைன்னு என் அக்கா மகன் சதீஷ்கிட்ட கொடுத்து சில்லறை மாத்திட்டு வரச்சொன்னேன். அவன்தான் நோட்டைப் பாத்து சந்தேகப் பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தான். அது தெரிஞ்சு இஸ்மாயில் ஷேக் ஓடப்பார்த் தான். சதீஷும், ஆட்டோ டிரைவர் சாமிநாதனும்தான் "திருடன்... திருடன்...'னு கத்திக் கிட்டே ஓடிப்போய் புடிச்சாங்க. அப்புறம் போலீஸ்ல ஒப்படைச்சோம்'' என்றார் ஒரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்த பெருமிதத்துடன்.
இஸ்மாயில் ஷேக்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் எஸ்.எஸ்.பி. சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் பேசியபோது...
""விசாரணையில ஜார்கண்ட் மாநிலத்திலேருந்து நாங்க ஆறுபேர் வந்ததா சொன்னான். அவன் கூட்டாளி ஜமேதர் ஷேக் தான் கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்ததா சொன்னான். ஜனவரி 14-ந் தேதி கள்ள நோட்டைக் கொடுத்து ரயில் டிக்கெட் எடுத்துக்கிட்டு இந்தக் கும்பல் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. அந்த இஸ்மாயில் ஷேக் சட்டையிலயும், ஜட்டிக்குள்ளயும் 55,000 ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் வெச்சிருந்தான்.
அவன் கூடவந்த கூட்டாளிங்க ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல் கரீம், மிட்டு ஷேக் ஆகியோர் தலைமறைவா இருக்கா னுங்க. மூன்றுவிதமா குழு அமைச்சு வலை வீசி தேடிக்கிட்டிருக் கோம். இஸ்மாயில் ஷேக்கோட மொபைல் போன்ல இருக்கிற நம்பர்களை வெச்சுப் பார்க்கும்போது இது ஒரு பெரிய நெட் ஒர்க் மாதிரி தெரியுது. அவன்கிட்ட ஒரு போலி வாக்காளர் அட்டை இருந்தது. அதுல சென்னை, சிட்லபாக்கம், பாரதி நகர்னு முகவரி இருந்தது. அந்த முகவரியை சிட்லபாக்கம் போலீஸாருக்குக் கொடுத்து உஷார்படுத்தினோம். அதை வெச்சுத்தான் சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் கர்ணனும், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோதண்டராமனும், இக்பால் ஷேக்கோட நெருங்கிய கூட்டாளி யான இஸ்ரா உல் ஷேக்கையும் சைதாப்பேட்டையில இருந்த ராகுல் முகமதுவையும் உடனடியாக கைது செய்தனர். பல கந்துவட்டிக் காரர்களும் முக்கிய வி.ஐ.பி.க்களும் இதில் சிக்குவார்கள்'' என்றனர்.
சிதம்பரம், பாபநாசம் போன்ற ஊர்களில், டாஸ்மாக் வருமானத்தை பேங்க்கில் போடச் சென்றபோது அதில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளநோட்டுக் கும்பல் எல்லா ஊர்களுக்கும் கட்டிடத் தொழிலாளிகள் போன்ற தோற்றத்தில் சென்றுள்ளார்களா? என்று சகல கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முக்கியமாக மூன்று அடையாளங்கள் கள்ளநோட்டில் இருக்காது.
ஒன்று, ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் பூவிதழ் போன்று சிறு வட்டம் இருக்கும். இது ரூபாயின் இரு பக்கங்களிலும் இருவித வண்ணத்தைக் காட்டும். இதை ரிசர்வ் வங்கியினர் நிறம் மாறும் மை என்று குறிப்பிடுவார்கள். இரண்டாவது, நோட்டின் குறுக்கே இருவித வண்ணங்களில் மறைந்து மறைந்து காணப்படும் பாதுகாப்பு இழை. மூன்றாவது நீர்க்குறியீடு. மகாத்மா காந்தியின் அருகே நீரெழுத்தில் ரூபாயின் மதிப்பு இருக்கும். இந்த மூன்றையும் கவனித்துப் பார்த்து ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய்களை வாங்கும்படி பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-எம்.பி.காசி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
![உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்! Blackmoney](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2012/january/25.01.12/blackmoney.jpg)
ஒவ்வொரு பேருந்திலும், ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் சத்தமாக இந்தியில் பேசிக்கொண்டே வட மாநில இளைஞர்கள் பயணம் செய்கின்ற காட்சிகள் இப்போது தமிழகத்தில்... அதுவும் குறிப்பாக சென்னையில் மிக சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.
தமிழகத்தில் தமிழர்களே கூட அவ்வளவு சத்தமாகப் பேசிக்கொண்டு பயணிப்பது இல்லை. இந்நிலையில் வட இந்தியர்கள் மூலம் பரவும் கள்ள நோட்டு அபாயம் என்பது, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத கும்பல் இச்சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நேபாளத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ""இந்திய பொருளாதாரத்தை சீர்குலைய வைக்க, கள்ள நோட்டுகள் நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அதை நேபாளம் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கள்ளநோட்டு சதி, தேசிய புலனாய்வு முக மையான என்.ஐ.ஏ.வின் கவனத் திற்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இந்தச் சூழலில்தான் புதுவையிலும், தமிழகத்திலும் கள்ள நோட்டு ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதல் கள்ள நோட்டு குற்றவாளி முகமது இஸ்மாயில் ஷேக் எப்படி சிக்கினாôன்?
புதுவை நுழைவாயிலில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவ மனை எதிரே பழக்கடை வைத்திருக்கும் ஜெயக்குமா ரிடம் விசாரித்தோம்...
""எழுபது ரூபாய்க்கு பழம் வாங்கிட்டு அந்த ஆளு ஆயிரம் ரூபா நோட்டை கொடுத்தாரு. என்கிட்ட சில்லறை இல்லைன்னு என் அக்கா மகன் சதீஷ்கிட்ட கொடுத்து சில்லறை மாத்திட்டு வரச்சொன்னேன். அவன்தான் நோட்டைப் பாத்து சந்தேகப் பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தான். அது தெரிஞ்சு இஸ்மாயில் ஷேக் ஓடப்பார்த் தான். சதீஷும், ஆட்டோ டிரைவர் சாமிநாதனும்தான் "திருடன்... திருடன்...'னு கத்திக் கிட்டே ஓடிப்போய் புடிச்சாங்க. அப்புறம் போலீஸ்ல ஒப்படைச்சோம்'' என்றார் ஒரு கள்ள நோட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்த பெருமிதத்துடன்.
இஸ்மாயில் ஷேக்கை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் எஸ்.எஸ்.பி. சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் பேசியபோது...
""விசாரணையில ஜார்கண்ட் மாநிலத்திலேருந்து நாங்க ஆறுபேர் வந்ததா சொன்னான். அவன் கூட்டாளி ஜமேதர் ஷேக் தான் கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்ததா சொன்னான். ஜனவரி 14-ந் தேதி கள்ள நோட்டைக் கொடுத்து ரயில் டிக்கெட் எடுத்துக்கிட்டு இந்தக் கும்பல் தமிழ்நாட்டுக்குள்ள வந்திருக்கு. அந்த இஸ்மாயில் ஷேக் சட்டையிலயும், ஜட்டிக்குள்ளயும் 55,000 ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் வெச்சிருந்தான்.
அவன் கூடவந்த கூட்டாளிங்க ஜமேதார் ஷேக், ஷபீக், அப்துல் கரீம், மிட்டு ஷேக் ஆகியோர் தலைமறைவா இருக்கா னுங்க. மூன்றுவிதமா குழு அமைச்சு வலை வீசி தேடிக்கிட்டிருக் கோம். இஸ்மாயில் ஷேக்கோட மொபைல் போன்ல இருக்கிற நம்பர்களை வெச்சுப் பார்க்கும்போது இது ஒரு பெரிய நெட் ஒர்க் மாதிரி தெரியுது. அவன்கிட்ட ஒரு போலி வாக்காளர் அட்டை இருந்தது. அதுல சென்னை, சிட்லபாக்கம், பாரதி நகர்னு முகவரி இருந்தது. அந்த முகவரியை சிட்லபாக்கம் போலீஸாருக்குக் கொடுத்து உஷார்படுத்தினோம். அதை வெச்சுத்தான் சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் கர்ணனும், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோதண்டராமனும், இக்பால் ஷேக்கோட நெருங்கிய கூட்டாளி யான இஸ்ரா உல் ஷேக்கையும் சைதாப்பேட்டையில இருந்த ராகுல் முகமதுவையும் உடனடியாக கைது செய்தனர். பல கந்துவட்டிக் காரர்களும் முக்கிய வி.ஐ.பி.க்களும் இதில் சிக்குவார்கள்'' என்றனர்.
சிதம்பரம், பாபநாசம் போன்ற ஊர்களில், டாஸ்மாக் வருமானத்தை பேங்க்கில் போடச் சென்றபோது அதில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளநோட்டுக் கும்பல் எல்லா ஊர்களுக்கும் கட்டிடத் தொழிலாளிகள் போன்ற தோற்றத்தில் சென்றுள்ளார்களா? என்று சகல கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முக்கியமாக மூன்று அடையாளங்கள் கள்ளநோட்டில் இருக்காது.
ஒன்று, ரூபாய் நோட்டின் இடது ஓரத்தில் பூவிதழ் போன்று சிறு வட்டம் இருக்கும். இது ரூபாயின் இரு பக்கங்களிலும் இருவித வண்ணத்தைக் காட்டும். இதை ரிசர்வ் வங்கியினர் நிறம் மாறும் மை என்று குறிப்பிடுவார்கள். இரண்டாவது, நோட்டின் குறுக்கே இருவித வண்ணங்களில் மறைந்து மறைந்து காணப்படும் பாதுகாப்பு இழை. மூன்றாவது நீர்க்குறியீடு. மகாத்மா காந்தியின் அருகே நீரெழுத்தில் ரூபாயின் மதிப்பு இருக்கும். இந்த மூன்றையும் கவனித்துப் பார்த்து ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய்களை வாங்கும்படி பொதுமக்களையும், வியாபாரிகளையும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-எம்.பி.காசி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT. ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
இதில் என்ன கொடுமை என்றால் இதனால் பாதிக்கப்படுவது
நிறைய அப்பாவி வட இந்தியர்கள் குடும்பத்துடன் கட்டிடத்
தொழிலிலும், ரோடு பணியிலும் இருப்பவரே.
நிறைய அப்பாவி வட இந்தியர்கள் குடும்பத்துடன் கட்டிடத்
தொழிலிலும், ரோடு பணியிலும் இருப்பவரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கள்ள நோட்டு...!
» கள்ள நோட்டு போலிஸ்...
» ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
» நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்
» 25 லட்சம் கள்ள நோட்டு: பாகிஸ்தானியர் நேபாளத்தில் கைது
» கள்ள நோட்டு போலிஸ்...
» ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
» நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்
» 25 லட்சம் கள்ள நோட்டு: பாகிஸ்தானியர் நேபாளத்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|