ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

+2
இளமாறன்
இரா.பகவதி
6 posters

Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by இரா.பகவதி Thu Jan 26, 2012 12:20 pm

சென்னை : எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் மெயின் கேட்டை நேற்று காலை 6.30 மணி க்கு செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது அதிமுக கரை வேட்டி கட்டிய 54 வயதுடைய ஒருவர் பை யுடன் உள்ளே சென்றார். சமாதியை சுற்றி பார்த்து விட்டு சமாதியின் பின்புறம் புல்தரையில் உட்கார்ந்தார்.

திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:

என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.

அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்


தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.

இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.

‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’

இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by இளமாறன் Thu Jan 26, 2012 12:28 pm

அதி முக தலைவரிடம் நேரடியாக மனு கொடுக்க போய் இருப்பாரோ சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by இரா.பகவதி Thu Jan 26, 2012 1:03 pm

இருக்கலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by கே. பாலா Thu Jan 26, 2012 2:50 pm

இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் !.. சோகம்


Last edited by கே. பாலா on Thu Jan 26, 2012 4:20 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by பது Thu Jan 26, 2012 3:59 pm

அழுகை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by பிரசன்னா Thu Jan 26, 2012 4:02 pm

கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் .. சோகம்

உங்களின் கருத்து மிகசரியானது... ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by கே. பாலா Thu Jan 26, 2012 4:51 pm

பிரசன்னா wrote:
கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் .. சோகம்

உங்களின் கருத்து மிகசரியானது... ஆமோதித்தல்
புன்னகை நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by முஹைதீன் Thu Jan 26, 2012 4:56 pm

இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும் தமிழகத்தின் பலவீனமும் !..  எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை 440806


உண்மைதான்  எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை 440806
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை Empty Re: எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum