ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது

Go down

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Empty ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது

Post by சிவா Thu Jan 26, 2012 11:26 am



செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில், இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ., இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது. திண்டிவனத்தில், அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று, பா.ம.க.,வினர் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது, சண்முகம், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயரை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி, முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கோபி, 28, இளஞ்செழியன், 32, தாளைமேடு பகுதியைச் சேர்ந்த குமரன், 37, நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை, சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். பின், அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று திண்டிவனத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி சீனுவாச கவுண்டர்,65, அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி,50, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நேற்று மாலை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை, 15 நாள் கோர்ட் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். "உடல்நிலை சரியில்லாததால், தங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்' என, நீதிபதி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இருவரும், தங்களை கடலூர் சிறையில் அடைக்கும்படி கோரினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை புழல் சிறையில் உள்ளதால், அங்கு தான் செல்ல வேண்டும் என, நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி சீனுவாச கவுண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது கைது, பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமின் மனு தள்ளுபடி: இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நடராஜன், கோபி, குமரன், இளஞ்செழியன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜாமின் கோரி, செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று, மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்னும் முடிவு பெறாததால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., வழக்கறிஞர் இளஞ்செழியன் வாதிட்டார். அதை ஏற்று, நீதிபதி சிவானந்த ஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தைலாபுரத்தில் சி.பி.ஐ., நுழையுமா? ராமதாஸ் ஆலோசனை: அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், அடுத்தடுத்து கைது படலம் அரங்கேறி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்திலும் சி.பி.ஐ., நுழையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஒசூரில் தங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, திண்டிவனத்தில் அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் படுகொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனு கவுண்டர் என்ற சீனிவாசன், அக்கட்சி முன்னாள் தலைமை நிலைய செயலர் கருணாநிதி ஆகியோர், நேற்று சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கின் வேகம் அதிகரித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வழக்கு, தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சி.பி.ஐ., குழு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நுழையலாம் என கூறப்படுகிறது. சி.பி.ஐ., மூலம் கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பா.ம.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். ஆனால், கருணாநிதி திண்டிவனம் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார். இவ்வழக்கில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, ராமதாஸ் நேற்று அங்கு சென்றிருந்தார். கைது குறித்த தகவல் கேள்விபட்டவுன், இக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், ஒசூரில் "ரூம்' போட்டு ராமதாஸ், பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேபோன்று, சென்னையில் அன்புமணியும், தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமலர்


ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
» பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum